-
வானம் கவிதை பெய்யும்!!
என் சிந்தனைகள்
வெற்றிடமாகின்
சிலசமயம்
நான் வானிடம்
தஞ்சம் கொள்வேன்!!
வான் என்றும்
வாரி வழங்கும்
தன் வண்ணக்கவிக்களை
குறை ஒன்றின்றி
குதூகலிப்புடன்!!
வான் உதிரும்
வார்த்தைகள்
தேனை வார்க்கும்
உடலில் வல்லமை
தனை சேர்க்கும்!!
மேகங்கள் என்
எண்ணங்களை மெருகூட்ட
மின்னல் ஆங்காங்கே- கற்பனை
மின்சாரமாய் பரிணமிக்க
பிறந்தது ஒரு கவி- பின்னூட்டலுடனே!!
-
-
வானம் கவிதை பெய்யும் என்ற தலைப்புக்கு ஒரு சல்யூட்
-
-
-
வானமங்கை கவிஞர்க்கு வற்றாத கங்கைபோல்
...வளமான கற்பனையை வாரியே வழங்கிடுவாள் !
கூனல்பிறைச் சந்திரனைத் திலகமாய்க் கொண்டிடுவாள் !
...குற்றேவல் செய்திடவே குழுமிநிற்கும் மின்மினிகள்!
தேனமுத மழைபெய்து தேசங்கள் செழித்திடவே
...தெய்வமென விளங்குகின்ற ஆகாய கங்கையிவள் !
ஊனமிகு மனிதர்க்கு எட்டாத உண்மைகளை
...உரைத்திடுவாள் ! அவளழகை உணர்ந்தவர் யாரிங்கே ?
கவிதை மிகவும் அழகு! பாராட்டுக்கள் சபீக்ஷனா !
-
என் சிந்தனைகள்
வெற்றிடமாகின்
சிலசமயம்
நான் வானிடம்
தஞ்சம் கொள்வேன்!!
சூப்பர்.... வானம் போல பெரிதானது வேறேதும் இல்லை. எவ்வளவு பெரிதென்றால் அது எவ்வளவு பெரிதென்றே தெரியாமல் இருப்பது போல்..
வானம் தராத கவிதைகளா?
மழை கவிதையில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது
அன்புடன்
ஆதவா
-
வான் அன்னையைப் போன்றது,
அணைத்து ஆறுதல் சொல்லும்..!!!
வாழ்த்துகள் அழகான கவிதைக்கு..!!
-
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கொரு சேதிதரும்...
எதை நாம் காதலிக்கிறோமே அங்கிருந்தே நமக்கு கவிதைகளுக்கான கருக்கள் கிடைக்கின்றன
பரந்த வானத்தை இரசிக்கும் பரந்த மனம்.
வானில் என்னென்னவோ வந்து சென்றாலும்
வானம் நிர்மலமாகவே இருக்கிறது..
கவிதை அழகு!