வலி கொண்டு துடித்திடும்
என் இதயத்தை
தென்றல்போல் அரவணைக்க
ஓடோடிவா அன்பே....!
மேகங்கள் ஒன்றுக்குள்
ஒன்று மறையும் போது
உன்னுள் என்னைப் புதைத்த
நினைவுகள் நிழலோடியது
மனக் கண்களில்...!
மழைத்துளிகள் மண்ணை
அரவணைக்க படையெடுக்கின்றன
வானவில்லை குடையாக்கி
மேள தாளங்களோடு
நொடியில் மின்னலடித்தது-நீயும்
நானும் கைகோர்த்து மழையில்
நீராடியது....!
விடியும் விடியல்கள் - உன்
நினைவுகளைப் பறைசாற்றிச்செல்ல
என் இதயம் வடிக்கிறது
ஊமை ராகங்கள்....!