அமரன்
31-05-2007, 07:27 AM
பொட்டிழந்த விதவை போல
நேற்றிருந்த மரங்கள் கூட
மொட்டுவிட்டுச் சிரிக்கின்றன.
அந்திசாயும் வேளையிலே
அஸ்தமித்த மனிதச் சுடர்கள்
அதிகாலைப் புள்ளினம் போல
வீதிகளை வெளிச்சம் ஆக்குகின்றனர்.
காலுடைந்த குயில்களைப் போல
வீடுகளில் குலாவிய குளவிகள்
பட்டாம் பூச்சிகளாய் பறந்து
உற்சாக கீதம் இசைக்கின்றனர்.
நேற்று இல்லா மாற்றம் இது
வசந்த காலத்தின்
வரவு முழக்கம் இது
இவர்களைத் தழுவிய வசந்தம்
எனக்கு மட்டும் தூரமாய்...
வெகு தொலை தூரமாய்.....
என்வீட்டு தோட்டத்தில்
மலர்கின்ற பூக்களில்கூட
தொலைத்து விட்ட உன்னுடன்
தொலையாத உன் நினைவலைகள்
வாசமாக இருக்கையிலே
எனக்கு ஏது வசந்தகாலம்
கணப்பொழுதில் காற்றுடன்
கலந்து விட்ட தோழனே....!
நேற்றிருந்த மரங்கள் கூட
மொட்டுவிட்டுச் சிரிக்கின்றன.
அந்திசாயும் வேளையிலே
அஸ்தமித்த மனிதச் சுடர்கள்
அதிகாலைப் புள்ளினம் போல
வீதிகளை வெளிச்சம் ஆக்குகின்றனர்.
காலுடைந்த குயில்களைப் போல
வீடுகளில் குலாவிய குளவிகள்
பட்டாம் பூச்சிகளாய் பறந்து
உற்சாக கீதம் இசைக்கின்றனர்.
நேற்று இல்லா மாற்றம் இது
வசந்த காலத்தின்
வரவு முழக்கம் இது
இவர்களைத் தழுவிய வசந்தம்
எனக்கு மட்டும் தூரமாய்...
வெகு தொலை தூரமாய்.....
என்வீட்டு தோட்டத்தில்
மலர்கின்ற பூக்களில்கூட
தொலைத்து விட்ட உன்னுடன்
தொலையாத உன் நினைவலைகள்
வாசமாக இருக்கையிலே
எனக்கு ஏது வசந்தகாலம்
கணப்பொழுதில் காற்றுடன்
கலந்து விட்ட தோழனே....!