-
நானும் இங்கு பேதையாய்
நானும் இங்கு பேதையாய்
பூக்களில் நடந்த என் பாதங்கள் இப்போது
நடப்பது முட் பாதைகளில்..
ஆயிரமாயிரம் கனவுகளை தேக்கி வைத்தேன்
என் கண்களுக்குல்.....
அந்தக் கனவுகள் கூட கரைந்து போகின்றது
என் கண்ணீரிலே......
அருகிலிருந்த என் உறவுகள் கூட இன்று
தூரமாகி போனது....
இனிமேல் எங்கே போய்த் தேடுவேன் என்
வாழ்வின் வசந்தத்தை.....?
பிறந்து விட்டேனே நானும் இங்கு
பேதையாய்.....!!!
கனவு கானும் வாழ்க்கை யாவும் கரைந்து போகும் சோகங்கள்...
அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
-
கனவுகளைக் கலைத்துவிடு
கலையும் மேகங்களாய்
நினைவுகளைப் புதைத்து விடு
நிலத்தில் விதைக்கும் விதயாய்...
கண்ணீரை நீராக்கு விதைக்கும்
விதைக்கு....
பூத்துக்குலுங்கும் பூக்களாய்
வசந்தம் உன் வாழ்வில்
பூத்துக்குலுங்கும்......