-
பௌர்ணமி நிலவு!
சட்டையின்றி சபலமுமின்றி,
கெட்டஎண்ணம் துளியுமின்றி,
மட்டமான மனிதனைக்கூட,
மட்டில்லாத மகிழ்ச்சியிலாழ்த்தி,
திட்டமிட்டபடி இன்றொருநாள்,
எட்டுத்திக்குமின்பம் இயம்பி,
கட்டிலின்மேல் காதலன்காணும்,
கட்டழகியின் அழகோ தோற்க,
வட்டமாகச் சிரிக்கின்றதே,
மொட்டை மாடி முழுநிலா...
-
நிலாவின் மேல் இவ்வலோ காதலா.
ரொம்ப அளவாக ரசித்து எழுதிய அழகான நிலா கவிதை. அருமை.
-
-
லெனின், ஓவியா மற்றும் பாவூர் பாண்டி விருப்பங்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.. தங்கள் நிலாப் படைப்பு அந்த நிலவை விட அழகாக இருக்கிறது...
-
இரவும் நிலவும் தகுந்த தருணங்களில் எப்போதுமே அழகுதான்!!!
அழகான வரிகள் வசிகரிக்கின்றன!! அருமை.