விதவை வைத்திருந்தாள்
பூவும் பொட்டும்
விற்பனைக்கு மட்டும்!
Printable View
விதவை வைத்திருந்தாள்
பூவும் பொட்டும்
விற்பனைக்கு மட்டும்!
சுகந்தா..நச் முரண் கவிதை..
காட்சிப் பொருளாகவும்
காய்ச்சும் பொருளாகவும்
அவளுக்கு பூவும் பொட்டும்...
இது போல பல நச்கள் இங்கே..
பாராட்டுக்கள் சுகந்தா.
வாழ்க்கைக் கவிதையில்
காணும் கவின்களும்
கலையும் வணங்களும்
கவிதைகளாக...இல்லையா சுகந்தன்.
குறுகச் சொல்லி நிறைய சிந்திக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள் சுகந்தன்.
அடடா! ஹைக்கூனா இப்படித்தான் அப்படின்னு உதாரணம் காட்டும் அளவிற்கு மிக பிரமாதமாய் இருக்கிறது கவிதை! வாழ்த்துக்கள்!
ஹைக்கூ கவிதையின் பயனாளர்கள் பெருகியதற்கும், அதை அதிகம் விரும்புவதற்கும் காரணம் அதன் சுருங்கச்சொல்லி, விளங்க வைக்கும் "நச்" பாணி தான். 2, 3 சிறு வரிகளில் சொல்லவந்த கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் கீழ் உள்ள ஹைக்கூ கவிதை..!!!
அருமையான ஹைக்கூ தந்த சுகந்தப்ரீதனுக்கு பாராட்டுக்கள்.