வெளிச்சமில்லா பிரபஞ்ச அறை
பால்நிலா ஒழுகியதில்
மீன்கள் தோன்றின.
கருவறை காலம் முடிந்தபின்
பிரபஞ்சம் விட்டு மீன்கள் அகன்றது
இருளில் மூழ்கியது
மொத்த உலகம்
அகன்ற மீன்கள்
இருளில் நீந்தின
செய்வதறியா உலகம்
மீன்களை விற்க முடிவெய்தியது.
கடை விரித்தது உலகம்
வாங்குவோர் விலை பேசினர்
கோடியல்ல லட்சமல்ல
மடிந்தது மலிவாக
விற்ற உலகம்
வேதனையை அடைத்துக் கொண்டது
மலிவாக விற்கப்பட்ட காரணமா?
பிரிவின் வலியா?
பிகு: கோடியை அள்ளித்தரும் திருப்பூர் மாநகராட்சியில் ரூபாய் நாற்பதுக்கு ஒரு பிஞ்சுக்குழந்தை விற்கப்பட்டது..