-
ஜாதியியல்..
ஜாதியியல்..
பிறந்த பொழுது
பரீச்சயமில்லை
எதுவும்..
தவழ்ந்த பொழுதும்
அறிமுகமில்லை..
நடை வண்டி
பழகியபோதும்
உறவு இல்லை..
பின் எப்போது?
வண்ணத்துப் பூச்சிகள்
கண்டு
மகிழ்ந்த பின்புதான்..
ஆம்,
வண்ணத்துப் பூச்சிகள்
வாத்தியாராய் இருந்து
வண்ணங்களின் பிரிவு மூலம்
சொல்லிக்கொடுத்தது
ஜாதியியல்..
-
காண்பதை
உணர்வதை
படைப்புடன்
நிறுத்தியிருந்தால் -
ஜாதியியல்
இயற்கையாக
நின்று போயிருக்கும்.
காண்பதும்
உணர்வதும்
என் கூட்டத்தாரின்
சிந்தனையால்.
தனித்திருக்கும் பொழுது
மனிதனாக நான் -
கூட்டமாக இணைந்த
பொழுது
என் அறிவு
என்னிடத்தும் இல்லை,
எங்களிடத்தும் இல்லை.
அந்த நிமிட மாயாஜாலம் -
மந்திர தந்திரமின்றி
கூடு விட்டு கூடு பாய்ந்தோம் -
மானுடம் உதறினோம்
ஓரறிவு குறைத்தோம்.
-
எந்த சாதிக்காரனை நிறுத்தினால் எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்று எடை போடுகிற மாக்கள் இருக்கிறவரை, சாதிகள் ஒழியாது.
===கரிகாலன்
-
ஜாதிகள்.. இருக்கும்...
அரசாங்கத்தில்..அவை..அதிகாரப்பூர்வமாக உள்ளவரை..
பள்ளிக்குள் நுழையும் பிஞ்சிடம் முதற்கேள்வியே இதுதானே....
பின் எப்படி எதிர்பார்க்கிறோம் ? .....மறையுமென.