rambal
17-05-2003, 05:14 PM
கொடூர காதல்..
காதலெனும்
கோடரி வீசி
எறிந்து விட்டு
பட்ட காயத்திற்கு
தருகிறாய்
காலாவதியான
மருந்து...
உடலையே வீடாக்கி
குடியிருந்தவனை
நெருப்புத் துண்டம்
தூக்கிப் போட்டு
பொசுக்கிவிட்டு
எல்லாம் எரிந்து
முடிந்த பின்
வருகிறாய்
அணைப்பதற்கு
பயனில்லா நீர் கொண்டு...
பாதை வேறு
பயணம் வேறு
என்று என்வழியில்
போய் கொண்டிருந்தவனை
வழியில் மரம் போட்டு
வேறு வழி திருப்பிவிட்டு
வியாக்கியாணம்
செய்கிறாய்
சரியான பாதை
இதுவல்ல என்று...
பாறையாக
இருந்தவன் மீது
குண்டு போட்டு
சிதறடிக்கவிட்டு
இப்போது பேசுகிறாய்
நான் மிக
மென்மையானவன் என்று..
போதும்
நீயும் அந்த கொடூர காதலும்
விளையாடிய
விளையாட்டுக்கள்..
காதலெனும்
கோடரி வீசி
எறிந்து விட்டு
பட்ட காயத்திற்கு
தருகிறாய்
காலாவதியான
மருந்து...
உடலையே வீடாக்கி
குடியிருந்தவனை
நெருப்புத் துண்டம்
தூக்கிப் போட்டு
பொசுக்கிவிட்டு
எல்லாம் எரிந்து
முடிந்த பின்
வருகிறாய்
அணைப்பதற்கு
பயனில்லா நீர் கொண்டு...
பாதை வேறு
பயணம் வேறு
என்று என்வழியில்
போய் கொண்டிருந்தவனை
வழியில் மரம் போட்டு
வேறு வழி திருப்பிவிட்டு
வியாக்கியாணம்
செய்கிறாய்
சரியான பாதை
இதுவல்ல என்று...
பாறையாக
இருந்தவன் மீது
குண்டு போட்டு
சிதறடிக்கவிட்டு
இப்போது பேசுகிறாய்
நான் மிக
மென்மையானவன் என்று..
போதும்
நீயும் அந்த கொடூர காதலும்
விளையாடிய
விளையாட்டுக்கள்..