இராசகுமாரன்
29-05-2007, 12:50 PM
நண்பர்களே,
சமீப காலமாக ஒருவர் பல பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்வது நமது மன்றத்தில் நவீன நாகரீகமாகிப் போனது. இதை சோதனைக்காக முயற்சித்திருக்கலாம் பிறகு விட்டு விடுவார்கள் என்று பார்த்தால், அது தற்போது எங்களுக்கு சோதனையாக உள்ளது.
ஒரு பெயரில் திரி துவக்கி விட்டு, மறு பெயரில் வந்து பாராட்டுகிறார்கள். ஒரு பெயரில் கவிதை எழுதி விட்டு, பல பெயர்களில் வந்து "கள்ள வோட்டு" போடுகிறார்கள். ஒரு பெயரில் ஒருவரை புகழ்ந்து விட்டு, மறு பெயரில் வந்து திட்டுகிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? இரட்டை வேடம் இருந்தாலும் பரவாயில்லை, ஒருவர் இங்கே எட்டு வேடம் கூட போடுகிறார்!!! இவர்களை ஏன் தடை செய்யக் கூடாது?
நண்பர்களே! நீங்கள் பல பெயர்களில் வருவதை அறிய இங்கே பல தொழில் நுட்பங்களும், நிரல்களும் உள்ளன. அவை ஒருவர் எத்தனை பெயர்களில் உலாவுகிறார் என்று நிர்வாகிகளுக்கு தெள்ளந்தெளிவாக காட்டி விடுகிறது.
அதனால், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள்/பயனாளர் பெயர்கள் (usernames) வைத்துக் கொள்ள தடை விதிக்க படுகிறது. சில சொந்த காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் பெயர் வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்றால் அவர்களுக்கு விதி விலக்கு உண்டு. (ஆனால், அதில் ஏதாவது ஒரு பயனாளர் பெயரை மட்டுமே போட்டிகளில் வாக்குச் செலுத்த உபயோகிக்க வேண்டும்).
இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு முதலில் எச்சரிக்கை தனிமடல் அனுப்பப் படும். அதற்கு சரியான பதில் கிடைக்காவிடில் அவர்களது அனைத்து கணக்குகளும் முடக்கப் படும்.
ஏற்கனவே பல கணக்குகள் வைத்திருப்பவர்கள், தேவையில்லா கணக்குகளை நிர்வாகத்திற்கு தெரிவித்து மூடிவிடவும், சேர்க்க விரும்பும் கணக்குகளை ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும், அதிகமாக வைத்துக் கொள்ள விரும்பும் கணக்குகளுக்கு நிர்வாகத்திடம் தெரிவித்து அனுமதி பெற்றுக் கொள்ளவும்.
அடுத்த 10 நாட்களுக்குள் தெரிவிக்காதவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும்.
அப்படி அவர்கள் பல பெயர்களில் வந்து போட்ட வோட்டுகள் அனைத்தும் "செல்லாத ஓட்டுகளாக" கருதப் படும்.
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
இராசகுமாரன்
சமீப காலமாக ஒருவர் பல பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்வது நமது மன்றத்தில் நவீன நாகரீகமாகிப் போனது. இதை சோதனைக்காக முயற்சித்திருக்கலாம் பிறகு விட்டு விடுவார்கள் என்று பார்த்தால், அது தற்போது எங்களுக்கு சோதனையாக உள்ளது.
ஒரு பெயரில் திரி துவக்கி விட்டு, மறு பெயரில் வந்து பாராட்டுகிறார்கள். ஒரு பெயரில் கவிதை எழுதி விட்டு, பல பெயர்களில் வந்து "கள்ள வோட்டு" போடுகிறார்கள். ஒரு பெயரில் ஒருவரை புகழ்ந்து விட்டு, மறு பெயரில் வந்து திட்டுகிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? இரட்டை வேடம் இருந்தாலும் பரவாயில்லை, ஒருவர் இங்கே எட்டு வேடம் கூட போடுகிறார்!!! இவர்களை ஏன் தடை செய்யக் கூடாது?
நண்பர்களே! நீங்கள் பல பெயர்களில் வருவதை அறிய இங்கே பல தொழில் நுட்பங்களும், நிரல்களும் உள்ளன. அவை ஒருவர் எத்தனை பெயர்களில் உலாவுகிறார் என்று நிர்வாகிகளுக்கு தெள்ளந்தெளிவாக காட்டி விடுகிறது.
அதனால், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள்/பயனாளர் பெயர்கள் (usernames) வைத்துக் கொள்ள தடை விதிக்க படுகிறது. சில சொந்த காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் பெயர் வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்றால் அவர்களுக்கு விதி விலக்கு உண்டு. (ஆனால், அதில் ஏதாவது ஒரு பயனாளர் பெயரை மட்டுமே போட்டிகளில் வாக்குச் செலுத்த உபயோகிக்க வேண்டும்).
இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு முதலில் எச்சரிக்கை தனிமடல் அனுப்பப் படும். அதற்கு சரியான பதில் கிடைக்காவிடில் அவர்களது அனைத்து கணக்குகளும் முடக்கப் படும்.
ஏற்கனவே பல கணக்குகள் வைத்திருப்பவர்கள், தேவையில்லா கணக்குகளை நிர்வாகத்திற்கு தெரிவித்து மூடிவிடவும், சேர்க்க விரும்பும் கணக்குகளை ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும், அதிகமாக வைத்துக் கொள்ள விரும்பும் கணக்குகளுக்கு நிர்வாகத்திடம் தெரிவித்து அனுமதி பெற்றுக் கொள்ளவும்.
அடுத்த 10 நாட்களுக்குள் தெரிவிக்காதவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும்.
அப்படி அவர்கள் பல பெயர்களில் வந்து போட்ட வோட்டுகள் அனைத்தும் "செல்லாத ஓட்டுகளாக" கருதப் படும்.
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
இராசகுமாரன்