PDA

View Full Version : சென்று விடு உயிரே



இனியவள்
08-06-2007, 09:04 AM
எல்லாமே சென்று விட்டன
என்னை விட்டு விட்டு
நீ மட்டும் ஏன் என்னோடு
ஒட்டிக் கொண்டு
நீயும் சென்று விடு உயிரே
நான் நிம்மதியாக மட்டுமல்ல
நிரந்தரமாகவும் உறங்கி விடுவேன்.
மரணமென்ற தாலாட்டினைக் கோட்டுக் கொண்டு
மயானமென்ற கட்டிலிலே
அமைதியாக உறங்கிடுவேன்
சென்று விடு உயிரே
நிம்மதியற்ற இவ் வாழ்வை விட்டு
நிம்மதியான உலகத்திற்கு செல்ல....

அமரன்
08-06-2007, 09:33 AM
யாருக்குக்த்தான் நிம்மதி இங்கே? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்சினை. பணமில்லாதவனுக்கு பணம் வேண்டும் என்ற பிரச்சினை. பணம்படைத்தவனுக்கு அப்பணத்தைப் பாதுக்காக வேண்டும் என்ற பிரச்சினை. மேலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற பிரச்சினை. அன்பு கிடைக்காதவனுக்கு பிரச்சினை. அன்பு கிடைப்பவனுக்கும் பிரச்சினை. நித்தமும் பல பிரச்சினைகளில்தான் பூமியே சுற்றுகின்றது. அதற்குத் தீர்வு மரணம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
கவிதைக்கு நன்றி.