PDA

View Full Version : இதயங்களே....!



வசீகரன்
08-06-2007, 12:28 PM
இதயங்களில் இருக்கம் எதற்க்கு...! இறைவன் படைத்தான் பூவியை அழகுற நமக்கு...!
கலைகள் இருக்கிறது... நாம் களிப்புற... கவிதைகள் இருக்கிறது.... இதயங்கள்....இசைவுற....
சிந்தனைகளில் சிறப்பிருந்தால்... சிகரம் தொடலாம்...
உற்சாகம் உடன் இருந்தால்.... உலகையே உலா வரலாம்....!
மலர்கள் மலர்ந்தது...மனம் பரப்ப
மனிதம் மலர்ந்தது... மகிழ்ச்சிக்காக...!

விகடன்
08-06-2007, 12:33 PM
மலர்கள் மலர்ந்தது...மனம் பரப்ப
மனிதம் மலர்ந்தது... மகிழ்ச்சிக்காக...!

மணம் என்று வரவேண்டுமென்றி நினைக்கிறேன்.

கவிதையின் கரு நன்றாக இருக்கிறது.
பாராட்டுக்கள்.

அக்னி
08-06-2007, 12:38 PM
சிந்தனைகளில் சிறப்பிருந்தால்... சிகரம் தொடலாம்...
அழகிய வரிகள்...
பாராட்டுக்கள் வசீகரன். வசீகரிக்கிறீர்கள்...


முக்கியமான இடங்களில் எழுத்துப் பிழைகளைத் தவிருங்கள். அல்லாவிடின், கருத்து மாறிவிடும்...

இதயங்களில் இறுக்கம் எதற்கு...! இறைவன் படைத்தான் புவியை அழகுற நமக்கு...!
கலைகள் இருக்கிறது... நாம் களிப்புற... கவிதைகள் இருக்கிறது.... இதயங்கள்....இசைவுற....
சிந்தனைகளில் சிறப்பிருந்தால்... சிகரம் தொடலாம்...
உற்சாகம் உடன் இருந்தால்.... உலகையே உலா வரலாம்....!
மலர்கள் மலர்ந்தது...மணம் பரப்ப
மனிதம் மலர்ந்தது... மகிழ்ச்சிக்காக...!