சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சர்வதேச கால்பந்து போட்டி நடந்தது. இதில் மலேஷியா, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றன.இன்று நடந்த போட்டியில் மாலத்தீவு அணியை இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
Printable View
சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சர்வதேச கால்பந்து போட்டி நடந்தது. இதில் மலேஷியா, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றன.இன்று நடந்த போட்டியில் மாலத்தீவு அணியை இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
அமித்ஷா மகன் புரிந்த ஊழல் குறித்து ஏன் பேச மறுக்கிறார் மோடி.!
குஜராத் மற்றும் இமாச்சல்பிரதேசம் ஆகிய இரு மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,
"இரண்டு மாநில வெற்றி வளர்ச்சி மற்றும் ஜி.எஸ்.டி.க்கு மக்கள் வழங்கியிருக்கும் அங்கீகாரத்தைப் பிரதிலபலித்திருப்பதாக சொல்கிறார் பிரதமர் மோடி. ஆனால், பிரச்சார சமயங்களில் ஜி.எஸ்.டி. பற்றியோ, பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றியோ அவர் பேசவேயில்லை என்பது அவருக்கே தெரிந்த உண்மை. இங்குதான் மோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.
மோடியின் ஆதரவாளர்களும், அவர்சார்ந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர் என்ன சொல்கிறாரே அதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாடு அதைக் காது கொடுத்து கேட்கப் போவதில்லை. குஜராத் தேர்தல் முடிவும் அதைத்தான் உணர்த்தியிருக்கிறது. ஊழல் ஒழிப்பு பற்றி இடைவிடாமல் பேசும் மோடி ரஃபேல் போர் விமான ஊழல் மற்றும் அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் ரூ.80 கோடி ஊழல் குறித்து மட்டும் ஏன் பேசுவதேயில்லை?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
thanx for sharing....