-
தினமும் ஒரு பிரபலம்
[b]ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலத்தை பற்றி இங்கே பேசலாம்,
விவாதிக்கலாம்.
அவர் கலைத்துறை,அரசியல்,மருத்துவம், இலக்கியம்,
பொதுசேவை,இசை என எந்த துறையை சார்ந்தவராகவும் இருக்கலாம்
24/09/03
இந்த பிரபலங்களின் வரிசையின் தொடக்கமாக
திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது.
1916'ல் கோயில்கள் நகரமான மதுரையில் வீணை கலைஞர் சண்முகவடிவுக்கு பிறந்தவர்.
இவரது முதல் ரெக்கார்ட் அவரது 10 வயதிலேயே வெளிவந்தது
சதாசிவத்தை மணந்து இரு
பிரபலங்களும் ஆதர்ஸ தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்
இன்றும் நாம் தினமும் காலையில் சுப்ரபாதமாக கேட்பது இவர் குரல் தான்.
இசையுலகின் பல விருதுகள் இவரை தேடி வந்தன
உயரிய பாரத ரத்னா விருதும் பெற்ற பெருமையுடையவர்
மகாத்மா காந்தி அவர்கள் இவர் பாடிய வைஷ்னவ ஜனதோ வை மிகவும் ரசிப்பாராம்
1954'ல் பத்மபூஷன் விருது பெற்றவர்
1966'ல் ஐக்கிய நாடு சபையில் பாடியவர்
1968'ல் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது பெற்ற முதல் பெண்மனி இவரே.
1975'ல் பத்மவிபூஷன் என சொல்லிக்கொண்டே போகலாம்
இந்த இசையரசியின் புகழ் உலகில் இசை உள்ள வரைக்கும் நிலைத்து இருக்கும்
ராஜ்
[/color]
-
தன்ராஜ் பிள்ளை
ஹாக்கி என்றாலே நமக்கு நினைவுக்கு வருகிறவர் தன்ராஜ் பிள்ளை ஆவார்.
இவர் தமிழராக இருந்தாலும் மகாராஷ்டிராவிலுள்ளா பூனாவுக்கு அருகில்
உள்ள கிர்கி என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவர். 16.7.1968-ல் பிறந்த இவருக்கு 34 வயது ஆகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஐவரில்
ஒருவராக பிறந்தவர்.
இவர் 1995-ல் அர்ஜூன புரஷ்கர் அவார்டும், 1998-99க்கான சிறந்த
விளையாட்டு வீரருக்கான கே.கே.பிர்லா அவார்டும், 1999-ல் ராஜீவ் காந்தி
கேல் ரத்னா அவார்டும் பெற்ற இவர் 2000 வருடத்தில் பத்மஸ்ரீ அவார்டும்
வாங்கியுள்ளார். இவர் 3 ஒலிம்பிக் விளையாட்டுகளிலும், 4 ஆசியன்
விளையாட்டுகளிலும், 3 உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடி
உள்ள ஒரே இந்தியர் என்ற சாதனையை அடைந்திருப்பவர்.
இவர் சிறந்த தன்னம்பிக்கைக்கு ஒரு அடையாளமாகத் திகழ்கிறார்.
இவருடைய சிறந்த விளையாட்டு ஆர்வம் நமக்கு மகிழ்ச்சியாகவும்,
எதிர் அணிகளுக்கு கவலையும் கொடுக்க கூடியாத இருக்கிறது.
-அன்புடன் அண்ணா.
-
நல்ல பயனுள்ள தலைப்பு!!
அனைத்து நண்பர்களும் தொடர்வார்கள் என நம்புகிறேன்!!!
-
மிக மிக நல்ல முயற்சி..
என் உற்சாகமான வரவேற்பும்
உள்ளம் நிறைந்த வாழ்த்துகளும்..
இசையரசி எம். எஸ் அம்மா அவர்களுடன்
சுபமங்கள ஆரம்பம்...
காற்றினிலே வரும் கீதம் போல்
நீடித்து நெஞ்சில் நிலைக்க ஆசிகள்..
இளவலின் இரண்டாம் பதிவு அருமை..
அண்மையில் குமுதம் ஆரம்பித்த தொடருக்கு
மன்றம் அளிக்கும் எசப்பாட்டு இந்த தொடர்.
ஆரம்பித்த நண்பர் ராஜ் அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.
-
பாராட்டுக்களுக்கு நன்றி
பூ கூறியது போல் தன்ராஜ் பிள்ளை ஒரு தலைசிறந்த
விளையாட்டு வீரர்.
25/09/03
ஆப்ரஹாம் லிங்கன்
பிப்ரவரி 12, 1809'ல் ஏழை குடும்பத்தில்
பிறந்த இவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனது சாதனையே.
இவர் அமெரிக்காவின் 16'வது குடியரசுத்தலைவர்
(1861-1865 )
குடியரசுக்கட்சியை பலப்படுத்தியவர் இவரே. இவரின் தலமையில் நடந்த சிவில் போர் யாரும் மறக்க இயலாத ஒன்று.
ஒரு புனித வெள்ளியன்று(ஏப்ரல் 14, 1865) இவர் நடிகர் ஜான் வில்க்ஸ் பூத் என்பவரால் வாஷிங்க்டன்னில் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
உலக அரசியலில் இவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும்
ராஜ்
-
ராஜ் அவர்களின் அரிய தொடர்.. அருமைத் தொடர்.
பாராட்டுகள். தொடருங்கள்.
-
நல்ல பதிவு ராஜேஷ். பாராட்டுக்கள்.
-
[b]26/09/03
[i]ஸ்ரீனிவாஸ ராமானுஜம்
கணக்கில் பூஜ்யத்தை அறிமுகப்படுத்திய மாமேதை.
1887'ல் டிசம்பர் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தார்.
13 வயதிலேயே ட்ரிக்னோமெட்ரி யை கறைத்து குடித்தார்.
பள்ளியில் கணக்கில் காட்டிய ஆர்வத்தை மற்ற பாடங்களில் அவர்
காட்டவில்லை.
அவருடைய கணக்கு எண் விளையாட்டிற்கு மாதம் 2000 தாள்கள் தேவைப்பட்டதாம்
இவரின் இந்த போக்கு குறித்து அவரது தந்தை மிகுந்த கவலையடைந்தார்
அவருக்கு திருமணம் நடத்தி வைத்தார்.
பின் கணக்கு மேதை ஹார்டியிடம் சேர்ந்தார். அவர் இவரை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அனுப்பி படிக்க வைத்தார்.
ட்ரினிட்டி கல்லூரியின் fellow ஆக 1918'ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆனால் டியூபர்குலோசிஸ் காரணமாக அவர் இந்தியா திருப்பி அனுப்பப்பட்டார். இறக்கும் தருவாயில் கூட எண்களோடு
விளையாடிக்கொண்டிருந்தாராம்
32 வயதில் ஏப்ரல் 26 1920'ல் இந்த கணக்கியல் மாமேதையின் உயிர்
பிறிந்தது.
அவருடைய கடைசி கடிதத்தில் ஹார்டிக்கு தன் தீட்டா தியரி பற்றி
எழுதியிருந்தார்
1962'ஆம் ஆண்டு அவரது 75வது பிறந்த நாளையொட்டி தபால்தலை
வெளியிட்டது.
அவரது மறைவுக்கு பின் ஹார்டியும் வாட்சனும் அவரது புத்தகத்திலிருந்து
சிலவற்றை தொகுக்கும் முயர்ச்சியில் இறங்கினர்
ஆனால் வாட்சனின் மறைவினால் அது
பாதியின் நின்றுபோனது.
இவரது புகழ் கணக்கு உள்ளவரை நிலைத்து நிற்கும்.
ராஜ்
-
காலம் காசக் கத்தியால் பாதியில் கிழித்துப்போட்ட கணிதக் கவிதை!
அந்நியன் அளவுக்கு அண்டைவீடு அங்கீகரிக்க மறுத்த புதுக்கவிதை!
நன்றி நண்பர் ராஜுக்கு!
-
ராஜேஷ் நல்ல தலைப்பை ஆரம்பித்து உள்ளீர்.
எம். எஸ்: இவர் குரலை கேட்காமல் விடியாது காலை (சுப்பர்பாதம்)
தன்ராஜ்பிள்ளை: இவர் இல்லையேல் .. ஹாக்கி இல்லை
ராமனுஜம்: எனக்கு இவரை பிடிக்காது. ஏன் என்றால் அவர் கணித மேதை . ஆனா எனக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வராது (பள்ளிக்கூடத்திலேயும் .. பார்டர் மார்க் வாங்கி தான் பாஸ் செய்தேன்)
-
நல்ல பயனுள்ள தலைப்பு. பங்கு பெறும் பிரபலங்களைப் பற்றி மேலும் கூடுதல் தகவல்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும். Readers Digestல் இந்தத் தலைப்பில் ஒரு புத்தகமே உண்டு. ஆனால், அதில் இடம் பெற்ற இந்தியர்கள் மிகக் குறைவு. நண்பர் ராஜின் இந்த சீரிய முயற்சியால், பல இந்திய சாதனையாளர்களை அறிந்து கொள்ள முடிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாழ்த்துகள், இந்தத் தொடர் வெற்றி பெற....
-
நல்லதொரு தலைப்பு, வாழ்த்துக்கள் திரு. ராஜேஷ் அவர்களே, ஆனால் இது "பயனுள்ள தகவல்கள், கட்டுரைகள்" பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.