சிவா.ஜி
31-05-2007, 09:12 AM
என் வாழ்நாளில்
ஒரே ஒருமுறை மட்டும்
என்னை அடித்த என்
அன்புள்ள அப்பா!
அதுகூட உணவை அவமதிப்பது
மன்னிக்க முடியாத குற்றமென்ற
உன்னதமான உண்மையை உணர்த்த!
மதிய உணவுக்குப்பிறகு
சிறிய உறக்கத்திலிருக்கும்
உனக்குத் தெரியாமல்
சட்டை பையில் சில்லறை எடுத்ததை
அரைக்கண்ணால் பார்த்தும்
பார்க்காததுபோல்
அதை அனுமதித்து சிரித்தது,
காதர்பாய் கடையில்
பரோட்டாவும் கறிக்குழம்பும்
வாங்கித்தந்து,உன் தட்டிலிருந்த
நல்லகறியை பதம் பார்த்து
என் தட்டுக்கு மாற்றியது,
சுற்றுலா செல்ல எனக்குமட்டுமின்றி
காசில்லா என் நன்பனுக்கும் தந்து
என்னை முக மலர்த்தியது,
ஆனந்தவிகடனையும்,குமுதத்தையும்
அறிமுகப்படுத்தி,இன்றளவும்
என் படிப்பார்வத்துக்கு வித்திட்டது,
கடன் கொடுத்து திரும்ப வந்த
கதைப்புத்தகத்துக்குள் இருந்த
காதல் கடிதத்தைக் காட்டி
என் விருப்பம் கேட்டு
கண்ணியத்தை காட்டியது,
வருமானமில்லா வேளையிலும்
பிடிவாதமாய் என்னை படிக்கவைத்தது,
எல்லோருக்கும் இளையவனாய் நானிருந்தும்
எடுக்கும் எல்லாமுடிவுகளிலும்
என்னையும் பங்கேற்க வைத்தது,
இருக்கும் காலம்வரை
இனிய நன்பனாய் இருந்தது
எல்லாம் எதற்காக?
புகையால் வரவழைத்துக்கொண்ட
புற்றால் பாதியில் விட்டு போவதற்கா?
உன்காசும் கவனிப்பும்
என்னை வாழவைத்தது!
என் காசால் உன்னை
வாழவைக்க முடியவில்லையே
என் மகனில் உன்னைப்பார்த்து
நீ தந்ததையெல்லாம் அவனுக்கு நான் தந்து
நன்றி செலுத்த முயலுகிறேன்!
ஒரே ஒருமுறை மட்டும்
என்னை அடித்த என்
அன்புள்ள அப்பா!
அதுகூட உணவை அவமதிப்பது
மன்னிக்க முடியாத குற்றமென்ற
உன்னதமான உண்மையை உணர்த்த!
மதிய உணவுக்குப்பிறகு
சிறிய உறக்கத்திலிருக்கும்
உனக்குத் தெரியாமல்
சட்டை பையில் சில்லறை எடுத்ததை
அரைக்கண்ணால் பார்த்தும்
பார்க்காததுபோல்
அதை அனுமதித்து சிரித்தது,
காதர்பாய் கடையில்
பரோட்டாவும் கறிக்குழம்பும்
வாங்கித்தந்து,உன் தட்டிலிருந்த
நல்லகறியை பதம் பார்த்து
என் தட்டுக்கு மாற்றியது,
சுற்றுலா செல்ல எனக்குமட்டுமின்றி
காசில்லா என் நன்பனுக்கும் தந்து
என்னை முக மலர்த்தியது,
ஆனந்தவிகடனையும்,குமுதத்தையும்
அறிமுகப்படுத்தி,இன்றளவும்
என் படிப்பார்வத்துக்கு வித்திட்டது,
கடன் கொடுத்து திரும்ப வந்த
கதைப்புத்தகத்துக்குள் இருந்த
காதல் கடிதத்தைக் காட்டி
என் விருப்பம் கேட்டு
கண்ணியத்தை காட்டியது,
வருமானமில்லா வேளையிலும்
பிடிவாதமாய் என்னை படிக்கவைத்தது,
எல்லோருக்கும் இளையவனாய் நானிருந்தும்
எடுக்கும் எல்லாமுடிவுகளிலும்
என்னையும் பங்கேற்க வைத்தது,
இருக்கும் காலம்வரை
இனிய நன்பனாய் இருந்தது
எல்லாம் எதற்காக?
புகையால் வரவழைத்துக்கொண்ட
புற்றால் பாதியில் விட்டு போவதற்கா?
உன்காசும் கவனிப்பும்
என்னை வாழவைத்தது!
என் காசால் உன்னை
வாழவைக்க முடியவில்லையே
என் மகனில் உன்னைப்பார்த்து
நீ தந்ததையெல்லாம் அவனுக்கு நான் தந்து
நன்றி செலுத்த முயலுகிறேன்!