Originally Posted by
சிவா.ஜி
நானும் 32 வயதுவரை வாடகைவீட்டில் குடியிருந்தவன் தான். இப்போது வாடகை வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரு கடையை 7 வருடங்களாக வாடகைக்கு எடுத்திருப்பவர்கள்...நான் அதை மாற்றியமைத்துக் கட்டப்போகிறேன்...அதனால் தயவுசெய்து காலி செய்யுங்கள் என்று சொன்னால்....இவ்வளவு முதல் போட்டுவிட்டோம்....உடனே காலி செய்ய முடியாது(இவ்வளவுக்கும் நான் அவர்களுக்கு மூன்றுமாதம் அவகாசம் கொடுத்தேன்) இதே ஏரியாவில் இதைப்போலவே(இளிச்சவாய ஓனர்) கிடைத்த பிறகு காலி செய்கிறேன் என்று சொல்கிறார்கள். வெறும் இரண்டாயிரம் கொடுத்துவிட்டு பல லட்சங்கள் மதிப்புள்ளக் கடையை சொந்தமாக்கிக்கொள்ள...வக்கீல் தேடுகிறார்கள்.
லஞ்சம் வாங்கியோ, கொள்ளையடித்தோ...2G விற்றோ சம்பாதித்துக் கட்டியதல்ல அந்தக் கட்டடம்...பிற்கால வருமான ஆதாரத்துக்காக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டது. இதற்கு உரிமை கொண்டாடும் அவர்களைப் போலத்தான் இருக்கிறது உங்கள் பதிவும். சந்தை நிலவரத்தை மனதில் கொள்ளாமல்....அதிக வாடகைக்காக காலி செய்யச் சொல்கிறர்கள் என்று சொல்வதே அடிப்படைத் தவறு....அதற்கும் மேல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க நினைப்பது....அடேங்கப்பா.....என்னத்த சொல்றது....?