-
01.ஷெரீப் வேட்பு மனு நிராகரிப்பு
இஸ்லாமாபாத்: பாக்., பொதுத் தேர்தலில் பங்கேற்பதா, புறக்கணிப்பதா என்பது குறித்து பெனசிரும், நவாஸ் ஷெரீப்பும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதனிடையில், தேர்தலில் போட்டியிட ஷெரீப் செய்திருந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.
02. இரண்டு வார சிகிச்சையில் இளமைக்கு திரும்பலாம் * விஞ்ஞானிகளின் பரிசோதனை வெற்றி
சிகாகோ: வயதான எலியின் தோலை மீண்டும் இளமையாக மாற்றி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இரண்டு வார சிகிச்சையில், குறிப்பிட்ட ஒரு மரபணுவை செயல்படவிடாமல் தடுத்தால், மீண்டும் இளமை திரும்பிவிடுகிறது.
03. ஆஸ்திரேலிய புதிய பிரதமர் பொறுப்பேற்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரெட் நேற்று பதவியேற்றார். ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.
04. இடி அமின் துரத்திய இந்தியர்கள் இன்று "கை'கொடுக்கின்றனர்!'* கட்டமைப்பு உட்பட பல் துறைகளில் பிரபலம்
கம்பாலா,: சொந்த நாட்டில் பல லட்சம் மக்களை கொன்ற கொடூர சர்வாதிகாரி இடி அமினால் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள், 35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்போது, உகாண்டாவில் கால் பதிக்கின்றனர்.
05. பிரிட்டனிலும் இந்திய பெற்றோர் பெண் குழந்தையை விரும்புவது இல்லை
லண்டன்: இந்தியாவில் மட்டும் தான் பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோர் இருப்பதாக கருதினால், அது தவறு. பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்களும், பெண் சிசுக்களை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்து வருகின்றனர்.
06. கணவரால் பெண்கள் கொலை ரஷ்யாவில் அதிகரிப்பதாக தகவல்
நியூயார்க்: கணவரால் கொல்லப்படும் பெண்கள் எண்ணிக்கை ரஷ்யாவில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
07. "அடிப்படை இல்லாத குற்றச்சாட்டு கூறி பிரச்னை எழுப்புவதை அனுமதிக்க முடியாது'
கோலாலம்பூர்: "பல்வேறு இனத்தவர்கள் வாழும் மலேசியாவில், அடிப்படை இல்லாத குற்றச் சாட்டுகளை கூறி பிரச்னை எழுப்பும் முயற்சி அனுமதிக்கப்படாது'
08. இலங்கையில் தொடர் சண்டை 39 புலிகள், 6 ராணுவத்தினர் பலி
கொழும்பு: இலங்கையின் வடக்கே புலிகளுக்கும் , ராணுவத்துக் கும் நடந்த கடும் சண்டையில் 39 புலிகளும், ஆறு ராணுவ வீரர்களும் பலியாயினர்.
09. கொழும்புவில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது * இலங்கை அரசுக்கு தமிழ் அமைப்புகள் கண்டனம்
கொழும்பு: கொழும்புவில் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
01. முன்னேற்ற நடவடிக்கைகளை வைத்து நாட்டை எடை போடுங்கள்: படாவி
சிங்கப்பூர்: "மலேசிய அரசு பற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வைத்து தான் எடை போட வேண்டும்' என, அந்நாட்டு பிரதமர் அப்துல்லா ஹமாத் படாவி தெரிவித்துள்ளார்.
02. மலேசியாவில் 26 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு
கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசு கெடுபிடி காட்ட தொடங்கியுள்ளது. 26 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
03. ஓரின சேர்க்கையாளரா கண்டலிசா ரைஸ்? *அமெரிக்காவில் வேகமாக பரவுது வதந்தி
நியூயார்க்: அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ், அதிபர் புஷ்ஷின் நம்பிக்கை யை பெற்றவர்களில் ஒருவர்.
04. அதிகமாய் துங்கினாலும் ஆபத்து * குறைவாய் துங்கினாலும் ஆபத்து
லண்டன்: தினமும் குறிப்பிட்ட நேரம் வரை தான் துங்க வேண்டும். இந்த துக்க நேரம் குறைந்தாலும், அதிகமானாலும் ஆபத்து என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது
05. அணுசக்தி ஒப்பந்தத்தை திருத்த வாய்ப்பு இல்லை
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் சிங்கப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
06. "எடி' மனிதனின் காலடி தடம் கண்டுபிடிப்பு
காத்மாண்டு: இமயமலைப் பகுதியில் ஒரு அதிசய விஷயமாக கருதப்படும் "எடி' என அழைக்கப்படும் பனி மனிதனின் காலடி தடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
07. ஜேம்ஸ் பாண்ட் படங்களால் "எம் 16'க்கு புது தலைவலி
லண்டன்: "ஜேம்ஸ் பாண்ட்' படங்களால் , பிரிட்டீஷ் "எம் 16' உளவுப்படைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
-
1. . அதிகாலையில் சேவல் கூவுவது "நியூசன்ஸ்'வளர்த்த விவசாயிக்கு கோர்ட் அபராதம்
ஹட்லி: அதிகாலையில் சேவல் கூவியதை "நியூசன்ஸ்' என்று கூறி இத்தாலி கோர்ட் விவசாயிக்கு அபராதம் விதித்தது.இத்தாலி,மால்ஸ் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆடம்ஸ்.
2. மெகா' கூட்டணி அமைக்க பெனசிர் முயற்சி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, "மெகா' கூட்டணியை ஏற்படுத்த பெனசிர் புட்டோ முயற்சித்து வருகிறார்.
3. காதலரின் கர்ப்பிணி மனைவி வயிற்றிலேயே குத்தி கொன்ற இந்திய மாணவிக்கு ஆயுள்
லண்டன்: பிரிட்டனில், தனது காதலரின் கர்ப்பிணி மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த, பல் மருத்துவ இந்திய மாணவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
4. . செக்ஸ் தொழிலாளர்கள் 170 பேர் கைது
துபாய்: துபாயில் இதுவரை இல்லாத அளவு, ஒரே நேரத்தில் 170 செக்ஸ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. இலங்கையில் கண்ணி வெடி தாக்குதல் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் புலிகள் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி, பஸ் வெடித்துச் சிதறியது.
6. ஜேம்ஸ்பாண்ட் படங்களால் "எம் 16'க்கு புது தலைவலி
லண்டன்: "ஜேம்ஸ் பாண்ட்' படங்களால் , பிரிட்டீஷ் "எம் 16' உளவுப்படைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
-
01. ஊழலில் அரசியல்வாதிகள் முதலிடம்: போலீசுக்கு அடுத்த இடம்
பெர்லின்: ஊழலில் அரசியல்வாதிகள் முதலிடத்தில் உள்ளனர். போலீசாரும், நீதித் துறையினரும் லஞ்சம் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல.
02. காண்டம் வழங்க பள்ளிகளில் இயந்திரம்
ரியோடி ஜெனிரோ: இளம் வயதினரிடையே எச்.ஐ.வி., பரவுவதை தடுப்பதற்காக, அனைத்து அரசு பள்ளிகளிலும் தானியங்கி காண்டம் வழங்கும் இயந்திரங்களை நிறுவ பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.
03. இலங்கை பஸ்சில் குண்டு வெடிப்பு
கொழும்பு: இலங்கையின் வடபகுதியில், கபிதிகொலேவாவை நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டு இருந்தது.
04. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: எட்டு பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவில் டிபார்ட் மென்ட் ஸ்டோரில் 20 வயது வாலிபன் நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
05. தமிழர்களுக்கு ஜாமீன் மறுப்பு
கோலாலம்பூர்: மலேசியாவில் நவம்பர் 25ம் தேதி நடந்த பேரணியில், போலீஸ் அதிகாரியை கொல்ல முயன்றதாக 31 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
06. துபாய் செல்ல பெனசிருக்கு தடை
இஸ்லாமாபாத்: துபாய் செல்வதற்காக விமானத்தில் புறப்பட தயாராக இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
-
9-12-2007
01.பாகிஸ்தானில் அவசர நிலை: 15ம் தேதி வாபஸ்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே அதாவது டிசம்பர் 15ம் தேதி அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்படுகிறது.
02.இலங்கையில் 24 புலிகள் பலி
கொழும்பு: இலங்கையில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 24 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
03.தேவைப்பட்டால் "ஆள் துக்கி சட்டம்' அமலாகும்: மலேசிய பிரதமர் படாவி மிரட்டல்
கோலாலம்பூர்: மலேசியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரின் செயல்கள், தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்தால், "ஆள் துக்கி சட்டம் 'அமல்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது படாவி மிரட்டல் விடுத்துள்ளார்.
04.வேலைக்கு போகும் பெண்களுக்கு பாக்.,கில் பாலியல் துன்புறுத்தல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், வேலைக்கு செல்லும் பெண்களில் 80 சதவீதத்தினர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். 20 சதவீதம் பேர் கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
05.சிகிச்சையில் மன்னர் அணிந்த உடை தாய்லாந்தியர்கள் அமோக வரவேற்பு
பாங்காக்: தாய்லாந்தியர்களை விநோத உடைமோகம் பிடித்து ஆட்டி வருகிறது. மருத்துவ சிகிச்சைக்காக மன்னர் அணிந்த உடையைப் போல் உடுத்த விரும்பி போட்டி போட்டுக்கொண்டு அந்த உடையை வாங்க அலைந்து திரிகின்றனர்.
06.திருமணம் செய்ய ஆசையில்லை: பிரிவதிலும் தயக்கமில்லை
பீஜிங்: கணவன்மனைவி உறவின் அவசியம் பற்றிய புரிதல் இன்மையால் சீனாவில் விவாகரத்து அதிகரித்து வருகிறது.
07.கெட்ட வார்த்தை பேசிய மைனா: கூண்டில் அடைத்து தண்டனை
சீனா: பூங்காவில் வைக்கப் பட்டிருந்த மைனா அங்கு வந்தவரை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதால், கூண்டில் அடைத்து அதற்கு தண்டனை தரப்பட்டது.
08.மோடிக்கு எதிராக விசாரணை: மனித உரிமை குழு வலியுறுத்தல்
நியூயார்க்: "குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டர் வழக்கில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு என்ன என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும்' என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
-
1. ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி 15 வீடுகள் பலத்த சேதம்
2. போலி என்கவுண்ட்டர் சம்பவம்: நரேந்திர மோடி பேச்சு பற்றி இந்திய அரசு விசாரிக்க வேண்டும் உலக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை
3. உரிமைகள் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் தமிழர்களுக்கு மலேசிய பிரதமர் மிரட்டல் `உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் பாயும்'
4. பிஜித் தீவை கடும் புயல் தாக்கியது 2 கிராமங்கள் அடியோடு நாசம்
5. பாகிஸ்தானில் பெனாசிர் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக் கொலை
6. பாகிஸ்தானில் 15-ந் தேதி நெருக்கடி நிலை ரத்து அட்டர்னி ஜெனரல் தகவல்
-
11-12-2007
01. அம்மாவை நேசிக்கும் குழந்தைகள் பிரிட்டனில் அதிகரிப்பதாக தகவல்
லண்டன்: அம்மாவை நேசிக்கும் குழந்தைகள் பிரிட்டனில் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பல குடும்பங்களில் அப்பாவை குடும்ப உறுப்பினராக பார்ப்பதே குறைந்து விட்டது என்றும் ஆய்வு கூறுகிறது
02. 2,000 ஆண்டு பழமையான அரண்மனை கண்டுபிடிப்பு!
ஜெருசலம்: இஸ்ரேல் நாட்டில், 2,000 ஆண்டு பழமையான கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
03. அழுக்கு நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்களுக்கு இடம்!
நியூயார்க்: உலகில், அழுக்கு நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதல் பத்தில், இரண்டு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன
04. பிரிட்டனில் வசிப்பவரை திருமணம் செய்ய ஆங்கில தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்
லண்டன்: பிரிட்டனில் குடியேறியவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? ஆங்கில தேர்வு எழுதினால் தான் இனி முடியும்.
05. உலகின் ஏழு இயற்கை அதிசயம் * அடுத்தாக ஒரு கருத்துக்கணிப்பு
ஜெனீவா: உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலால் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக துவக்கப்பட்டு விட்டது
உள்ளே
06. இந்திய வம்சாவளியினர் லண்டனில் அதிகம்
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
07. இலங்கையில் தமிழர் பகுதிகளில் அதிகார பகிர்வு * மன்மோகன் வருகைக்கு முன்பாக அறிவிக்க திட்டம்
கொழும்பு: வரும் பிப்ரவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு முன், இலங்கையில் தமிழர் பகுதிகளில் அதிகாரப்பகிர்வு திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.
08. பாக்.,கில் தற்கொலை படை தாக்குதல்: 11 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாயினர்; மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்
-
12-12-2007
01.சுதந்திரமான தேர்தல் நடத்துவோம் மீண்டும் சொல்கிறார் முஷாரப்
வாஷிங்டன் :பாகிஸ்தானில் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்துவது உறுதி என்று அந்நாட்டு அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.
02.கிறிஸ்துமஸ் விழாவுக்கு "ஸ்பெஷல் சரக்கு' ஒரு கோப்பையின் விலை ரூ. 28 லட்சம்
லண்டன் :கிறிஸ்துமஸ் விழாவுக்கு உலகமே உற்சாகமாக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு கோப்பை மது ரூ. 28 லட்சம் என்ற விலையில் பரிமாற தயாராகி வருகிறது,
03.அரபுநாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர் அதிகரிப்பு
தோகா :அரபு நாடுகளில் சொந்தநாட்டு வாசிகளை விட, வெளிநாட்டவர் நான்கு மடங்கு அதிகமாக வசிப்பதாக தெரியவந்துள்ளது.
04.கார் மோதி 118 அடி துரம் வீசப்பட்டவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை
கான்னெல்ஸ்வில்லி :விபத்தில் சிக்கினால் கூட, அதன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று விடலாம். வாகனம் மோதி 118 அடி துரம் துக்கி வீசப்பட்டவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
05.பொது சுதந்திரத்தை தியாகம்செய்ய தயங்கமாட்டேன்: மலேசிய பிரதமர்
கோலாலம்பூர் :""நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக பொதுச் சுதந்திரத்தை தியாகம் செய்ய தயங்கமாட்டேன்,''என மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறினார்.
-
01. அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் கொலை போலீஸ் விசாரணையில் துப்பு துலங்கவில்லை
நியூயார்க்: அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
02. ஆன்லைனில் "வயாக்ரா' விற்ற இந்தியருக்கு 30 ஆண்டு சிறை
பிலடெல்பியா: அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் மருந்தகம் நடத்தி, "வயாக்ரா' உள்ளிட்ட மருந்துகளை விற்ற இந்தியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
03. தற்காலிக விசா வழங்குவதில் பிரிட்டன் புதிய கட்டுப்பாடு
லண்டன்: பிரிட்டனுக்கு தற்காலிக விசா பெற்று செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
04. பிரிட்டனில் வசிக்கிறார் ஹிட்லரின் மகன்?
லண்டன்: சர்வாதிகாரி ஹிட்லரின் மகன் பிரிட்டனில் வசிப்பது, தற்போது தெரியவந்துள்ளது.
05. வந்துவிட்டது செயற்கை சிறுநீரகம்
லண்டன்: சிறுநீரகம் பழுதுபட்டவர்கள், உடலில் அணிந்து கொள்ளும் வகையில், செயற்கை சிறுநீரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
06. தவறான சிகிச்சை ரூ.10 கோடி நஷ்ட ஈடு தர டாக்டருக்கு உத்தரவு
பாஸ்டன்: எச்.ஐ.வி., தாக்காத பெண்ணுக்கு, அந்நோய்க்கு ஒன்பது ஆண்டாக சிகிச்சை அளித்து வந்த டாக்டர், ரூ.10 கோடி நஷ்ட ஈடு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
07. பரிசோதித்த இந்திய டாக்டரை சரமாரியாக தாக்கிய நோயாளி
லண்டன்: பிரிட்டனில், பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய டாக்டரை கடுமையாக தாக்கினார் அந்நாட்டு நோயாளி. படுகாயமடைந்த டாக்டர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளார்.
-
19-12-2007
01. தற்கொலை படை தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் 9 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் ஒன்பது ராணுவ வீரர்கள் பலியாயினர்; ஐந்து பேர் காயமடைந்தனர்.
02. பிரபாகரன் காயமா? * புலிகள் மறுப்பு
கொழும்பு: "இலங்கை விமான தாக்குதலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் லேசான காயமடைந்துள்ளார்' என்று இலங்கை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
03. கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு சவுதி மன்னர் அப்துல்லா மன்னிப்பு
ரியாத்: எந்த தொடர்பும் இல்லாதவருடன் காரில் தனியாக இருந்த போது, ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு, சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மன்னிப்பு அளித்துள்ளார்.
04. மலேயா இனத்தவரை மிஞ்சும் மலேசிய இந்தியர்கள்
கோலாலம்பூர்: மலேசிய இந்திய வம்சாவளியினர் அங்குள்ள மலேயா இனத்தினரை விட வசதி படைத்தவர்களாக உள்ளனர் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
05. பிரிட்டனில் இருந்து ஓட்டம் பிடித்த இந்திய பெண் டாக்டர் அமெரிக்காவில் கைது
லண்டன்: பிரிட்டனில் பணி செய்த போது தவறான ஊசி போட்டதால், நோயாளி உயிர் இழந்த விவகாரத்தில், அமெரிக்காவில் இந்திய பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06. கடும் சண்டை : 26 புலிகள் பலி
கொழும்பு: இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 26 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
07. ஹஜ் யாத்திரை: 20 லட்சம் பேர் குவிந்தனர்
மெக்கா: ஹஜ் யாத்திரையின் இறுதிக் கட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 20 லட்சம் பேர் மெக்காவிலிருந்து மினாவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர்.
08. மலேசிய அரசு இறங்கியது: 31 தமிழர்கள் விடுவிப்பு
கோலாலம்பூர்: மலேசியாவில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட 31 தமிழர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய வம்சாவளியினரை கைவிட மாட்டேன் என பிரதமர் படாவியும் உறுதி அளித்துள்ளார்.
-
21-12-2007
01. மலேசிய தமிழர்கள் மொட்டை போட்டு போராட்டம்
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இண்ட்ராப் அமைப்பை சேர்ந்த ஐந்து பேரை உடனே விடுவிக்கக் கோரி, தமிழர்கள் மொட்டை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
02. பிணம் போல நாற்றமெடுக்கிறது "நேட்டோ' : பெரியண்ணன் அமெரிக்கா மீது புடின் பாய்ச்சல்
நியூயார்க்: சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டு, தனது கருத்துக் களை திணிக்க முயற்சித்தால், கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
03. அன்டார்டிகாவில் டைனோசர் கண்டுபிடிப்பு
மெல்போர்ன்: அன்டார்டிகா பனிமலையில் மிகப்பெரிய டைனோசரின் படிவம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
04. இந்திய மாணவர்களை சுட்டவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ. இரண்டு லட்சம் பரிசு
ஹூஸ்டன்: அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் இருவரை சுட்டுக் கொன்றவர்கள் பற்றிய ஆதாரம் கொடுத்தாலோ, துப்பு தெரிவித்தாலோ ரூ. இரண்டு லட்சம் பரிசு தரப்படும் என போலீஸ் துறை அறிவித்துள்ளது.
05. மூச்சு விட கார்பன் வரி : டாக்டர்கள் சிபாரிசு
சிட்னி: மூச்சு விட வேண்டுமானால் இனி கார்பன் வரி செலுத்தினால் தான் முடியும் என்ற நிலை வந்தாச்சு.
-
4-1-2008
01. மகள் திருமணத்தை எதிர்த்த தந்தை : குடும்பத்தையே கொலை செய்தார்
மார்காம் : அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய தந்தை ஒருவர் தனது கர்ப்பிணி மகள், மருமகன் மற்றும் மூன்று வயது பேரனை தீயிட்டு கொளுத்தி கொன்று விட்டார்.
02. பெனசிர் கொலை எப்படி நிகழ்ந்தது? : இன்னொரு புதுக் கதை கிளம்புகிறது
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவை தாக்கியது துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல, "லேசர் பீம்' தொழில்நுட்பம் கொண்ட ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டுள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
03. அரண்மனையிலிருந்து வெளியேற நேபாள மன்னருக்கு எச்சரிக்கை
காத்மாண்டு : "அரண்மனையை காலி செய்யுங்கள்; அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட நேரிடும்' என்று நேபாள மன்னருக்கு மாவோயிஸ்ட் அமைச்சர் தேவ் பிரசாத் குருங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
04. பிரிட்டன்வாசிகள் கோபப்படும் நேரம் : ஆய்வில் சுவாரசியமான தகவல்கள்
லண்டன் : குழந்தைகள் கத்தி அழுதால் பிரிட்டன்வாசிகள் கோபத்தின் உச்சிக்கு மலை ஏறிவிடுகின்றனர் என்று ஓர் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
05. போர்க்களத்தில் ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துவதைத் தடுக்க புதிய ஆடை
ரிச்மண்ட் : போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறுவதை தடுக்கும் வகையில் ராணுவ வீரர்களுக்காக புதிய உடையை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
06. வலுவிழக்கிறது மலேசிய போராட்டம்
லண்டன் : மலேசிய இந்திய வம்சாவளியினரின் போராட்டம் வலுவிழந்து வருகிறது என்றும், இப்போராட்டம் விரைவில் செயல் இழக்கும் என்று "இண்ட்ராப்' இயக்கத்தின் தலைவரான வைத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.
07. கென்யாவில் குஜராத்தியர் தவிப்பு : பிரதமருக்கு முதல்வர் மோடி கடிதம்
நைரோபி : கென்யாவில் அதிபர் முவாய் கிபாகி, தேர்தலில் வெற்றி பெற்று இருப்பது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
08. துபாய் சென்றார் பிலாவல்
துபாய் : பெனசிரின் மகன் பிலாவல், பாகிஸ்தான் மக்கள் கட் சித் தலைவர்களுடன் துபாய் வந்தார்.
09. ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் : இலங்கையில் நான்கு பேர் பலி
கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும் பில், நேற்று ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
10 பெனசிர் படுகொலை விசாரணையில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் உதவி
இஸ்லாமாபாத் : ""பெனசிர் படுகொலை குறித்த விசாரணைக்கு பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் உதவி அளிப்பர்'' என்று, பாக்., அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.
11. அமைதி ஒப்பந்தம் ரத்து : இலங்கை அரசு முடிவு
கொழும்பு : இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு நேற்றிரவு தெரிவித்துள்ளது.