ஷீ-நிசி
01-06-2007, 07:54 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/UthirathaNinaivugal-New.jpg
உதிராத நினைவுகள்
எத்தனை ரம்மியமான
நினைவுகள் அவை...
நீ என்னை காதலிக்கிறேன்
என்று சொல்லிய தருணம்!
கல்லூரி மரநிழல்!
கீழே இறைந்து கிடந்தன
மரத்தின் வியர்வைகள்!
இலைகளும், பூக்களுமாய்!
சிமெண்ட் பெஞ்சில்
நான் மட்டும்
அமர்ந்திருந்தேன்!
என் நெஞ்சில்
நீ மட்டும்
அமர்ந்திருந்தாய்!
வெட்கம்
இருவருக்குமிடையில்,
வெட்கமில்லாமல்
இருந்ததால்,
காதல் அறிவிப்பு
வாசிக்கபடாமலே இருந்தது!
தூரத்தில் நடந்து
வந்துக்கொண்டிருந்தாய்!
நடை அசைவைக் கண்டே,
மூளை மனதிற்கு
செய்தி அனுப்பியது!
விழிகளிரண்டும்
வழி பார்த்தே குதூகலித்தன!
கைகள் கலையாத
கூந்தலை சரிசெய்தன!
இதழ்கள் உன் பெயரை
செல்லமாய் உச்சரித்தன!
அருகே வந்துவிட்டாய்,
தலை கவிழ்த்திருந்தேன்!
புத்தகம் பார்த்தபடி,
கையில் ஒற்றை பூவோடு
என் அருகில் வந்தாய்!
ரோஸி என்றாய்!
நிமிர்ந்தவளின் இதழுக்கு
நேராய் இருந்தன,
ரோஜாவின் இதழ்கள்!
ஐ லவ் யூ..... என்றாய்!
முத்தமழை கொடுத்து
கட்டிக்கொள்ள துடித்தன
என் கரங்கள்!
நெஞ்சம் புகுந்த உன்னோடு
கொஞ்சம் விளையாட
விரும்பினேன்!
முடியாது என்றேன்!
உன் இருவிழியில்
கருமேகங்கள் கூடி,
முதல் துளிகளுக்கு
தயாரானது!
மனம் வலித்தது!
முடியாது!
இப்படி சொன்னால்
முடியாது!
கட்டியணைத்து முத்தமிட்டு
சொல் உன் காதலை
என்றேன்!
அரை நொடியில்
ஆறங்குலம் வளர்ந்தேன்!
உன் கரங்களால்!
பூமிக்கும் பாதத்திற்கும்
இடைவெளி ஏற்படுத்தினாய்...
காற்றில் காதலை
சத்தமாய் அறிவித்தாய்
என்னை ஏந்தியபடி....
டெலிபோன் அலறியது!
மெல்ல விலக்கினேன்
என் பார்வையை,
சுவரில் மாட்டியிருந்த
அவன் புகைப்படத்திலிருந்து!
இரண்டு மெழுகுவர்த்திகளும்
கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது!
உதிராத நினைவுகள்
எத்தனை ரம்மியமான
நினைவுகள் அவை...
நீ என்னை காதலிக்கிறேன்
என்று சொல்லிய தருணம்!
கல்லூரி மரநிழல்!
கீழே இறைந்து கிடந்தன
மரத்தின் வியர்வைகள்!
இலைகளும், பூக்களுமாய்!
சிமெண்ட் பெஞ்சில்
நான் மட்டும்
அமர்ந்திருந்தேன்!
என் நெஞ்சில்
நீ மட்டும்
அமர்ந்திருந்தாய்!
வெட்கம்
இருவருக்குமிடையில்,
வெட்கமில்லாமல்
இருந்ததால்,
காதல் அறிவிப்பு
வாசிக்கபடாமலே இருந்தது!
தூரத்தில் நடந்து
வந்துக்கொண்டிருந்தாய்!
நடை அசைவைக் கண்டே,
மூளை மனதிற்கு
செய்தி அனுப்பியது!
விழிகளிரண்டும்
வழி பார்த்தே குதூகலித்தன!
கைகள் கலையாத
கூந்தலை சரிசெய்தன!
இதழ்கள் உன் பெயரை
செல்லமாய் உச்சரித்தன!
அருகே வந்துவிட்டாய்,
தலை கவிழ்த்திருந்தேன்!
புத்தகம் பார்த்தபடி,
கையில் ஒற்றை பூவோடு
என் அருகில் வந்தாய்!
ரோஸி என்றாய்!
நிமிர்ந்தவளின் இதழுக்கு
நேராய் இருந்தன,
ரோஜாவின் இதழ்கள்!
ஐ லவ் யூ..... என்றாய்!
முத்தமழை கொடுத்து
கட்டிக்கொள்ள துடித்தன
என் கரங்கள்!
நெஞ்சம் புகுந்த உன்னோடு
கொஞ்சம் விளையாட
விரும்பினேன்!
முடியாது என்றேன்!
உன் இருவிழியில்
கருமேகங்கள் கூடி,
முதல் துளிகளுக்கு
தயாரானது!
மனம் வலித்தது!
முடியாது!
இப்படி சொன்னால்
முடியாது!
கட்டியணைத்து முத்தமிட்டு
சொல் உன் காதலை
என்றேன்!
அரை நொடியில்
ஆறங்குலம் வளர்ந்தேன்!
உன் கரங்களால்!
பூமிக்கும் பாதத்திற்கும்
இடைவெளி ஏற்படுத்தினாய்...
காற்றில் காதலை
சத்தமாய் அறிவித்தாய்
என்னை ஏந்தியபடி....
டெலிபோன் அலறியது!
மெல்ல விலக்கினேன்
என் பார்வையை,
சுவரில் மாட்டியிருந்த
அவன் புகைப்படத்திலிருந்து!
இரண்டு மெழுகுவர்த்திகளும்
கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது!