தமிழையும், இந்த மன்றத்தையும், மிக அழகாக போற்றியுள்ளீகள் lasu.
எனது மனம் திறந்த பாராட்டுக்கள்!! மன்றத்தில் உமது சேவை சிறக்க என் வாழ்த்துக்கள்.
Printable View
தமிழையும், இந்த மன்றத்தையும், மிக அழகாக போற்றியுள்ளீகள் lasu.
எனது மனம் திறந்த பாராட்டுக்கள்!! மன்றத்தில் உமது சேவை சிறக்க என் வாழ்த்துக்கள்.
வாழ்த்திய நண்பர் பிரபாவுக்கு என் உளமார்ந்த நன்றிகள்....
........Quote:
இனிது இனிது தமிழ் இனிது
அமிழ்தினும் இனிய தமிழுக்கு
அழகிய தளம் தந்த தலைவா
கணினியுகம் தாண்டியும்
காலமெல்லாம் உன் புகழ் வாழ்க!
அழகுக்கு அழகு செய்ய
அணிகலன் அளிக்கும் தோழரே
பொன்நகை மோகம் தீராத் தமிழ்க்கன்னி
போற்றுவாள் உங்களின் அன்பெண்ணி
நன்றியைச் சொல்ல என்ன வழி?
நல்லதாய் நீயும் படைப்பு அளி
படைக்கும் வழி பழகும் வரை
படித்தவற்றுக்கு பாராட்டளி
வாதம் செய்; பிடிவாதம் வேண்டாம்
தர்க்கம் செய்; குதர்க்கம் வேண்டாம்
நீர்க்குமிழி கோபம் உடைய தேவை ஒரு நொடி
ஊசி கொண்டு குத்துவதால் தேவையற்ற வலி
அன்பே நம் மதம், அமைதியே தேசிய கீதம்
பண்பே பண்டமாற்று, பகிர்தலே தேச மொழி
உழைப்பே மூலதனம், உண்மையே விளம்பரம்
உருவாக்கும் வெற்றி எல்லாம் தமிழுக்கே சமர்ப்பணம்.
எததனை வாட்டி போட்டாலும் சிலருக்கு புரியாது......ஒதுக்கிட்டு போய்கிட்டே
இருக்க வேண்டியது தான்......
இளசு அண்ணா,
இக்கவிதையில் நானும் பங்கேற்று என் நன்றியையும்
தலைவர் இராசகுமாரனுக்கு சொல்லி வாழ்த்துக்களும் உடன் சொல்கிறேன்.
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை என்ற கணக்காக
தலைவர் விடுப்பில் சென்று விட்டார். இப்பொழுது விடுப்பிலிருந்து
திரும்பியிருக்கும் அவருக்கு என் வணக்கமும் கூட.
என் பிறந்தநாளுக்கு நம் மன்றத்திலிருந்து தனிமடல் அனுப்பிய
ஒரே நபர் இராசகுமாரன் நண்பர்தான். அதுவே ஒரு தலைப்பைத்
தொடங்கி எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்ல வித்திட்டது.
நன்றி.
-அன்புடன் சகோதரர் இக்பால்.
அன்புச் சகோதரியே... யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?Quote:
எததனை வாட்டி போட்டாலும் சிலருக்கு புரியாது......ஒதுக்கிட்டு போய்கிட்டே
இருக்க வேண்டியது தான்......
நம் மன்றத்தில் எல்லோரும் நல்லவர்தானே.
-அன்புடன் அண்ணா.
இளசுவின் கவிதை அருமை. இது அறிமுகக் கவிதையா? இளசு கூட தன்னை அறிமுகப்படுத்தி தான் உள்ளே நுழைந்தாரா? ஆச்சர்யமாக இருக்கிறது..............
ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆ.......
தலைமை கண்காணிப்பாளருக்கு இத்தனை நாட்கள் கழித்துத் தான் வணக்கம் சொல்ல முடிந்தது.......
வணக்கம்........
சபாஸ் அருமையான கவிதை
தமிழ் மன்றத்தின் பெருமையை கவிதை வரிகளால்
தமிழே இனிது என்று தமிழுக்கு பெருமை தந்து
விட்டீர்கள் ...........
வாழ்த்துக்கள் ./
மிக மிக அருமை. எளிய வரிகளில் மிகவும் உயர்ந்த குணங்களை விளக்கிய எங்கள் இளசு அண்ணாவிற்கு பாராட்டுகள்
எத்திசையும் முளைங்கிடுவோம் தமிழை
என்று நம்ம இளசு ரெம்ப ஒரு தமிழுக்கு பாராட்டு கொடுத்துட்டாறு
பாராட்டுக்கள் இளசு அவர்களே ......
இளசுவின் கவிதை இன்றைய தேவை,இனிய விதை,நன்றி