PDA

View Full Version : இன்னும் நான் மரணிக்கவில்லை



அகத்தியன்
01-06-2007, 06:18 PM
இன்னும் நான் மரணிக்கவில்லை
எப்போது என்னைத் தின்பாய் காலனே?
இன்னும் நான் உன்னில் சேரவில்லை
என் தளைகள் காலம் தூரமாக ஆக இறுக்கமாக............
என்னால் முடியவில்லை
உனக்கு இரையாதல் எப்போதும் என்னை தப்பவைக்கும்
எப்போது என்னை தின்பாய் காலனே?

பொழுதுகள் எல்லாம் ஒன்றாகவே முடிய
என் சுமைகளின் வடிவங்கள் கோரமாய் என்னை பயமுறுத்தும்
என் இயலாமையில்
இன்னும்......
சுமைகளுடன் அவளின் காதலும், என் கனவுகளும்

அக்னி
01-06-2007, 06:30 PM
உன் காதலது உண்மையென்றால்,
காதலி அவள் இன்னும் உயிரோடென்றால்,
உனது மரணம்
அவளுக்காய் என்று
அவளுக்கு தெரிந்தால்,
அவள் மனம் இன்பமாய் வாழுமா..?
அவள் இன்பம் தொலைப்பதுதான்,
உன் காதலா..?

வேதனைகளின் வெளிப்பாடு, அழுத்தமான வரிகளில்...
தொடருங்கள் நண்பரே...
உங்கள் கவிகளை...
ரசிப்பதற்காய் காத்திருக்கின்றோம்...

சக்தி
01-06-2007, 06:53 PM
கவிதை நன்றாக உள்ளது தொடருங்கள் நண்பரே

அமரன்
01-06-2007, 06:56 PM
வாருங்கள் கவிஞரே!
அனைவரும் பாடிய காதலை நீங்களும் பாடியுள்ளீர்கள். பாராட்டுகள். முதல் கவி போலுள்ளதே. அதனால் உங்களுக்கு எனது ஊக்குவிப்புப் பரிசாக 50 இ-பணம்.

அகத்தியன்
01-06-2007, 07:17 PM
வாருங்கள் கவிஞரே!
அனைவரும் பாடிய காதலை நீங்களும் பாடியுள்ளீர்கள். பாராட்டுகள். முதல் கவி போலுள்ளதே. அதனால் உங்களுக்கு எனது ஊக்குவிப்புப் பரிசாக 50 இ-பணம்.
நன்றி அமரன்
உங்களது பரிசுக்கும்,
நான் இதற்கு முன்னும் கவிதைகளை பதித்துள்ளேன்.
நீங்கள் பார்க்கவில்லையா?

அமரன்
01-06-2007, 07:24 PM
நன்றி அமரன்
உங்களது பரிசுக்கும்,
நான் இதற்கு முன்னும் கவிதைகளை பதித்துள்ளேன்.
நீங்கள் பார்க்கவில்லையா?
மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பரே!
உங்களது மற்றய கவிதைகளை படிக்கவில்லை. கவிஞர்கள் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தி கவிதைகளின் சுட்டியை இணைக்கலாமே நண்பரே!

சிவா.ஜி
02-06-2007, 04:56 AM
உனக்கு இரையாதல் எப்போதும் என்னை தப்பவைக்கும்
எப்போது என்னை தின்பாய் காலனே?

என் சுமைகளின் வடிவங்கள் கோரமாய் என்னை பயமுறுத்தும்
என் இயலாமையில்
இதுதான் நிறைய காதலர்களின் மனப்போக்காய் இருக்கிறது.மரணம் ஒருவித தப்பித்தலே.சுமைகள் ஏன் பயமுறுத்துகிறது நீங்களே சொன்னதுபோல இயலாமையால். ஏன் இயலாமை புரிதலும் புரியவைத்தலும்தான் காதலுக்கு அஸ்திவாரம். தொடர்ந்து முயன்றால் நல்ல காதல் நிச்சயம் வெற்றிபெறும். ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் உங்கள் அடுத்த கவிதையை எதிர்பார்க்கிறேன்.