-
ஹலோ...
ஹலோ...
கண்கள் மூட
காட்சியாய்
விரிகிறாய்...
அருகில் இருக்கும்
தலையணைக்குள்
குடி புகுகிறாய்..
என்னை இறுக்கித்
தழுவுகிறாய்..
முத்தமிடுகிறாய்...
ஏதேதோ
சொல்லி புலம்புகிறாய்..
புலம்ப வைக்கிறாய்..
ஒருநாள்...
கர்ப்பம் என்று
அறிவிக்கிறாய்..
குழந்தை பெறும்
கணத்திற்கு
காத்திருக்கிறேன்...
உன்னை போலவே
பிறந்த குழந்தைக்கு
பெயரும் வைத்தாகிவிட்டது..
இப்படியாக தொடர
முகத்தில் சூரியன்
சுள்ளென்று பட்டு எழுகிறேன்...
போர்வை உதற
கனவும் சிதறி
வீழ்கிறது எங்கோ?
இத்தனை அவஸ்தைகளையும்
சொல்ல தொலைபேசி
எடுக்கிறேன்..
ஒற்றையாய்
நீ உதிர்த்த
ஹலோ...
ஒரு நொடியில்
எனக்கு
மறு உயிர்ப்பு..
பேச வேண்டுமென்று
உதடு திறக்க முயற்சித்து
முடியாமல் போக..
நியாபகம் வந்தது
என் இறந்த தேதி...
-
-
அழகிய கவிதை ராம்பால் அவர்களே, அருமையாக இருந்தது, வாழ்த்துக்கள்
-
-
ராம்பால் கலக்கிட்டீங்க போங்க!!!
உண்மையில் அந்த கடைசி பன்ச் சூப்பர்!!!!
-
காதலுக்கு அழிவில்லை என்பதை அருமையாக நிறுபித்துவிட்டீர் நண்பரே . நான் படித்த கவிதைகளில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டது இதுவே . பாராட்டுக்கள் .
-
அருமையான நடை இருந்தாலும் இது ஆவியின் கனவா என்று சற்று குழப்பமாக உள்ளது.
-
கனவுக்குள்ளே கனவு... ஆவியின் கனவு... நல்ல கற்பனை... சற்றே குழப்பமாகத்தான்..
-
வித்தியாசமான கவிதை..
காதல் கவிதையாய் தொடங்கி
கடைசியில் சஸ்பென்ஸ் கவிதையாகி..
வேறு உலகம் அழைத்துச் சென்று
விட்டீர்கள்..
ஆவிக்கு.. ஒரு ஹாலோ
-
இது ஒரு வித்யாசமான முயற்சி..
இன்றும் எனது மனதில் நிற்கும் கவிதைகளில் இதற்கும் ஓர் இடம் உண்டு..
நன்றி.. பாராட்டிய அனைவருக்கும்..
-
-
நிகழ்காலத்திலே ஒரு இறந்தகாலம்.....
நல்ல கவிதை.....
தொடருங்கள்..... உற்சாகத்துடன்.....