கீதம்...
இந்த வாரம் தஞ்சை சென்றிருந்தேன்....
வீட்டில் அழகுக்கு வைக்கலாம் என்று கற்சிலைகள் எதாவது கிடைக்குமா என்று ஒரு கற்கூடம் சென்றேன்...
என் விருப்பத்திற்க்கு இதமானவை எதுவும் இல்லை...
அந்த சிற்பியிடம் தேவதை சிலையோ அல்லது சிலை வைக்க கல் தூனோ கிடைக்குமா என...
அவர் எங்களிடம் இருப்பது இதுதான் என்றார்..
நானும் விடாமல், செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டேன்...
அவர்.. இல்லை என்று மறுத்து விட்டார்...
காரணம் என்னவோ...!!!
எதுவாயினும் காலத்திற்க்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ளுபவை மட்டுமே நிலைக்கின்றன ....
மற்றவை மடிகின்றன...
கலையும் அதற்கு விதிவிலக்கல்ல...
கவிதைகள் மரபைதாண்டி வந்ததால்
புதுகவிதைகளாய் இன்னும் உயிரோடு...