பாரதி
17-05-2003, 12:00 PM
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 4 வருடங்கள் ஆகி இருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பின் தொழிலாளர்கல்வியின் ஒரு பகுதியாக ஆலைகளை சுற்றிப்பார்ப்பதற்கான சுற்றுலாவில் நண்பர்களுடன் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. செல்லும் வழியில் கோவில்பட்டியில் காலை உணவுக்குப் பின் உணவகத்தின் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்தோம்.
அப்போது சுமார் 45-50 வயது இருக்கக்கூடிய ஒரு மனிதர் எங்களிடம் வந்து " அய்யா.... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுங்க" என்றார்.அவர் முகத்தில் சில நாட்களாக சவரம் செய்யப்படாததால் வெள்ளைமுடிகளும், உதவி கேட்கிறோமே என்கிற வேதனை உணர்ச்சியுடன் சோர்வும் தெரிந்தது. சில நண்பர்கள் கேலி செய்ய முற்பட, நானும் சில நண்பர்களும் " அப்போ இந்த ஹோட்டலிலேயே சாப்பிடுறீங்களா?" என்று வினவினோம். அவர் முகத்தில் கொஞ்சம் தயக்கம் தெரிந்தது. அவர் " அதெல்லாம் வேணாம்ங்க... அருப்புக்கோட்டை போற அளவுக்கு பணம் வேணும்னாக் குடுங்க" என்றார். " பெரியவரே... சாப்பிடுறீங்களா? இல்லை பஸ்ஸக்குப் போக பணம் வேணுமா?" என்றேன். "பஸ்ஸக்கு பணம் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும் தம்பி" என்றார் அவர்.
என் மனதில் லேசாக சந்தேகப் பொறி - 'அந்த மனிதர் ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பாரோ?' (இதைப்போல மதுரைப் பேருந்து நிலையத்தில் உதவி கேட்டு ஏமாற்றப் பார்த்த ஒரு வயதான பெண்மணியின் கதை நினைவுக்கு வந்தது - ஒரு ஊருக்கு போக வேண்டும் என்று எல்லோரிடமும் பணம் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். நான் அவரிடம் " அம்மா... நீங்க எந்த ஊருக்குப் போகணுமோ, அந்த பஸ்ல ஏத்தி விடுறேன். டிக்கெட்டும் எடுத்துத் தர்றேன்.வாங்க" என்று சொன்னதும் அவர் " உங்களுக்கு ஏந்தம்பி...சிரமம்.. உங்களால ஆனத குடுங்க" என்றார். நான் விடாப்பிடியாக அவரை அழைத்துச் செல்ல... சில நிமிடங்களுக்கு பின் என் பின்னே நடந்து வந்த அவரைக் காணவில்லை.!)
அதனால் அவரிடம் "உங்களுக்கு அருப்புக்கோட்டை பஸ்ஸிலே நாங்களே ஏத்தி விடுறோம்" என்றோம். அவர் முகத்தில் கொஞ்சம் குழப்பம். என்னை நம்பவில்லையா என்பதைப் போல தர்மசங்கடத்துடன் ஒரு பார்வை பார்த்தார். மெளனமாக சம்மதித்தார். வரும்போது அவருடன் பேச்சுக் கொடுத்ததில் அவர் சங்கரன்கோவிலில் இருந்து நடந்து வருவதாக சொன்னார்!!. அவர் அதிகம் பேச விரும்பவில்லை என்பதும் தெரிந்தது.
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அருப்புக்கோட்டை பேருந்தில் அவரை அமர வைத்து நடத்துனரிடம் பயணச்சீட்டையும் வாங்கி அவரிடம் கொடுத்தோம். அவர் முகத்தில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருப்பது போல எனக்குத் தோன்றியது. அப்போதுதான் அவர் இன்னும் சாப்பிடவில்லை என்பது எனக்கு உறைத்தது. பேருந்து கிளம்ப சற்று நேரம் இருந்ததால் அவரிடம் "டிபன் ஏதாச்சும் சாப்பிடுறீங்களாய்யா?" என்று வினவினோம். "வேண்டாம் தம்பி" - என்றார். மறுபடி வற்புறுத்திய பின் "நம்பிக்கையோட (!?) வந்து நீங்க டிக்கெட் வாங்கிக் குடுத்ததே எனக்கு போதுந் தம்பி" என்றார். குளிர்பானம், தேநீர் போன்ற எதையும் சாப்பிட மறுத்த அவர் ஒரே ஒரு டம்ளர் நீர் மட்டுமே அருந்தினார். சில நிமிடங்களுக்குப் பின் கரிப் புகையைக் கக்கிக் கொண்டு பேருந்தும் கிளம்பி விட்டது.
உதவி செய்தோம் என்கிற உணர்வை விட ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல் அவரை சோதனை செய்தோமே என்கிற வெட்கமும், சாப்பிடாமல் இருந்த ஒரு மனிதனுக்கு ஒரு வேளை உணவை வழங்க முடியாமல் போனதே என்கிற வேதனையும்தான் அதிகம் எனக்கு. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் என் மனதில் ஆழப்பதிந்து விட்ட இந்த உள்காயம் ஆறுமா என்று தெரியவில்லை.
அப்போது சுமார் 45-50 வயது இருக்கக்கூடிய ஒரு மனிதர் எங்களிடம் வந்து " அய்யா.... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுங்க" என்றார்.அவர் முகத்தில் சில நாட்களாக சவரம் செய்யப்படாததால் வெள்ளைமுடிகளும், உதவி கேட்கிறோமே என்கிற வேதனை உணர்ச்சியுடன் சோர்வும் தெரிந்தது. சில நண்பர்கள் கேலி செய்ய முற்பட, நானும் சில நண்பர்களும் " அப்போ இந்த ஹோட்டலிலேயே சாப்பிடுறீங்களா?" என்று வினவினோம். அவர் முகத்தில் கொஞ்சம் தயக்கம் தெரிந்தது. அவர் " அதெல்லாம் வேணாம்ங்க... அருப்புக்கோட்டை போற அளவுக்கு பணம் வேணும்னாக் குடுங்க" என்றார். " பெரியவரே... சாப்பிடுறீங்களா? இல்லை பஸ்ஸக்குப் போக பணம் வேணுமா?" என்றேன். "பஸ்ஸக்கு பணம் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும் தம்பி" என்றார் அவர்.
என் மனதில் லேசாக சந்தேகப் பொறி - 'அந்த மனிதர் ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பாரோ?' (இதைப்போல மதுரைப் பேருந்து நிலையத்தில் உதவி கேட்டு ஏமாற்றப் பார்த்த ஒரு வயதான பெண்மணியின் கதை நினைவுக்கு வந்தது - ஒரு ஊருக்கு போக வேண்டும் என்று எல்லோரிடமும் பணம் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். நான் அவரிடம் " அம்மா... நீங்க எந்த ஊருக்குப் போகணுமோ, அந்த பஸ்ல ஏத்தி விடுறேன். டிக்கெட்டும் எடுத்துத் தர்றேன்.வாங்க" என்று சொன்னதும் அவர் " உங்களுக்கு ஏந்தம்பி...சிரமம்.. உங்களால ஆனத குடுங்க" என்றார். நான் விடாப்பிடியாக அவரை அழைத்துச் செல்ல... சில நிமிடங்களுக்கு பின் என் பின்னே நடந்து வந்த அவரைக் காணவில்லை.!)
அதனால் அவரிடம் "உங்களுக்கு அருப்புக்கோட்டை பஸ்ஸிலே நாங்களே ஏத்தி விடுறோம்" என்றோம். அவர் முகத்தில் கொஞ்சம் குழப்பம். என்னை நம்பவில்லையா என்பதைப் போல தர்மசங்கடத்துடன் ஒரு பார்வை பார்த்தார். மெளனமாக சம்மதித்தார். வரும்போது அவருடன் பேச்சுக் கொடுத்ததில் அவர் சங்கரன்கோவிலில் இருந்து நடந்து வருவதாக சொன்னார்!!. அவர் அதிகம் பேச விரும்பவில்லை என்பதும் தெரிந்தது.
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அருப்புக்கோட்டை பேருந்தில் அவரை அமர வைத்து நடத்துனரிடம் பயணச்சீட்டையும் வாங்கி அவரிடம் கொடுத்தோம். அவர் முகத்தில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருப்பது போல எனக்குத் தோன்றியது. அப்போதுதான் அவர் இன்னும் சாப்பிடவில்லை என்பது எனக்கு உறைத்தது. பேருந்து கிளம்ப சற்று நேரம் இருந்ததால் அவரிடம் "டிபன் ஏதாச்சும் சாப்பிடுறீங்களாய்யா?" என்று வினவினோம். "வேண்டாம் தம்பி" - என்றார். மறுபடி வற்புறுத்திய பின் "நம்பிக்கையோட (!?) வந்து நீங்க டிக்கெட் வாங்கிக் குடுத்ததே எனக்கு போதுந் தம்பி" என்றார். குளிர்பானம், தேநீர் போன்ற எதையும் சாப்பிட மறுத்த அவர் ஒரே ஒரு டம்ளர் நீர் மட்டுமே அருந்தினார். சில நிமிடங்களுக்குப் பின் கரிப் புகையைக் கக்கிக் கொண்டு பேருந்தும் கிளம்பி விட்டது.
உதவி செய்தோம் என்கிற உணர்வை விட ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல் அவரை சோதனை செய்தோமே என்கிற வெட்கமும், சாப்பிடாமல் இருந்த ஒரு மனிதனுக்கு ஒரு வேளை உணவை வழங்க முடியாமல் போனதே என்கிற வேதனையும்தான் அதிகம் எனக்கு. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் என் மனதில் ஆழப்பதிந்து விட்ட இந்த உள்காயம் ஆறுமா என்று தெரியவில்லை.