PDA

View Full Version : கலைஞர் 50 - சுவையான தொகுப்பு



umakarthick
05-06-2007, 09:20 AM
!
குளித்தலை தொகுதி வேட்பாளராக 1957&ல் ஜெயித்து தமிழக சட்டசபையில் நுழைந்த கலைஞர் கருணாநிதிக்கு இந்த ஆண்டு சட்டசபையில் அவரது பொன்விழா ஆண்டு. இந்த 50 ஆண்டுகளில், சட்டசபையில் கருணாநிதி உதிர்த்த நகைச்சுவை முத்துக்கள் பலப் பல. அவற்றில் சில முத்துக்கள் மலரும் நினைவுகளாக இங்கே..!

பீர் முகம்மது: விவசாயக் கூலிகளுக்குக் கருத்தடை ஆபரேஷன்கள் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் ஆபத்து இருக்கிறது. அரசு இதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்!

கருணாநிதி: கருத்தடை செய்துகொள்ள வேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பீர் முகம்மது கூட அவரது தந்தைக்கு 33&வது பிள்ளை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (8.3.68)

-----------------------
கே.விநாயகம்: மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?

கருணாநிதி: இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும். (14.3.69)

-----------------------
ஜேம்ஸ்: மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி ஆராய அமைக்கப்பட்டு இருக்கும் ராஜமன்னார் குழு, ஒன் சைடெட் லவ் போலத் தான் இருக்கிறது.

கருணாநிதி: ஒன் சைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை! (26.2.70)

-----------------------
அப்துல் லத்தீப்: கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவது பற்றி ஆலோசிக்குமா?

கருணாநிதி: ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலை கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது. (8.12.71)

-----------------------
கோவை செழியன்: ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசிய மய மாக்கிவிட்டால் பிரச்னை இருக்காது அல்லவா?

கருணாநிதி: ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனை வரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்! (18.12.71)

-----------------------
காமாட்சி: மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை... இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?

கருணாநிதி: மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன் னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே! (14.3.73)

-----------------------
கருணாநிதி: நாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ் காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.

அனந்தநாயகி: அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன் றைக்கு இங்கே வந்து உட்கார்ந் திருக்கிறீர்கள்!

கருணாநிதி: அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம். (23.3.73)

-----------------------
சோனையா: தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக் கிறது... தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறேன்.

கருணாநிதி: பல பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களைக் கூறி, உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்ட நான் விரும்ப வில்லை. (27.3.73)

-----------------------
பி.ஹெச்.பாண்டியன்: புலி பசித் தாலும் புல்லைத் தின்னாது!

கருணாநிதி: புல் என்பது புல்லா, bullலா? (16.2.1989)

-----------------------
பி.ஹெச்.பாண்டியன்: ஹை கோர்ட்டில் நீதிபதிகள் என்றைக்கு ஓய்வு பெறுகிறார்கள் என்ற செய்தியை ஓர் ஆண்டுக்கு முன்பே வாங்கி விட்டால், வழக்குகள் தேங்காது. இதற்கு முதல்வர் என்ன சொல் கிறார்?

கருணாநிதி: காலிகள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பாண்டியன் சொன்னது நல்ல யோசனைதான்! (7.4.89)

-----------------------
ஆர்.சிங்காரம்: இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானா? புதிய வித்வான் களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான் கள்!

கருணாநிதி: நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா? (4.5.89)

-----------------------
நூர்முகம்மது: கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல் வருடைய கருணை கொண்ட கடைக்கண் பார்வை குமரியின் மீது திருப்பப்பட்டு, அம் மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற் சாலையை அமைக்க, முதல்வர் முன் வருவாரா?

கருணாநிதி: குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது! (6.5.89)

-----------------------
பி.வி.ராஜேந்திரன்: உப்பு உற்பத்தி மரணப் படுக்கையில் கிடக்கிறது. மரணமே அடைந்து, அது சவப்பெட்டிக்குள் சென்று கொண்டு இருப்பதை உணர்கிறீர்களா?

கருணாநிதி: தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சவப்பெட்டிக்குள் போய்விட்டதா என்று கேட்கிறார்கள். சவப்பெட்டிக்குள் போனாலும் அது அழுகாமல் இருக்க, அதற்கும் உப்புதான் தேவை! (20.1.90)

-----------------------
ரகுமான்கான்: இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம் கூட ஜாமீனில்தான் இருக்கிறார்கள்!

கருணாநிதி: தவறான தகவல்! என்னையும் பேராசிரியரையும் அந்த வழக்கில் விடுதலை செய்துவிட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக் கிறார். (9.4.90)

-----------------------
வி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?

கருணாநிதி: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்! (24.4.90)

-----------------------
குமரி அனந்தன்: நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர் செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு ஐயப் பாடு...

கருணாநிதி: குமரி அனந்தனுக்கு அப்படியரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம். அதையும் முயற்சித்துப் பாருங்கள். (7.5.90)

(நன்றி : விகடன்)

umakarthick
07-06-2007, 06:32 AM
இதெல்லாம் யாரும் படிக்கலையா??

ஆதவா
07-06-2007, 06:53 AM
இங்கே 10 பேர் படித்திருக்கிறார்கள்... அதுபோக இது உங்கள் சொந்த படைப்பென்றால் உங்களுக்கு ஊக்கமாக சில வார்த்தைகள் இட்டிருப்பார்கள் அல்லவா? ஒருவேளை அடுத்தவர் பதிப்பென்றதும் அப்படி இருக்கலாம்... கவலை வேண்டாம் உமாகார்த்திக்..... நிறையபேர் படிப்பார்கள்..... எழுதியது வீண் போகாது.

umakarthick
07-06-2007, 09:35 AM
என்ன கொடுமை இது ..என் படைப்பா என்பதை விட படைப்பு எப்படி பட்டது என்பது தானே முக்கியம்

இதயம்
07-06-2007, 09:55 AM
இங்கு பின்னூட்ட ஊக்கம், பாராட்டு, விமர்சனம் என்பது மன்ற உறுப்பினரின் உழைப்பு, பயனுள்ள பதிப்பு என்ற வகையில் மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் வெட்டி ஒட்டியதில் உங்களுடைய பங்கு என்பது மிக குறைவு என்பதால் பின்னூட்டம் குறைவாக இருக்கலாம்.

உங்களுக்கு பரவாயில்லை. சில நேரங்களில் பக்கம், பக்கமாக படைப்புகளை சொந்தமாக படைத்தவர்களுக்கே பின்னூட்டம் கிடைப்பதில்லை. நீங்கள் அப்படி எத்தனை பேரை ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள்..?? சொல்லுங்கள் பார்க்கலாம்.!

ஓவியா
07-06-2007, 08:39 PM
என்ன கொடுமை இது ..என் படைப்பா என்பதை விட படைப்பு எப்படி பட்டது என்பது தானே முக்கியம்



மேற்ப்பார்வையாளர்களே,
தயவு செய்து இந்த கேள்விக்கு பதில் போடுங்களேன்.

umakarthick
08-06-2007, 08:30 AM
நல்ல கேள்வி இதயம்!

நானும் ஊக்கப் படுத்துவேன் ஒருவருடைய சொந்த எழுத்துக்கள் அருமையா இருந்தால்
இல்லையென்றால் அவர் நல்ல பதிவுகளை வெட்டி ஒட்டினால் பாராட்டி இதே போல் நிறைய போடுங்கள் என்பேன்

கேள்வி கேட்பது ரொம்ப எளிது!!

ஓவியா
08-06-2007, 12:10 PM
நல்ல கேள்வி இதயம்!

நானும் ஊக்கப் படுத்துவேன் ஒருவருடைய சொந்த எழுத்துக்கள் அருமையா இருந்தால்
இல்லையென்றால் அவர் நல்ல பதிவுகளை வெட்டி ஒட்டினால் பாராட்டி இதே போல் நிறைய போடுங்கள் என்பேன்

கேள்வி கேட்பது ரொம்ப எளிது!!


எல்லாரும் என்னை குறி வைத்து தாக்கி இருக்கீர்கள் , நான் இந்த குழுவில் சேரும் முன்னே நிறைய படித்திருக்கிறேன்..ஆனால் பின்னூட்டமிட முடிய வில்லை..கஷ்ட பட்டு அக்கவுன்ட் கிரியே பண்ணி உள்ளே நுழைந்த உடனே என் எழுத்துக்களை என் சேகரிப்பை முதலில் இட்டு விடலாம் என இட்டுக் கொண்டிருக்கிறேன்.
கிட்ட தட்ட இட்டு விட்டேன் ..இனிமே பாருங்க


வணக்கம் நண்பரே!!

இங்கே உங்களை யாரும் குறி வைத்து தாக்கி எழுதவில்லையே!,

உங்கள் படைபுகளை அள்ளித்தாருங்கள், படிப்பவருக்கு பிடித்திருந்தால் தயங்காமல் பின்னூட்டம் வரும், நானும் படித்து பின்னூட்டமிடுவோன்.

பின்னூட்டமிடுவது அவரவர் விருப்பமே, இதெல்லாம் யாரும் படிக்கலையா? மற்றும் என்ன கொடுமை இது ..என் படைப்பா என்பதை விட படைப்பு எப்படி பட்டது என்பது தானே முக்கியம் என்பது சரியான கேள்வியா? தெரியவில்லை, மேற்ப்பார்வையாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்)

தாங்களும் மற்றாவர்களின் படைப்புகளை வாசித்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துங்கள். உங்கள் திரிக்கு பின்னூட்டம் தானாக வரும்.

மன்றம் பதிவாளரின் சொந்த பதிவைதான் எதிர்ப்பர்கின்றது.

அப்படி இது நல்ல பதிவு, மக்களுக்கு தேவையான பதிவு என்று எண்ணும் பட்சத்தில், வெட்டி ஒட்டும் பதிவை சுட்டியுடன் இணைத்து, பதிவாளர் பெயரையும் இணைத்து, எங்கு பதிக்கப்பட்டது என்று சுட்டியைக்கொடுத்து பதிக்கலாம் தவறில்லை.

ஆனால் அடுத்தவர்களின் பதிவை, தங்களுடையது போல் கொடுக்கவேண்டாம் என்பதே மன்றத்தின் விதி. கவனிக்க நண்பரே தாங்கள் மற்றவர்களின் படைப்பை இங்கு கொடுகிறீர்கள் என்று நான் சொல்லவில்லை. விதிமுறையை சொன்னேன்.

நான் இந்த குழுவில் சேரும் முன்னே நிறைய படித்திருக்கிறேன்..என்று கூறியுள்ளீர்கள். நிறைய படித்திருக்கும் தங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சியே.

நன்றி.

பென்ஸ்
08-06-2007, 12:50 PM
மேற்ப்பார்வையாளர்களே,
தயவு செய்து இந்த கேள்விக்கு பதில் போடுங்களேன்.
கார்த்திக்,
நல்ல பதிவுகளாக இருந்தாலும், நம்முடையதாக இல்லாத பச்சத்தில் அதை கொடுப்பதில் சில விதிமுறைகள் மன்றத்தில் இருக்கிறது... அதனால் அடுத்தவர் கவிதைகளை கொடுக்கும் போது இலக்கிய பகுதியில் இட்டில் அதில் படைபின் சொந்தகாரர் பெயர் இட சொல்லுவோம், சில நேரம் உங்களை பொன்ற நல்ல படைப்பாளிகள் அடுத்தவரின் படைப்புகளை கொடுக்கும்போது அடுத்தவர் பெயரை விட்டுவிடுவது நடக்கிரது... அது நடக்காமல் இருக்க அனைவரும் இதில் கவணமாக இருக்கிறார்கள்...
உங்கள் பதிவுகள் வாசிக்க படுகின்றன, ரசிக்கபடுகின்றன, எதிர்பாக்கபடுகின்றன், அதை பதிக்க தாமதமாகும் பச்சத்திலோ, நீங்கள் வராமல் இருந்தாலோ தனிமடலில் "என்னாச்சு?" என்று கேட்க்கபடுகின்றன....
சரிதானே..???

ஆதவா
09-06-2007, 01:13 AM
நண்பர் உமாகார்த்திக் அவர்களே!
இதெல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள் புதியவர் என்பதால்தான்.. போகப் போக சரியாகிவிடும். பென்ஸ் ஓவியா
ஆகியோர் சரியான ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். மன்றத்தில் பின்னூட்டம் இட்டால்தான் மற்றவர்கள்
இடுவார்களா என்று நீங்கள் நினைக்கவேண்டாம். ப்ரியன் உங்கள் தோழர் என்பது அறிவோம். அவரிடம் மன்றத்தைப்
பற்றி நீங்கள் கேட்டுப் பார்க்கலாம்.

மன்றம் நிறுவியது எதற்காக எனில் ஓவ்வொருவரும் தமது சொந்த திறமையை வளர்த்திக் கொள்ள. சில விஷயங்கள்
முக்கியமானது எனில் வெட்டி ஒட்டுகிறார்கள். இப்போது அது பல பிரச்சனைகளைக் கொடுப்பதால் இணைப்பு மட்டும்
கொடுக்கச் சொல்லி விதிகளை மாற்றியிருக்கிறார்கள். ஆகவே மீண்டுமொருமுறை விதிமுறைகளை படிக்குமாறும்
கேட்டுக் கொள்கிறேன். இதெல்லாவற்றையும் விட இங்கே ஒரு உறவினர்கள் போல பழகி வருகிறோம். அதற்கேற்ப பதிவுகள் இடுவதில்தான் நிறையபேர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள முடியும்.

பின்னூட்டங்கள் என்பது ஒருவரின் சொந்தப் படைப்பை ஊக்கப் படுத்துவதற்காகத்தான். அது சொந்த படைப்பில்லை
என்றால் ஊக்கப் படுத்துவது எதற்கு? படைப்பையும்/படைப்பாளியை வைத்துத்தான் இங்கு பின்னூட்டம். வெறும் படைப்பு
நன்றாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு நீங்கள் எழுதிய கவிதைகளை யாரேனும் எழுதி கைதட்டல்
வாங்கினால் நீங்கள் சும்மா விடுவீர்களா? இது கூகுள் குழுமம் போன்றதல்ல. இதன் மென்பொருளும் இணைய இடமும்
விலைமதிப்புடையவை. அதோடு அதன் மென்பொருள்பாதையும் இதன்பாதையும் வேறு.. இரண்டுமே தமிழுக்காக என்பது
ஒற்றுமை. ஆகவே அதை புரிந்து நடப்பீர்கள் என்று நினைக்கிறேன். அத்தோடு

இங்கே நிறைய படித்திருப்பதாகவும் ஆனால் பின்னூட்டம் இட முடியவில்லை என்று நீங்கள் கூறியிருப்பது ஆச்சரியம்.
கிட்டத்தட்ட 135 பதிப்புகள் பதித்திருக்கிறீர்கள்.. எல்லாமே தமிழில்... ஆனால் உங்கள் படைப்பைத் தவிர வேறு எந்த
திரிக்கும் நீங்கள் வரவில்லை என்பது உண்மை.. ஏனெனில் நீங்கள் எந்த திரிக்கு வருவீர்கள் / வந்தீர்கள் என்று
பக்கத்தின் கடைசியில் புள்ளி விபரங்கள் இருக்கிறது. அப்படி நீங்கள் வந்ததாகவும் இல்லை. அதனால் பின்னூட்டம்
போட்டதாகவும் இல்லை.

பதிப்புகளைப் பொறுத்தவரை நீங்கள் குழுமத்திலிருந்து அப்படியே எடுத்து இங்கே இடுவதும் தெரிகிறது. ( அன்புடன் குழுமத்தில் நானும் ஒரு உறுப்பினர் தான் நண்பரே! ) அதனாலேயே இது அடுத்தவர் படைப்போ என்ற சந்தேகம் எழுகிறது. அது உங்களின் மற்ற படைப்புகளுக்கு பார்வை வராமலும் தடுத்திருக்கும்...

மன்றத்திற்கு புதியவர் என்பதால் இந்த பிரச்சனைகள் நிகழ வாய்ப்புண்டு. ஆகையால் நீங்கள் தவறாக நினைக்கவேண்டாம். ஒரு விதைகூட மண்ணீல் முட்டிதான் வெளியே வரும். நீங்கள் ஒரு விதை.. இப்போது மண்ணை முட்டுகிறீர்கள். நாளை நீங்கள் மரமாகும் போது இந்த மன்ற மண்ணை மறவாதிருப்பீர்கள்..

umakarthick
21-09-2007, 12:21 PM
பதிப்புகளைப் பொறுத்தவரை நீங்கள் குழுமத்திலிருந்து அப்படியே எடுத்து இங்கே இடுவதும் தெரிகிறது. ( அன்புடன் குழுமத்தில் நானும் ஒரு உறுப்பினர் தான் நண்பரே! ) அதனாலேயே இது அடுத்தவர் படைப்போ என்ற சந்தேகம் எழுகிறது. அது உங்களின் மற்ற படைப்புகளுக்கு பார்வை வராமலும் தடுத்திருக்கும்...
//

அப்படி நான் என்ன இட்டு விட்டேன் சொல்லுங்க, எனக்கு நேரம் கிடக்கும் போஓது என்னொட படைப்புகள்ள் போடவே ஓடிது என்ன செய்ய?

lolluvathiyar
22-09-2007, 05:07 AM
பேசி மயக்குவதில் கலைஞ*ருக்கு நிகர் கலைஞரே.
நல்ல நகைசுவை உனர்வு, அதனால் தான் தலைவனாக முடிந்தது