View Full Version : இதயப்புத்தகம்
இனியவள்
07-06-2007, 05:36 PM
இதயம் என்னும் புத்தகதில்
இரத்தத்தால் எழுதிய
உனது பெயரை
அழிக்க முடியவில்லையடா....
இதய அறைகளில்
நாம் பழகிய நாட்கள்
அழகாக இசை
மீட்டிக் கொண்டு இருகின்றன..
நான் இறக்கும் போதே
அந்த நினைவுகளும் இறக்கும்
என் உடல் தீயில் வேகும் போதே
உன் நினைவுகளும்
என் மனதை விட்டு அகழும் ...
விகடன்
07-06-2007, 06:01 PM
இரத்தத்தால் எழுதியிருக்கிறீர்கள்.
உண்மையிலேயே கொடூரமான காதல்.
இனியவள்
08-06-2007, 02:36 PM
இரத்தத்தால் எழுதியிருக்கிறீர்கள்.
உண்மையிலேயே கொடூரமான காதல்.
ஆஹா ஜாவா பேனாவால் கூட எழுதலாம் ஒரு மாறுதலுக்காக இரத்ததால் எழுதிவிட்டேன்
மனோஜ்
08-06-2007, 02:38 PM
அருமை
காதலின் ஆழம் அறிந்தவர் யாரும் இல்லையே
உங்களின் காதல் கவிஅதையும் அறிவித்து விட்டது
ஓவியா
08-06-2007, 02:44 PM
ஆழமான காதலோ!!!
நல்ல கவிதை, கவி சிந்தனை இருந்தாலே, ரசனை அதிகரிக்குமாம்.
பாராட்டுக்கள் தோழி.
உங்களுக்காக,
தெய்வீக காதலில்
காதலனின் சாம்பலிலும்
காதலியின் கூந்தல் வாசம் வரும்
நான் அடிக்கடி நினைக்கும் என் குட்டிக்கவிதை இது.
இனியவள்
08-06-2007, 03:23 PM
அருமை
காதலின் ஆழம் அறிந்தவர் யாரும் இல்லையே
உங்களின் காதல் கவிஅதையும் அறிவித்து விட்டது
நன்றி மனோஜ் ம்ம் நீங்கள் சொல்வது சரி தான் கடவுளுக்கு கூட காதலின் ஆழம் தெரியுமோ தெரியாது
இனியவள்
08-06-2007, 03:23 PM
ஆழமான காதலோ!!!
நல்ல கவிதை, கவி சிந்தனை இருந்தாலே, ரசனை அதிகரிக்குமாம்.
பாராட்டுக்கள் தோழி.
உங்களுக்காக,
நான் அடிக்கடி நினைக்கும் என் குட்டிக்கவிதை இது.
நன்றி தோழியே
அமரன்
08-06-2007, 03:33 PM
காதல்னா ஜாலி என்று நினைத்தேன். இப்படிப் பயமுறுத்திவிட்டீர்களே தோழி. பொதுவாக கவிதையை பேனாவால் எழுதிவார்கள். அதுவும் சிறப்பாக வந்துவிடும். சிலர் கவிதைகளை உணர்ச்சிகளால் எழுதுவார்கள். அது மிகவும் நன்றாக அமைந்து விடும். உங்கள் இந்தக்கவிதை இரண்டாம் ரகம். வாழ்த்துக்கள்.
இனியவள்
08-06-2007, 05:43 PM
காதல்னா ஜாலி என்று நினைத்தேன். இப்படிப் பயமுறுத்திவிட்டீர்களே தோழி. பொதுவாக கவிதையை பேனாவால் எழுதிவார்கள். அதுவும் சிறப்பாக வந்துவிடும். சிலர் கவிதைகளை உணர்ச்சிகளால் எழுதுவார்கள். அது மிகவும் நன்றாக அமைந்து விடும். உங்கள் இந்தக்கவிதை இரண்டாம் ரகம். வாழ்த்துக்கள்.
நன்றி
காதலில் ஜொலியும் இருக்கின்றது
சில காதல்கள் கல்யாணத்தில் முடிகின்றன
சில காதல்கள் கண்ணீர் அல்லது கல்லறையில் முடிகின்றன
சில காதல்கள் நினைவுகளின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றன