PDA

View Full Version : காதல்



இனியவள்
08-06-2007, 04:29 PM
கண்ணிரிலே வாழ்கிறேன்
கனவாகிப் போனவனே உன்னை நினைத்து

மரணத்தில் உன்னை மறக்கலாம் என நினைத்தேன்
என்னைக் கொல்ல எனக்கு துணிவில்லை
தூக்கத்தில் உன்னை மறக்கலாம் என நினைத்தேன்
உன்னோடு கைகோர்த்து திரிந்த
காலங்கள் கனவில் வந்தது

தோற்றாலும் விருப்பப் படும் இந்த
தெய்வீக காதலை மறப்பதெப்படி
சிலுவைகளாய் உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
நான் உயிரோடு இறந்து விட்டேன்

அக்னி
08-06-2007, 04:31 PM
நான் உயிரோடு இறந்து விட்டேன்
துயரத்தின் உச்சியில் மனதைப் பிழிந்து வரும் வார்த்தைகள்...

நெஞ்சத்தில் ஓர் அழுத்தம் தரும் வரிகளில் கவிதைகளை அடுக்குகிறீர்களே...

அறிஞர்
08-06-2007, 04:35 PM
பிரிந்து காதல் தெய்வீக காதலாகுமா.....
-------
தெய்வீக காதலை மதியாதவனை... எண்ணி..
தன்னை சாகடிக்கு காதலியின் காதலை என்ன சொல்வது...
---

தாமரை
08-06-2007, 04:38 PM
காதல் என்பது
பிரிவதுமல்ல
சேர்வதுமல்ல
வாழ்வது

அமரன்
08-06-2007, 04:41 PM
கதலர்கள் மரணித்தாலும் காதல் மரணிப்பதில்லை......
நினைகளைச் சுமந்து கொண்டு உயிர் இருந்தும் நடைப்பிணமாக வாழ்வோர் பலர்...
பாராட்டுகள்.

அக்னி
08-06-2007, 04:42 PM
காதல் என்பது
பிரிவதுமல்ல
சேர்வதுமல்ல
வாழ்வது
காதலிப்போர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது...