உலகச்செய்திகள் 22-11-2008
01.பெனசிரை தீர்த்து கட்ட பெண் மனித வெடிகுண்டு
இஸ்லாமாபாத் :பெனசிரை தீர்த்துக் கட்ட, பெண் மனித வெடிகுண்டு அனுப்பப் பட்டுள்ளதாக அவருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
02.பாதுகாப்பற்ற ஊசியால் 13 லட்சம் பேர் பலி
ஜெனிவா :பாதுகாப்பற்ற ஊசிகளால், ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
03.புலிகளுடன் பேச்சு நடத்த தயார் இலங்கை அரசு மீண்டும் அறிவிப்பு
கொழும்பு :விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதலில் ஈடுபட்டாலும், அவர்களுடன் அமைதிப் பேச்சுக்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
04.பாரம்பரியம் மாறாமல் இருக்க வினோத முடிவு மருமகளுக்கு விந்தணு தானம் செய்கிறார் மாமனார்
லண்டன் :பிரிட்டனில், 75 வயது தந்தை ஒருவர், குடும்ப வாரிசுக்காக, சொந்த மருமகளுக்கு விந்தணு தானம் செய்ய உள்ளார்.
05.இலங்கை விமான படைக்கு பெருத்த பின்னடைவு புலிகள் தாக்குதல் எதிரொலி
கொழும்பு :இலங்கையில் அனுராதபுரம் விமான நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலால், விமானப் படைக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
06.விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி
கேப் கெனரவல் :அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, டிஸ்கவரி விண்கலத்தை இந்திய நேரப்படி நேற்று இரவு 9.08 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்பட்ட 2 கோĩ
விளையாட்டு பொம்மைகள் என்றாலே நம் நினைவுக்கு உடனே வருவது சீனாதான். விதவிதமான விளையாட்டு பொருட்களை தயாரித்து குறைந்த விலையில் விற்பதில் அவர்களை மிஞ்ச முடியாது. அனால் சமீப காலமாக அந்நாட்டு பொம்மைகள்தான் அதிக அளவில் அமெரிக்காவால் திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றன. காரணம் என்னவென்றால், சீன தயாரிப்பு பொம்மைகளில் அடித்திருக்கும் பெயின்ட்டில் காரீயம் என்ற நஞ்சு பொருள் அதிக அளவில் கலந்திருப்பதாலும், பொம்மைகளில் வைக்கப்பட்டிருக்கும் காந்தத்தாலும், குழந்தைகளின் உடல் நலத்திற்கு அது கேடு விளைவிக்கும் என்கிறார்கள். சமீபத்தில் உலகின் மிகப்பெரிய பொம்மை தயாரிப்பாளர்களான அமெரிக்காவின் மெட்டல் கம்பெனி, மூன்று தடவைகளில் 2 கோடியே 10 லட்சம் சீன பொம்மைகளை வேண்டாம் என்று சீனாவிற்கே திருப்பி அனுப்பி இருக்கிறது.
thanks: dinamalar