<?xml version="1.0" encoding="UTF-8"?>

<rss version="2.0" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
	<channel>
		<title>தமிழ் மன்றம்.காம்</title>
		<link>http://www.tamilmantram.com/vb/</link>
		<description>தமிழர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் மன்றம், தமிழ் மன்றம், Tamilans share their thoughts in Tamil, in this discussion forum.</description>
		<language>ta</language>
		<lastBuildDate>Fri, 18 May 2012 13:58:13 GMT</lastBuildDate>
		<generator>vBulletin</generator>
		<ttl>60</ttl>
		<image>
			<url>http://www.tamilmantram.com/vb/images/styles/BlueDemon/misc/rss.png</url>
			<title>தமிழ் மன்றம்.காம்</title>
			<link>http://www.tamilmantram.com/vb/</link>
		</image>
		<item>
			<title>நீங்காதிச் சாக்கடைகள்!!!</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29253-நீங்காதிச்-சாக்கடைகள்!!!?goto=newpost</link>
			<pubDate>Fri, 18 May 2012 13:46:48 GMT</pubDate>
			<description><![CDATA[*நீங்காதிச் சாக்கடைகள்!!!* 
 
*[இன்னிசை வெண்பா]* 
*கங்கைதனைக் கொண்டவனாம் காடாரம் வென்றவனாம்   
இங்குள்ள லங்கைதனை இங்ஙனமாய்ச் சேர்த்தவனாம்   
என்றுபல தற்பெருமை எப்போதும் பேசுவதோ  
நன்றல்ல நாமுணர்வோம் நன்கு* 
    
*[இன்னிசைக் கலிவெண்பா]* 
*சாதியென்ற சாக்கடையால் தாழ்ந்தோமே தட்டழிவு*]]></description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div><font size="5"><b>நீங்காதிச் சாக்கடைகள்!!!</b></font><br />
<br />
<b><i><font size="3">[இன்னிசை வெண்பா]</font></i></b><br />
<b><i><font size="4">கங்கைதனைக் கொண்டவனாம் காடாரம் வென்றவனாம்  <br />
இங்குள்ள லங்கைதனை இங்ஙனமாய்ச் சேர்த்தவனாம்  <br />
என்றுபல தற்பெருமை எப்போதும் பேசுவதோ <br />
நன்றல்ல நாமுணர்வோம் நன்கு</font></i></b><br />
   <br />
<b><i><font size="3">[இன்னிசைக் கலிவெண்பா]</font></i></b><br />
<b><i><font size="4">சாதியென்ற சாக்கடையால் தாழ்ந்தோமே தட்டழிவு* <br />
ஆதியிலே சாதியில்லை அன்பொன்றே நாமறிந்தோம் <br />
பாதியிலே ஆரியர்தான் பாளுமிந்நோய் கொண்டுவந்தார்  <br />
மீதியுள்ள நற்குணமும் மேல்கீழாய்ப் மாறியதே!<br />
சாதிச்சண் டையோடு சார்சமயச் சண்டைகளும்<br />
பாதிக்கு மேல்சாகப் பாத்திரமாய் உள்ளதென்றார்<br />
மீதியாய்ச் சாகிறவர் மேல்வறுமை கொண்டவராம் <br />
நீதிக்கும் நிற்பதில்லை நீங்காதிச் சாக்கடைகள்; <br />
எங்கெங்கு நோக்கிடினும் எல்லாமே ஊழல்தான் <br />
தங்குதடை இல்லாமல் தாராளம் கைமாறும்<br />
பங்குகளை வாங்குதலும் பாங்குடனே விற்பதிலும்<br />
மங்காது மக்களிடம் மாறிடுமிக் கையூட்டே; <br />
சாராயச் சாக்கடைகள் சந்துபொந்தாய் ஓடுதுபார் <br />
ஆராயத் தேவையில்லை ஐயமில்லா திக்கொடுமை<br />
நேராக இச்சுரண்டல் நேர்கிறதே யாராலும் <br />
சீராக்க லாகாதே சேர்ந்து </font></i></b><br />
<i><font size="2">*தட்டழிவு = நிலைகுலைவு, தோல்வி, (சென்னைப் பேரகரமுதலி)</font></i><br />
<b><i><font size="3">----- Dr. சுந்தரராஜ் தயாளன்  </font></i></b></div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/48-கவிதைகள்-பாடல்கள்">கவிதைகள், பாடல்கள்</category>
			<dc:creator>Dr.சுந்தரராஜ் தயாளன்</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29253-நீங்காதிச்-சாக்கடைகள்!!!</guid>
		</item>
		<item>
			<title>ஏந்த்திகெனி  4</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29251-ஏந்த்திகெனி-4?goto=newpost</link>
			<pubDate>Fri, 18 May 2012 06:28:53 GMT</pubDate>
			<description>கிரியன்  -  செய்தாயாநீ  யதனை ?  ஏற்கிறாயா ,  மறுக்கிறாயா ? 
 
ஏந்த்திகெனி  -  சொல்கிறேன் ;  செய்தேன்தான் ,  மறுக்க  வில்லை . 
 
கிரி        செய்யத்  தடையாணை  இருந்தது  தெரியும்? 
 
ஏந்த்தி      தெரியும் ;  எப்படித்  தெரியாமல்  போகும் ? 
           பொதுஅறிவிப்  பல்லவோ ? 
 
கிரி        இருப்பினும் ...</description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div>கிரியன்  -  செய்தாயாநீ  யதனை ?  ஏற்கிறாயா ,  மறுக்கிறாயா ?<br />
<br />
ஏந்த்திகெனி  -  சொல்கிறேன் ;  செய்தேன்தான் ,  மறுக்க  வில்லை .<br />
<br />
கிரி        செய்யத்  தடையாணை  இருந்தது  தெரியும்?<br />
<br />
ஏந்த்தி      தெரியும் ;  எப்படித்  தெரியாமல்  போகும் ?<br />
           பொதுஅறிவிப்  பல்லவோ ?<br />
<br />
கிரி        இருப்பினும்  மீறத்  துணிச்சல்  கொண்டாய் ?<br />
<br />
ஏந்த்தி     நிச்சயமாய்.<br />
          அதற்குக்  கட்டளை  இட்டது  சீயசல்ல; <br />
          கீழுலகத்  தெய்வங்க  ளோடுறையும்  திக்கே<br />
          மாந்தர்க்கு  வரையறுத்த  சட்டமன்று  என்சட்டம் .<br />
          மேலும்நான்  எண்ணவில்லை  எழுதாத  சட்டங்களை,<br />
          கடவுளரின்  நிலையான  சட்டங்களை  மீறுதற்கு<br />
          மானிடனை  உன்சட்டம்  அனுமதிக்க  முடியுமென .<br />
          ஏனென்றால்  இன்றிருந்தோ  நேற்றிருந்தோ  அல்ல<br />
          எப்போதும்  அமலாகும்  அச்சட்  டங்கள்.<br />
          மனிதன்  ஒருவனின்  தீர்மானம்  நினைந்தஞ்சி<br />
          தெய்வத்  தின்முன்  தண்டனைநான்  பெறமாட்டேன்<br />
          நான்சாக  வேண்டும்  அறிவேன்  முன்னமே .<br />
          --  அறியாமல்  இருப்பது  எப்படி ? --<br />
          அதற்குன்றன்  அறிவிப்பு  தேவை  யில்லை. <br />
          ஆனால்  அகால  மரணம்  அடைவதால்<br />
          ஆதாயம்  பெறுவதாய்  எண்ணுகின் றேன்நான்<br />
          என்போல்  படுமோசச்  சூழலில்  உழல்வார்<br />
          நன்மை  சாவதில்  எங்ஙனம்  எய்தார் ?<br />
          எதுஎப் படியோ  துன்பமன்று  எனக்கு<br />
          விதியினிவ்  விளைவை  ஏற்றல் ,  இதுமெய் .<br />
          ஆனால்  ஒருமகன்  என்தாய்க்குப்  பிறந்தவன்<br />
          அவனுடல்  அடக்கம்  ஆகாமை  இறந்தபின்<br />
          அதுவே  துயரமாய்  இருக்கும்  எனக்கு.<br />
          சோகந்  தராது  எனக்கு  நேர்வது .<br />
          நடந்துகொண்  டேன்நான்  பைத்தியம்  போலென்று<br />
          உனக்குத்  தோன்றின்  என்னைக்  கிறுக்கி<br />
          என்பவன்  கிறுக்கனா யிருத்தல்  கூடும்<br />
          .....................................................................<br />
         சோதரனை  அடக்கஞ்செய்  தடைந்த  பெருமையினும்<br />
         மேலான  மதிப்பினை  நான்பெறுவ  தெப்படி ?<br />
         அங்கிருந்தார்  அனைவரும்  ஆதரித்தார்  என்னை..<br />
         அச்சம்  அவர்நாவை  அடக்காமல் .இருந்தால்<br />
         அறிவித்  திருப்பார்  வெளிப்படை  யாக.<br />
   _________________________________________________<br />
<br />
குறிப்பு :  1 -  திக்கே  -  நீதிதேவதை.<br />
          2 - அதற்குன்றன் - அதற்கு உன் தன் =  அதற்கு  உன்னுடைய.<br />
      ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++<br />
<br />
<br />
<br />
(  ஏந்த்திகெனியின்  தாய்மாமன்  தான்  கிரியன் .  இவனது  மகன்  ஹெமோனுக்கும்  அத்தைமகள்  ஏந்த்திகெனிக்கும்  திருமணம்  நிச்சயமாகியிருந்தது.<br />
 தண்டனை  இன்னம்  நிறைவேறாத  நிலையில்  தகப்பனிடம்  வந்தான்  ஹெமோன் )<br />
<br />
கிரியன்  -  குழந்தாய்,  உறுதிசெய்த  மனைவியின்  மரண<br />
           தண்டனைச்  சேதிதான்  தந்தைமேல்  சினந்து<br />
           இங்குவரச்  செய்ததா  உன்னை ?  அல்லது<br />
           எதுசெய்யினும்  உனக்குநான்  நண்பன்  தானா ?<br />
<br />
ஹெமோன் - தந்தையே ,  உன்மகன்நான், எனக்குத்  தொடர்பான<br />
           எந்தவுன்  முடிவுகளும்  நல்லனவாய்  இருந்து<br />
           நல்வழியில்  என்னைச்  செலுத்தினால்  கீழ்ப்படிவேன். <br />
           என்னைநீ  நன்றாக  வழிநடத்து  வாயெனில்<br />
           உன்னைவிடப்  பெரிதன்று  எனக்கென்  திருமணம் .<br />
<br />
கிரி        அதுதான்  குழந்தையே ,  அதையே  இதயத்தில்<br />
           பதிக்க  வேண்டும் ;  தந்தை  செய்த  <br />
           தீர்மானம்  மேலானது  யாவற்  றுக்கும் .<br />
           ஏனெனில்  மாந்தர்  தமக்குக்  கீழ்ப்படிந்து<br />
           வளருங்  குழந்தைகள்  வேண்டுமென  விரும்புவது<br />
           பகைவரைப்   பழிவாங்கும்  செயலில்  மிகவுந்<br />
           தீவிரங்  காட்டுதற்கும்  தங்கள்  தந்தையென<br />
           நண்பரிடம்  மரியாதை  செலுத்து  வதற்குந்தான் .<br />
           மாறாகப்  பயனற்ற  பிள்ளைகள்  பெற்றவனைப்<br />
           பற்றி ,  வேறென்ன  சொல்வது ,  அவன்சொந்தத்<br />
           துர்ப்பாக்  கியத்தை  உருவாக்கு  கின்றான் ,<br />
           எதிரிகள்  எள்ளுவர்  என்பதல்  லாமல் ?</div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/130-சொந்த-மொழிபெயர்ப்புப்-பகுதிகள்">சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள்</category>
			<dc:creator>சொ.ஞானசம்பந்தன்</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29251-ஏந்த்திகெனி-4</guid>
		</item>
		<item>
			<title>சிவந்த மே!</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29244-சிவந்த-மே!?goto=newpost</link>
			<pubDate>Thu, 17 May 2012 22:22:51 GMT</pubDate>
			<description />
			<content:encoded />
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/63-வாழ்த்துக்கள்-அஞ்சலி-இதர-தலைப்புகள்">வாழ்த்துக்கள்,அஞ்சலி,இதர தலைப்புகள்</category>
			<dc:creator>அமரன்</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29244-சிவந்த-மே!</guid>
		</item>
		<item>
			<title>புதிய தலைமுறை தொலைக்காட்சி</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29241-புதிய-தலைமுறை-தொலைக்காட்சி?goto=newpost</link>
			<pubDate>Thu, 17 May 2012 18:00:07 GMT</pubDate>
			<description />
			<content:encoded />
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/97-ஒலி-ஒளிப்-பகுதி">ஒலி-ஒளிப் பகுதி</category>
			<dc:creator>jayanth</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29241-புதிய-தலைமுறை-தொலைக்காட்சி</guid>
		</item>
		<item>
			<title>ஒரு புளிய மரத்தின் கதை</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29240-ஒரு-புளிய-மரத்தின்-கதை?goto=newpost</link>
			<pubDate>Thu, 17 May 2012 14:11:03 GMT</pubDate>
			<description>காலச்சுவடு இதழின் நிறுவனர் சுந்தர ராமசாமி (1931 -  2005)      அவர்கள் எழுதிய முதல் நாவல் இது.  1966 ஆம் ஆண்டு வெளிவந்தது.   நவீன உரைநடையைப் பேச்சு வழக்கில் எழுதிய முதல் நாவல் என்ற வகையில், தமிழிலக்கியத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. 
 
இவரின் சொந்த ஊர் நாகர்கோவில். மூன்று...</description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div>காலச்சுவடு இதழின் நிறுவனர் சுந்தர ராமசாமி (1931 -  2005)      அவர்கள் எழுதிய முதல் நாவல் இது.  1966 ஆம் ஆண்டு வெளிவந்தது.   நவீன உரைநடையைப் பேச்சு வழக்கில் எழுதிய முதல் நாவல் என்ற வகையில், தமிழிலக்கியத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.<br />
<br />
இவரின் சொந்த ஊர் நாகர்கோவில். மூன்று நாவல்களும் பல சிறுகதைகளும், கவிதைகளும் எழுதியிருக்கும் இவர், தகழி சிவசங்கரப் பிள்ளையின் புகழ்பெற்ற செம்மீன், தோட்டியின் மகன்  என்ற நாவல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.  ஜே.ஜே.சில குறிப்புகள் (1981), குழந்தைகள், பெண்கள், ஆண்கள்(1998) என்பன, இவர் எழுதிய மற்ற நாவல்கள்.<br />
<br />
இந்நாவலில் கதைசொல்லியாக வரும் தாமோதர ஆசான் இரத்தமும் சதையும் கொண்ட, உயிர்த்துடிப்புள்ள ஒரு கதாபாத்திரம். அவர் கதை சொல்லும் பாங்கை நீங்களும் சுவைக்க, நாவலிலிருந்து கொஞ்சம்:-<br />
<br />
”வெற்றிலை போட்டுத் துப்பி விட்டுச் சுற்றுமுற்றும் பார்ப்பார் ஆசான்.  ஹூம்...ஹூம் என்று அவசியமில்லாத ஆர்ப்பாட்டங்களுடன் புகையிலைச் சாற்றைத் தொண்டைக் குழியிலிருந்து வெளியேற்றிக் கொள்வார்.  கதை ஆரம்பமாகிறதென்று அர்த்தம்.<br />
<br />
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று அத்தைப் பாட்டிகள் பாணியில் கதை ஆரம்பம் ஆகாது.  கதை உத்திகள் எல்லாம் அவரிடம் படிந்து போன சமாச்சாரம்.<br />
<br />
சற்றுத் தள்ளி முளைத்திருக்கும் ஒரு செடியை இரண்டு வினாடிகள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ”அதென்ன செடி, தெரியுமா அது, யாருக்காவது?  என்கிறார்.<br />
<br />
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் தலையை அசைக்கிறோம்.<br />
<br />
இதெக் கொடுத்துத் தாலா தாலி கெட்டின புருஷனெக் கொன்னே போட்டா சண்டாளி.  மனசு வருமா ஒரு பொம்பிளைக்கு?  அடுத்தவன் களுத்தெக் கட்டிக்கிடணும்னு ஒரே நெனப்பா நெனச்சுத் துணிஞ்சிட்டாளே பாவி.  <br />
<br />
அப்படித்தான் செய்தாளே, புருஷன்காரன் என்ன நொண்டியா, சப்பாணியா, கூன்குருடா, இல்லே மேலே ஒண்ணு இருக்கட்டும்னு இன்னொருத்தியெ வச்சுக்கிட்டு இருந்தானா?<br />
<br />
எப்படிப் போனாலும் அறுப்புக்கு நூறு கோட்டை நெல் வந்து விளும்.  நாள் ஒண்ணுக்குக் கொல்லேலே விளுற இலை அம்பதுக்குக் கொறயாது.  அவுத்துவிட்டாத் தொளுவம் காலியாகுதுக்கு அரை மணி நேரமாகும். <br />
<br />
சவாரிக்கு மாடுபுடிக்குதுக்கு வந்தான் வடசேரி சந்தைக்கு.  அரபிக் குதிரெ கணக்கா ரெண்டு மாட்டெப் புடிச்சுக்கிட்டு, அந்த மாபாவி தலையிலே ஆசையா வெச்சு முத்துதுக்கு மடி நெறயப் பூவும் வாங்கிட்டுத்தானே போனான் அண்ணைக்கும்.  பாலைத்தான் தாறான்னு வாங்கிக் குடிச்சான்.  ரெண்டு தவா ரெத்தம்மாட்டு வாந்தி எடுத்தான்.  குளோஸ்.<br />
<br />
இது தான் ஆசானுடைய எடுப்பு.  கடைசியில் மண்ணைத் தூக்கி விண்ணில் நிறுத்திக் காட்டுகிறேன் என்று சொல்லி விட்டுத் துண்டை விரித்து ,மருந்துப் பெட்டிகளை அடுக்கும் செப்பிடு வித்தைக்காரன் போல், மீண்டும் வெற்றிலை போட்டுக் கொள்ள ஆரம்பித்து விடுவார்.  பின்னால் விஷம் கொடுத்தவளின் குழந்தைப் பருவத்தில் கதை ஆரம்பமாகும்”<br />
<br />
புளிய மரத்தைப் பற்றிய பழைய சுவாரஸ்யமான கதைகள் அனைத்தையும் ஆசான் மூலமாகவே நாமும் தெரிந்து கொள்கிறோம்.  ஆனால் புளிய மரம் வெட்டப்படுவதற்கு முன்னாலேயே ஆசான் போய்ச் சேர்ந்து விடுகிறார்.  அவர் மறைவுக்குப் பின், நாவலின் சுவை குறைந்து விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.  அந்தளவுக்கு ஆசான் படிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறார்.        <br />
<br />
அதற்குப் பிறகு  காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு நவீனப் பூங்காவான கதை விவரிக்கப்படுகிறது.  நவீனமயம் என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் மனிதனின் பைத்தியக்காரத் தனத்தை இச்சிறு உரையாடல் மூலம் ஆசிரியர் கிண்டல் செய்கிறார்..  <br />
<br />
மரங்கள் விழுந்து சாய்வதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு வயோதிகர், மனம் பொறுக்க மாட்டாமல் இளைஞனிடம்  கேட்கிறார்:-<br />
<br />
”தம்பி, எதுக்குடேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?”<br />
<br />
”செடி வைக்கப் போறாங்க” <br />
<br />
”எதுக்கு டேய், செடி வைக்கப் போறாங்க?”<br />
<br />
”காத்துக்கு”<br />
<br />
”மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்?”<br />
<br />
”அளகுக்கு”<br />
<br />
”செடிதான் அளகாட்டு இருக்குமோ?”<br />
<br />
”உம்”<br />
<br />
”செடி மரமாயுடாதோவ்?”<br />
<br />
”மரமாட்டு வளராத செடி தான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க”<br />
<br />
”வெட்டி வெட்டி விடுவாங்களா?”<br />
<br />
”ஆமா”<br />
<br />
”அட, பயித்தாரப் பசங்களா!” <br />
<br />
<br />
இறுதியில் நகரசபை தேர்தலில் போட்டியிடும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இருவருக்கிடையே ஏற்படும்  போட்டியும் பொறாமையும், புளிய மரத்தை அழிப்பதில் போய் முடிகிறது.   <br />
<br />
இந்நாவலின் கரு பற்றி ஆசிரியரே முதல் அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறார்:-  .<br />
<br />
”மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டு தானே?  அதில் ஒன்று தான் புளியமரத்தின்  கதையும்.<br />
<br />
சொல்லப்போனால் புளியமரம் என்ன செய்தது?  சும்மா நின்று கொண்டு தானே இருந்தது?  மனிதனின் அலகிலா விளையாடல் களுக்கு மெளன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதா?  பட்டுக்கொண்டதா?  மனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமை தான் என்ன?  யாரைப் பார்த்துக் கை நீட்டிற்று?  யாரை நோக்கிப் பல்லிளித்தது?  யாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும் குழி பறித்ததா? <br />
<br />
ஆனால் நாட்டையும், பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும், புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன், புளியமரத்தை மட்டும் விட்டு வைக்கிறேன் என்கிறானா?  அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்து விட்டான்.  புளியமரம் அழிக்கப்பட்டது.” <br />
<br />
வாய்ப்புக் கிடைத்தால் இந்நாவலை வாசிக்கத் தவறாதீர்கள்.</div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/52-இலக்கியங்கள்-புத்தகங்கள்">இலக்கியங்கள், புத்தகங்கள்</category>
			<dc:creator>கலையரசி</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29240-ஒரு-புளிய-மரத்தின்-கதை</guid>
		</item>
		<item>
			<title>கண்ணாடிக் கனவுகள் (கதைக் கவிதை)</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29239-கண்ணாடிக்-கனவுகள்-(கதைக்-கவிதை)?goto=newpost</link>
			<pubDate>Thu, 17 May 2012 13:08:32 GMT</pubDate>
			<description>பூ பழம் சகிதம் சுற்றம் சூழ வந்திருந்தாய் என் வீட்டுக்கு  
பச்சை வண்ண ராசிப் புடவை அணிந்து  
கையில் காபி கப்புடன் நெருங்கி வந்தேன் 
இரண்டு நிமிடம் என் விழிகளுக்குள் உன்னை சிறைபிடித்தேன் 
உனக்கும் அது விருப்பம் என்பதை புன்னகை மொழியில் புரிய வைத்தாய்  
உன் அம்மா அப்பாவும் அன்புடனே பார்த்தார்கள் ...</description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div>பூ பழம் சகிதம் சுற்றம் சூழ வந்திருந்தாய் என் வீட்டுக்கு <br />
பச்சை வண்ண ராசிப் புடவை அணிந்து <br />
கையில் காபி கப்புடன் நெருங்கி வந்தேன்<br />
இரண்டு நிமிடம் என் விழிகளுக்குள் உன்னை சிறைபிடித்தேன்<br />
உனக்கும் அது விருப்பம் என்பதை புன்னகை மொழியில் புரிய வைத்தாய் <br />
உன் அம்மா அப்பாவும் அன்புடனே பார்த்தார்கள் <br />
'எங்க ராணிகேத்த ராசா தான் மாப்பிள்ளையும்'  பாட்டி இரைந்தாள் சற்று சத்தமாகவே <br />
வெட்கத்தின் விசை தாளாமல் ஓடி வந்து விட்டேன் என் தனியறைக்கு <br />
செல்போன் மணி அடிக்கும் போதெல்லாம் நீயாக இருப்பாயோ என்று ஆர்வமுடன் எடுத்தேன்<br />
நாளை என்ன பரிசு தருவாய்?<br />
நம் குழந்தைக்கு அழகான தமிழ்ப் பெயர் தான் வைக்க வேண்டும்!!<br />
ஆயிரம் ஆயிரம் திட்டமிடுதல்கள் ..<br />
அத்தனை கனவுகளுக்கும்  அடித்தளம் தர நீ வரவிருக்கும் நாளை எதிர்பார்த்திருந்தேன்<br />
வந்தது என்னவோ தரகர் மட்டும் தான் - கையில் வேறு சில புகைப்படங்களுடன் <br />
அந்த பையன் வீட்ல பொண்ணு எல்லாருக்கும் பிடிச்சுருக்கு<br />
கொடுக்கல் வாங்கல் மட்டும் ஒத்து வரல சார் <br />
இன்னொரு இடம் கை வசம் இருக்கு <br />
அருமையான இடம் <br />
நம்ம சக்திக்கு ஏத்த இடம்<br />
நாளைக்கு வர சொல்லட்டுமா பொண்ணு பார்க்க?<br />
<font color="#800080">அவருக்கு பழகிப் போயிருந்தது பார்ப்பதும் போவதும் <br />
இன்னும் என் மனதிற்கு பழக்கம் ஆகவில்லை - <br />
கனவுகள் கண்ணாடித் துகள்களாய் ஆன பிறகும் <br />
அடுத்து பார்க்க வரும் 'ராசா'வை நோக்கி புன்னகை செய்ய.</font></div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/50-சிறுகதைகள்-தொடர்கதைகள்">சிறுகதைகள், தொடர்கதைகள்</category>
			<dc:creator>இராஜிசங்கர்</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29239-கண்ணாடிக்-கனவுகள்-(கதைக்-கவிதை)</guid>
		</item>
		<item>
			<title><![CDATA[பதியாத பாசம் - "நான்" கார்த்திகேயன்.]]></title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29238-பதியாத-பாசம்-quot-நான்-quot-கார்த்திகேயன்?goto=newpost</link>
			<pubDate>Thu, 17 May 2012 10:01:56 GMT</pubDate>
			<description>சில வரிகளில், உனை எழுத 
வலிய வார்த்தைகள் இல்லை. 
உனைக் கொண்டாட பிறந்ததேதி 
இல்லை - உலக தினங்கள் 
இருப்பதாயும் அறிந்ததில்லை. 
உன்னுடன் நானும் இல்லை! 
உனக்கான வருத்தங்களைக் கூட 
அபத்தங்கள் என்கிறார்கள். 
கைபற்றி செல்ல - பழஞ்சரித்திரக் 
கதை பேச - ஏது காலமோ?</description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div>சில வரிகளில், உனை எழுத<br />
வலிய வார்த்தைகள் இல்லை.<br />
உனைக் கொண்டாட பிறந்ததேதி<br />
இல்லை - உலக தினங்கள்<br />
இருப்பதாயும் அறிந்ததில்லை.<br />
உன்னுடன் நானும் இல்லை!<br />
உனக்கான வருத்தங்களைக் கூட<br />
அபத்தங்கள் என்கிறார்கள்.<br />
கைபற்றி செல்ல - பழஞ்சரித்திரக்<br />
கதை பேச - ஏது காலமோ?<br />
எங்கும் பதியாத, எதிர்பார்ப்பு<br />
இல்லாத, எல்லையும் இலா<br />
உன் பாசத்தை எப்படி எழுத?<br />
தள்ளாத வயதிலும் - தன்<br />
நம்பிக்கை தளராத - என்<br />
பாட்டி அலமேலு அம்மாள்.</div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/92-தொடர்-கவிதைகள்">தொடர் கவிதைகள்</category>
			<dc:creator>naankarthikeyan</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29238-பதியாத-பாசம்-quot-நான்-quot-கார்த்திகேயன்</guid>
		</item>
		<item>
			<title>மனைவி அமைவதெல்லாம்.......</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29237-மனைவி-அமைவதெல்லாம்?goto=newpost</link>
			<pubDate>Thu, 17 May 2012 08:02:28 GMT</pubDate>
			<description>Image: http://ootynews.files.wordpress.com/2012/04/409363_233353063411316_100002098730043_551967_1260416557_n.jpg?w=310  
 
”கிருஷ்ணா உன் மாமியார் அங்க தான் இருக்கா.... அதை மனசுல வெச்சுக்கிட்டு நடந்துக்கோ புரிஞ்சுதா??” அம்மாவின் போதனையைக்கேட்டு புதுக்கல்யாணம் ஆகி மஞ்சளின் மெருகு குறையாமல் கயிறு...</description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div><img src="http://ootynews.files.wordpress.com/2012/04/409363_233353063411316_100002098730043_551967_1260416557_n.jpg?w=310" border="0" alt="" /><br />
<br />
”கிருஷ்ணா உன் மாமியார் அங்க தான் இருக்கா.... அதை மனசுல வெச்சுக்கிட்டு நடந்துக்கோ புரிஞ்சுதா??” அம்மாவின் போதனையைக்கேட்டு புதுக்கல்யாணம் ஆகி மஞ்சளின் மெருகு குறையாமல் கயிறு பளபளக்க நின்றிருக்கும் கிருஷ்ணா செக்குமாடு போல் மண்டையை ஆட்டினாள்.... <br />
<br />
”எடுத்ததுமே எல்லா வேலையும் எனக்கு தெரியும் என்பது போல பாய்ஞ்சு பாய்ஞ்சு செய்துடாதே என்ன நான் சொல்வது கேக்குதா மரமண்டை போல் நிக்குறியே” என்று உலுக்கினாள் அம்மா....<br />
<br />
”சரிம்ம்மா.... கிளம்பறோம் என்னை ஆசீர்வாதம் பண்ணு...”<br />
<br />
”என் கண்ணே நீ இங்க எவ்ளோ சுதந்திரமா இஷ்டப்பட்டதை சாப்பிட்டு நிம்மதியா காலாட்டிக்கிட்டு இருந்தியே என் தங்கம்... இனி போகும் இடத்தில் எப்படி எல்லாம் இருப்பியோ கஷ்டப்படுவியோ தெரியலையே” என்று மூக்கு சிந்தினாள் அம்மா கற்பகம்....<br />
<br />
”போதும் போதும் உன் போதனை முதல்ல மகளை நல்லதைச்சொல்லி அனுப்புவியா இப்படி பொல்லாப்பு விஷயங்களை உருவேத்தி அனுப்புறியே” என்று சங்கடப்பட்டார் சுந்தரம்....<br />
<br />
இது எதுவும் கண்டும் காணாதபடி அமைதியாக தன் லேப்டாப்பில் வேலைகளை முடித்துக்கொண்டிருந்தான் ஸ்ரீநாத்....<br />
<br />
மருமகளை வரவேற்கும் முயற்சியில் துரிதமாக இயங்கிக்கொண்டிருந்தாள் முத்துமணி கணவனை இழந்தததால் தான் சென்று முன்பில் நிற்கவேண்டாமென்று உறவுக்கார பெண்மணியை ஆரத்தி கரைக்க தயார் செய்ய சொன்னாள்...<br />
<br />
கணவனை இழந்தப்பின் மகனை படிக்கவைக்க எல்லா சராசரி பெண்களைப்போலவே தானும் ஒற்றையாய் நின்று போராடி ஜெயித்து தாயின் அன்பில் உருகும் மகனை நல்லமுறையில் படிக்கவைத்து வெளிநாட்டில் கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு வந்தபோதும் தன் தாய்நாட்டில் இருப்பதையே ஸ்ரீநாத்தும் விரும்பினான் இரண்டு காரணங்களால் ஒன்று தாய்மண்ணை விட்டு பிரிய இஷ்டமில்லாததால் இன்னொன்று தன் தாயை தன் தாய்நாட்டில் இருந்து பிரித்துச்செல்ல இஷ்டப்படாததால்....<br />
<br />
”கார் வந்திருச்சு வாங்க வாங்க ஆரத்தி ரெடியா?” என்று எங்கிருந்தோ ஒரு கிழவி குரல் கொடுக்க புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து நின்றது கார் வீட்டருகே...<br />
<br />
பெரிய மாளிகை போல் இல்லை என்றாலும் தோட்டம் நிறைந்த அழகு வீடாக தான் இருந்தது முத்துமணி கைவண்ணத்தில் உருப்பெற்ற செடிகொடிகள் மரங்கள் எல்லாமே கிருஷ்ணாவை நலம்விசாரித்தது இளங்காற்றை வீசி....<br />
<br />
பறக்கும் தலைமுடியை அடக்கமாய் கையில் ஒதுக்கி அமைதியாக கீழிறங்கினாள் கிருஷ்ணா. பின்னே ஸ்ரீநாத்தும் இறங்கினான் லேப்டாப்பை விடாது கையில் எடுத்துக்கொண்டு....<br />
<br />
சமையற்கட்டில் இருந்து எட்டி எட்டி தன் மருமகளின் மகனின் வரவை பூரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் முத்துமணி....<br />
<br />
ஆரத்தி கரைத்து எடுத்துக்கொண்டு வந்த பெண்மணியை தலைநிமிர்ந்து பார்த்து அத்தை எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் கிருஷ்ணா...<br />
<br />
”அட அவளெல்லாம் வரக்கூடாதும்மா நல்ல காரியத்துக்கு” என்று சொல்லிக்கொண்டே ஆரத்தி தட்டை சுற்றத்தொடங்கினாள் அந்த பெண்மணி..<br />
<br />
கிருஷ்ணா தடுத்து நிறுத்திவிட்டு ”அம்மா எங்க இருக்கீங்க?” என்று குரல் கொடுத்தபோது அதிர்ச்சியுடன் முத்துமணி வந்து நின்றாள் கூச்சத்துடன்...<br />
<br />
”எங்கள் வாழ்வு நல்லா இருக்கனும்னு நினைப்பதில் உங்களை விட மனம் நிறைந்து ஆசி தர யாரால் முடியும்? வாங்க நீங்க தான் ஆரத்தி சுத்தனும்” என்று அன்புடன் அணைத்து முன்பு இழுத்தாள் கிருஷ்ணா முத்துமணியை...<br />
<br />
எல்லோரும் ஆ என்று வாய் பிளக்க கண்ணில் துளிர்த்த நீரை பெருமிதத்துடன் சுண்டி விட்டு ஆரத்தி சுற்றினாள் முத்துமணி...<br />
<br />
ஆச்சர்யத்துடன் பார்த்தான் ஸ்ரீநாத்.....<br />
<br />
வீட்டில் அங்கே மாமியார் கொடுத்த போதனை என்ன ஆனால் இவளென்னடான்னா என்று வியந்தான்....<br />
<br />
உள்ளே வந்ததும் கூட்டம் நெம்பி தள்ளி புது மருமகளை எட்டி பார்த்தது....<br />
<br />
முத்து மணி அவர்களை உட்காரவைத்துவிட்டு பால் பழம் கொண்டு வர ஓடினாள்...<br />
<br />
”அம்மா இருங்க... முதலில் மாமனார் படத்திற்கு விளக்கேற்றிவிட்டு அதன்பின் சாப்பிடலாம்...” என்று சொன்னதும் முத்துமணி மனம் நெகிழ்ந்து போய் பார்த்தாள் தன் மருமகளை....<br />
<br />
அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளோர் எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர் இப்படி ஒரு காட்சியை தொலைக்காட்சியில் கூட கண்டு பழக்கமில்லாதோர் எப்படா மாமியார் மருமகள் சண்டை வரும் இடையில் போய் பஞ்சாயத்து செய்யலாம்னு காத்திருந்த கிழடுகள் எல்லோரும் வாயடைத்து போனர்...<br />
<br />
இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா என்று ஆச்சர்யப்பட்டனர்....<br />
<br />
எல்லோரும் சாப்பிடும்போது மாமியாரை தன் பக்கத்திலேயே அமர்த்திக்கொண்டாள் கிருஷ்ணா...<br />
<br />
சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் ஆளாளுக்கு கிளம்ப பாத்திரங்கள் எல்லாம் அப்படியே கிடந்தது...<br />
<br />
கிருஷ்ணா உடனே புடவையை இழுத்துக்கட்டிக்கொண்டு சாமான் எல்லாம் பர பரவென்று தேய்க்க ஆரம்பித்தாள்..<br />
<br />
”உனக்கு ஏம்மா சிரமம் நீ போய் கொஞ்சம் ஓய்வெடு நான் செய்துப்பேன் தானே?” என்று தடுத்தாள் முத்துமணி...<br />
<br />
மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சொன்னாள், ”அம்மா நீங்களும் தானே களைப்பா இருக்கீங்க நீங்க ஓய்வெடுங்க” என்று....<br />
<br />
இரவு மெல்லிய வெளிச்சத்தில் நறுமணத்துடன் வந்து அமர்ந்தாள் கிருஷ்ணா ஸ்ரீநாத் அருகே...<br />
<br />
மெல்லிய இசையில் ”ஜெய க்ருஷ்ணா முகுந்தா முராரே” பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது ரூமில்....<br />
<br />
ஸ்ரீநாத் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு அமைதியாக அவளைப் பார்த்தான்...<br />
<br />
”என்ன பாக்குறீங்க?” என்று தலைகுனிந்தாள்..<br />
<br />
”எனக்கு ஒரு விஷயம் புரியலை க்ருஷ்” என்றான்...<br />
<br />
”என்னவாம்...?”<br />
<br />
“உங்கம்மா கிளம்பும்போது உனக்கு சொன்னது என்ன ஆனால் நீ இங்க செய்வது” என்ன என்றான்...<br />
<br />
”நீங்க நினைப்பது சரியே”....<br />
<br />
”எல்லா அம்மாக்கள் எல்லா பொண்ணுக்கும் சொல்வதை தான் எங்கம்மாவும் சொன்னாங்க”...<br />
<br />
”ஆனால் எங்களுக்குன்னு அறிவு இருக்கு தானே?”<br />
<br />
”அது என் வீடுன்னா இதுவும் என் வீடு தானே?”<br />
<br />
”அங்க இருப்பது என் அம்மா அப்பான்னா இங்க உங்களை நம்பி என்னையே கொடுத்தப்பின் இன்னும் என்ன வேற்றுமை? இங்க இருப்பதும் என்னை தங்கம் போல் பார்த்துக்கும் அம்மாவே தான்னு நான் நம்பி தானே என்னை கொடுத்தாங்க?”<br />
<br />
”வீடு என்னிக்கு கோவிலாகும் தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்<br />
<br />
”ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் க்ருஷ்...தொடங்கிட்டியா லெக்சர்?” என்று கொட்டாவி விட்டான்....<br />
<br />
”ஹே... கிண்டலா?” என்று அவன் தோளில் வலிக்காது குத்தினாள்...<br />
<br />
”இல்லப்பா சும்மாத்தான்...”<br />
<br />
”ஆனால் மனம் கொள்ளும் அளவுக்கு ஐயா சந்தோஷமா இருக்கேன்...”<br />
<br />
”ஏனாம்?” நாணத்துடன் கேட்டாள்...<br />
<br />
”என்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களை நான் சொல்லாமல் நீயே புரிஞ்சு என்னை நல்லபடி பார்த்துக்க எனக்கு தாயன்புடன் கூடிய ஒரு இணை கிடைத்ததுக்கு தான்” என்று இழுத்து அணைத்துக்கொண்டான்....<br />
<br />
வளையல் ஓசையுடன் சிணுங்கல் ஓசை வெளியே விளக்கணைக்க வந்த முத்துமணி காதில் விழ இறைவனுக்கு நன்றி கூறி விளக்கணைத்தாள்.... நல்ல மருமகள் வீட்டுக்கு வந்தால் வீடு கண்டிப்பாக கோவிலாகும் என்பதில் என்ன சந்தேகம்???<br />
<br />
கதை படிச்சதும் எல்லாரும் ஆச்சர்யமா கேப்பீங்களே என்ன ஒரு ட்விஸ்டும் இல்லை ஒரு த்ரில்லிங்கும் இல்லைன்னு..... <br />
<br />
அன்பை மட்டுமே முதலீடா போட்டு தொடங்கும் வாழ்க்கை கண்டிப்பா வெற்றியுடன் நன்மக்களைப்பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லப்பிள்ளைகளை உருவாக்கித்தருவாங்க என்பதில் என்ன சந்தேகம்?<br />
<br />
அன்பு மட்டுமே அளவில்லாமல் இருக்கும் இடமெல்லாம் சண்டை சச்சரவு ஏது??<br />
<br />
“ட்விஸ்ட் எதிர்ப்பார்த்து வந்தவங்களுக்கு வெவ்வெவ்வ்வ்வெவ்வ்வே... ”</div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/50-சிறுகதைகள்-தொடர்கதைகள்">சிறுகதைகள், தொடர்கதைகள்</category>
			<dc:creator>மஞ்சுபாஷிணி</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29237-மனைவி-அமைவதெல்லாம்</guid>
		</item>
		<item>
			<title>சுயம்வரம்</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29236-சுயம்வரம்?goto=newpost</link>
			<pubDate>Thu, 17 May 2012 07:52:34 GMT</pubDate>
			<description><![CDATA[யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது.  
 
எழுந்து சென்று கதவைத் திறந்தார் தணிகாசலம். 
 
எதிரே புரோக்கர் பொன்னம்பலம் நின்று கொண்டிருந்தார். 
 
" வாங்க ! பொன்னம்பலம்! உள்ளே வாங்க! என்ன ! நான் சொன்ன மாதிரி பாப்பாவோட அழகுக்கும், அறிவுக்கும் ஏத்தமாதிரி வரன் கொண்டு வந்திருக்கீங்களா? " 
 
" நாலு வரன் கொண்டு...]]></description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div>யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. <br />
<br />
எழுந்து சென்று கதவைத் திறந்தார் தணிகாசலம்.<br />
<br />
எதிரே புரோக்கர் பொன்னம்பலம் நின்று கொண்டிருந்தார்.<br />
<br />
&quot; வாங்க ! பொன்னம்பலம்! உள்ளே வாங்க! என்ன ! நான் சொன்ன மாதிரி பாப்பாவோட அழகுக்கும், அறிவுக்கும் ஏத்தமாதிரி வரன் கொண்டு வந்திருக்கீங்களா? &quot;<br />
<br />
&quot; நாலு வரன் கொண்டு வந்திருக்கேன் தணிகாசலம். பாப்பாவ வரச் சொல்லுங்க ! போட்டோவைப் பார்க்கட்டும்; நீங்களும் பாருங்க ! ரெண்டுபேரும் கலந்து பேசி உங்க முடிவச் சொல்லுங்க! அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்தை முடிச்சிருவோம்! &quot;<br />
<br />
&quot; பாப்பா! &quot; தன் மகளை அழைத்தார் தணிகாசலம்.<br />
<br />
&quot; என்னப்பா ? &quot; என்று கேட்டபடியே தணிகாசலத்தின் மகள் பாப்பா வந்தாள்.<br />
<br />
&quot; இப்படி உட்கார் ! புரோக்கர் நாலு வரன் கொண்டு வந்திருக்கார்; போட்டோவைப் பாத்து உன் முடிவைச் சொல்லு !&quot;<br />
<br />
&quot; சரிப்பா !&quot;<br />
<br />
புரோக்கர் முதல் போட்டோவைக் காட்டி, &quot; இவர்தான் பலாப்பழ மாப்பிள்ளை! &quot; என்று சொன்னார். <br />
<br />
மாப்பிள்ளை கன்னங்கரேலென்று இருந்தார். முன்வரிசைப் பற்கள் வெளிப்புறமாக நீண்டிருந்தன.<br />
<br />
இரண்டாவது போட்டோவைக் காட்டி, &quot; இவர்தான் வெங்காய மாப்பிள்ளை &quot; என்று சொன்னார்.<br />
<br />
மாப்பிள்ளையின் உடல் குண்டாகவும், வாய் பெரிதாகவும் இருந்தது.<br />
<br />
மூன்றாவது போட்டோவைக் காட்டி , &quot; இவர்தான் விளாம்பழ மாப்பிள்ளை &quot; என்று சொன்னார்.<br />
<br />
மாப்பிள்ளை நீண்ட முடியுடனும், தாடியுடனும் காணப்பட்டார்.<br />
<br />
நான்காவது போட்டோவைக் காட்டி, &quot; இவர்தான் காஞ்சிரம் பழ மாப்பிள்ளை &quot; என்று சொன்னார்.<br />
<br />
மாப்பிள்ளை கோட் சூட் அணிந்து , சிவந்த நிறத்துடனும் அழகாகவும் , கவர்ச்சியாகவும் இருந்தார்.<br />
<br />
<br />
இதையெல்லாம் கேட்ட தணிகாசலத்திற்கு முகம் சிவந்து , கோபம் மூக்குக்கு மேலே வந்துவிட்டது. ' அட சரிதான் நிறுத்தய்யா! என் பொண்ணுக்கு ஏத்த மாப்பிள்ளையா பாக்கச் சொன்னா , தள்ளு வண்டியில பழம் விக்குற பசங்களோட போட்டோவை எல்லாம் கொண்டு வந்து காட்டறியே! எழுந்து போய்யா வெளியில!&quot; பொரிந்து தள்ளினார் தணிகாசலம்.<br />
<br />
&quot; கோபப்படாதீங்க தணிகாசலம்! மாப்பிள்ளைங்க நாலு பேரும் படிச்சு , நல்ல உத்தியோகத்துல இருக்காங்க ! கை நிறைய சம்பாதிக்கிறாங்க! நான் சொன்னது அவங்களோட குணத்தைப் பத்தி . பாப்பா ! நீதான் ரொம்ப அறிவாளியாச்சே! பாத்து சொல்லும்மா! உனக்கு யாரைப் பிடிச்சிருக்கு ?&quot;<br />
<br />
பாப்பா பத்து நிமிடம் யோசனை செய்தாள். பிறகு தன்னுடைய தந்தையைப் பார்த்து,&quot; அப்பா ! நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க ! கேட்டுட்டு உங்க முடிவைச் சொல்லுங்க!<br />
<br />
இந்த வெங்காயம் இருக்கிறதே வெங்காயம்! அதை உரிக்க உரிக்க , உள்ளே ஒன்றும் இருக்காது; உரிப்பவர் கண்ணிலிருந்து கண்ணீர்தான் வரும். அதுபோல இந்த வெங்காய மாப்பிள்ளை ஒரு வாய்ச் சவடால் பேர்வழி! வாய்ப்பந்தல் போடுவதில் வல்லவராக இருப்பார். வாழ்க்கைக்குப் பிரயோஜனம் இல்லை; இவரைக் கட்டிக் கொண்டால், கவலையும், கண்ணீரும் தான் மிஞ்சும்.<br />
<br />
அடுத்து விளாம்பழம் இருக்கிறதே விளாம்பழம்! உள்ளே இருக்கின்ற பழம் , மேலே இருக்கின்ற ஓட்டோடு, ஒட்டியும் ஒட்டாமலும் காணப்படும். மேலும் அந்தப் பழத்தை அப்படியே சாப்பிடவும் முடியாது; வெல்லத்தோடு பிசைந்து சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும். அதுபோல இந்த விளாம்பழ மாப்பிள்ளை வாழ்க்கையோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பார்; தனியாக இவரால் இயங்க முடியாது; மற்றவர்களைச் சார்ந்தே இருப்பார். இவரைக் கட்டிக் கொண்டால், வாழ்க்கையில் தனிமை இருக்குமே தவிர இனிமை இருக்காது.<br />
<br />
அடுத்து இந்த காஞ்சிரம் பழம் இருக்கிறதே காஞ்சிரம் பழம், பார்ப்பதற்குப் பளபளப்பாக இருக்குமே தவிர பசியாறுவதற்கு உதவாது. அதுபோல இந்தக் காஞ்சிரம் பழ மாப்பிள்ளைப் பார்ப்பதற்கு டிப் டாப்பாக இருந்தாலும், வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைத் தாங்கக்கூடிய வலிமை பெற்றவராக இருக்கமாட்டார். இவரைக் கட்டிக் கொண்டால் ஆடம்பர வாழ்க்கை வாழலாமே தவிர, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ இயலாது. கடமை ஆற்ற இயலாது. கடன் கட்டுவதற்குத் தான் சம்பளம் சரியாக இருக்கும்.<br />
<br />
இந்தப் பலாப்பழம் இருக்கிறதே பலாப்பழம்; வெளியில் பார்ப்பதற்குக் கரடு  முரடாக இருந்தாலும் , உள்ளே இனிமையான சுளைகளைக் கொண்டிருக்கும். அதுபோல இந்தப் பலாப்பழ மாப்பிள்ளையும் பார்ப்பதற்குக் கருப்பாகவும், கரடு முரடாகவும் இருந்தாலும் , உண்மையில் குடும்பம் நடத்துவதற்குத் தேவையான நல்ல குணங்களைக் கொண்டிருப்பார்; நான் விரும்புவதும் இவரைத்தான்.&quot; என்று சொல்லி முடித்தாள் பாப்பா.<br />
<br />
&quot; பாப்பா ! அருமையான செலக் ஷன் !&quot; என்று சொல்லித் தன் மகளைப் பாராட்டினார் தணிகாசலம்.</div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/50-சிறுகதைகள்-தொடர்கதைகள்">சிறுகதைகள், தொடர்கதைகள்</category>
			<dc:creator>M.Jagadeesan</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29236-சுயம்வரம்</guid>
		</item>
		<item>
			<title>சிக்கன் கட்லெட்</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29235-சிக்கன்-கட்லெட்?goto=newpost</link>
			<pubDate>Thu, 17 May 2012 01:24:38 GMT</pubDate>
			<description />
			<content:encoded />
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/62-சமையல்-கலை-அழகுக்-குறிப்புகள்">சமையல் கலை, அழகுக் குறிப்புகள்</category>
			<dc:creator>ravikrishnan</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29235-சிக்கன்-கட்லெட்</guid>
		</item>
		<item>
			<title>நினைவுகளின் நெடி.....</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29234-நினைவுகளின்-நெடி?goto=newpost</link>
			<pubDate>Wed, 16 May 2012 16:16:27 GMT</pubDate>
			<description>Image: http://i4.tagstat.com/image05/f/969b/00F0054rVqr.jpg  
நினைவுகளின் நெடி 
நிலைகுலைய வைக்கிறது 
 
துரோகங்களின் கணக்கோ 
தலைச்சுற்ற வைக்கிறது 
 
பிரிவின் வேதனையோ 
உயிரை வதைக்கிறது</description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div><img src="http://i4.tagstat.com/image05/f/969b/00F0054rVqr.jpg" border="0" alt="" /><br />
<font color="#800080">நினைவுகளின் நெடி<br />
நிலைகுலைய வைக்கிறது<br />
<br />
துரோகங்களின் கணக்கோ<br />
தலைச்சுற்ற வைக்கிறது<br />
<br />
பிரிவின் வேதனையோ<br />
உயிரை வதைக்கிறது<br />
<br />
செய்த தவறுகளை<br />
மறந்து மன்னித்துவிட்டால்<br />
ஆசுவாசம் கிடைக்குமா?<br />
<br />
மன்னிக்கும் மனப்பாங்கு<br />
மனிதனுக்கு இருக்குமா?<br />
<br />
மறக்கும் சக்தி<br />
உள்ளத்துக்கு உண்டா?<br />
<br />
விடை தெரியாத கேள்விகள்<br />
விடியும்வரை அலைக்கழிக்கிறது<br />
<br />
உறக்கம் மறுத்த விழிகளோ<br />
விட்டம் வெறிக்கிறது<br />
<br />
முடிவற்ற தொடராய்<br />
நெஞ்சம் வலிக்கச்செய்கிறது<br />
<br />
செயல்களின் காரணகர்த்தா<br />
இறைவன் என்றால்<br />
விதி என்றுச்சொல்லி<br />
சமாதானம் அடையலாம்<br />
<br />
மனிதனின் சதி என்றால்<br />
பொறுமையாய்<br />
அமைதியாய்<br />
மௌனமாய்<br />
சாத்வீகமாய்<br />
எதிர்க்க துவங்கலாம்!!!</font></div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/87-குறுங்-கவிதைகள்">குறுங் கவிதைகள்</category>
			<dc:creator>மஞ்சுபாஷிணி</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29234-நினைவுகளின்-நெடி</guid>
		</item>
		<item>
			<title>யாரு பெத்த புள்ளைங்களோ.</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29233-யாரு-பெத்த-புள்ளைங்களோ?goto=newpost</link>
			<pubDate>Wed, 16 May 2012 11:39:59 GMT</pubDate>
			<description>Image: http://i1168.photobucket.com/albums/r486/rkvm/559610_385034818213520_346727412044261_1125584_452475328_n.jpg  
 
யாரு பெத்த புள்ளைங்களோ... 
பாவம் இப்படி கிழிஞ்ச டிரஸ் போட்டிட்டு சுத்துதுங்க.:lachen001::lachen001::lachen001:</description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div><img src="http://i1168.photobucket.com/albums/r486/rkvm/559610_385034818213520_346727412044261_1125584_452475328_n.jpg" border="0" alt="" /><br />
<br />
யாரு பெத்த புள்ளைங்களோ...<br />
பாவம் இப்படி கிழிஞ்ச டிரஸ் போட்டிட்டு சுத்துதுங்க.:lachen001::lachen001::lachen001:</div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/49-சிரிப்புகள்-விடுகதைகள்">சிரிப்புகள், விடுகதைகள்</category>
			<dc:creator>ravikrishnan</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29233-யாரு-பெத்த-புள்ளைங்களோ</guid>
		</item>
		<item>
			<title>மனித வாழ்வு</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29232-மனித-வாழ்வு?goto=newpost</link>
			<pubDate>Wed, 16 May 2012 10:37:40 GMT</pubDate>
			<description>*மனித வாழ்வு * 
 
 
 
 
தேவைகள் அதிகமானால்  
தேடல்கள் அதிகமாகும்.  
சோதனை தொடர்ந்திடும்கால் 
சோர்வுகள் அலைக்கழிக்கும் 
சாதகம் இல்லையென்றால்</description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div><b>மனித வாழ்வு </b><br />
<br />
<br />
<br />
<br />
<font color="#800080">தேவைகள் அதிகமானால் <br />
தேடல்கள் அதிகமாகும். <br />
சோதனை தொடர்ந்திடும்கால்<br />
சோர்வுகள் அலைக்கழிக்கும்<br />
சாதகம் இல்லையென்றால்<br />
பாதகம் செய்ய தயங்காமாந்தரிடம்<br />
வேதனைஎன்று சென்றால் <br />
போதனை செய்தே கொல்வார் <br />
வாதைகள் அனைத்தும் வென்று <br />
சாதனை செய்யும் நாளில்<br />
மேதை நீ என்றே சொல்வாரவர்<br />
புகழ் போதைக்கு நீயும் மயங்கி <br />
பேதை நீ யாகிடும்கால்<br />
தேவைகள் அதிகமாகும்<br />
மீண்டும் தேடல்கள் <br />
உன்னை சுழற்றும்.</font></div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/48-கவிதைகள்-பாடல்கள்">கவிதைகள், பாடல்கள்</category>
			<dc:creator>Hega</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29232-மனித-வாழ்வு</guid>
		</item>
		<item>
			<title>இந்தியா ரயில் இன்போ டாட் காம்</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29231-இந்தியா-ரயில்-இன்போ-டாட்-காம்?goto=newpost</link>
			<pubDate>Wed, 16 May 2012 10:02:13 GMT</pubDate>
			<description />
			<content:encoded />
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/60-பயனுள்ள-தகவல்கள்-கட்டுரைகள்">பயனுள்ள தகவல்கள், கட்டுரைகள்</category>
			<dc:creator>ravikrishnan</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29231-இந்தியா-ரயில்-இன்போ-டாட்-காம்</guid>
		</item>
		<item>
			<title>விண்ணைத் தாண்டி வருவாயா..</title>
			<link>http://www.tamilmantram.com/vb/showthread.php/29230-விண்ணைத்-தாண்டி-வருவாயா?goto=newpost</link>
			<pubDate>Wed, 16 May 2012 04:54:04 GMT</pubDate>
			<description>என்னை நேசிக்கவில்லை நீ ! 
பிரியத் தூண்டும் உண்மை..  
உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்.. 
பிரியாமல் தவிப்பதன் உண்மை ! 
 
நேசிக்காமல் கொல்கிறாய் நீ 
என் நேசத்திலிருந்தே 
சுவாசத்தை கிரகிக்கிறேன் நான் ! 
 
தொடங்கிய புள்ளியில் மீண்டும் மீண்டும்</description>
			<content:encoded><![CDATA[<!-- BEGIN TEMPLATE: postbit_external -->
<div>என்னை நேசிக்கவில்லை நீ !<br />
பிரியத் தூண்டும் உண்மை.. <br />
உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்..<br />
பிரியாமல் தவிப்பதன் உண்மை !<br />
<br />
நேசிக்காமல் கொல்கிறாய் நீ<br />
என் நேசத்திலிருந்தே<br />
சுவாசத்தை கிரகிக்கிறேன் நான் !<br />
<br />
தொடங்கிய புள்ளியில் மீண்டும் மீண்டும்<br />
தள்ளி இழுக்கும் சுழலில் நான் ! <br />
ஒரு பாதி மறுதலிப்பும்<br />
மறு பாதி மெளனமுமாய் நீ..<br />
<br />
உன் கோபம் , <br />
கண்டுகொள்ளா முகபாவத்திற்கு ,<br />
வளைந்து கொடுக்கும் என் நேசம்...<br />
நீ அறியாமல் உன்னையும் <br />
வளைத்திடும் அறிகுறிகள் கண்டு<br />
புன்னகைக்கிறேன் !<br />
<br />
கர்வக் கோட்டையமைக்கிறாய் உனைச்சுற்றி..<br />
என் சீண்டல்களால் அதை தகர்க்கிறேன் !<br />
காதலையோ கண்ணீரையோ<br />
காட்டிக்கொள்ளாத உன் கர்வமென்ற<br />
விண்ணைத் தாண்டி வா..<br />
<br />
சேர்ந்து அழுதால் கண்ணீரையும்<br />
கரைக்கும் நம் நேசம் !</div>


<!-- END TEMPLATE: postbit_external -->]]></content:encoded>
			<category domain="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/87-குறுங்-கவிதைகள்">குறுங் கவிதைகள்</category>
			<dc:creator>minmini11</dc:creator>
			<guid isPermaLink="true">http://www.tamilmantram.com/vb/showthread.php/29230-விண்ணைத்-தாண்டி-வருவாயா</guid>
		</item>
	</channel>
</rss>

