PDA

View Full Version : என் மனைவி காதலிகிறாள்



lolluvathiyar
28-05-2007, 03:18 PM
அவள் என்னைக் காதலிக்கிறாள்
நான் அவளையும் காதலிப்பேன்

இவள் என்னை காதலிக்கிறாள்
நான் இவளையும் காதலிப்பேன்

எவளெவளோ என்னை காதலிக்கிறாள்
நான் எவளையும் காதலிப்பேன்

நீ என்னை காதலிக்கிறாய்
நான் உன்னையும் காதலிப்பேன்


இப்படி வெட்டி கனவு கண்டு
தெரியாமல் போனேன் இந்த விசயம்
என் மனைவியும் என்னைக் காதலிக்கிறாள்

ஆதவா
28-05-2007, 03:42 PM
சிலர் இப்படித்தான் வாத்தியாரே! கூடவே இருந்தும் இதைக் கவனிக்காமல் போவார்கள்...

கவிஞர் விஜயன் எழுதிய வழி தொலைத்த பரிசல்கள் நூலிலிருந்து...

அழகின் அருகாமை
யாரையும்
வசப்படுத்துவதில்லை
நிலவின் அழகைக்
கண்டுகொள்ளாமல்
படகுக் காரன்..

இந்த கவிதை இங்கே பொருந்துகிறது பாருங்கள்... மனைவி என்றுமே கணவனைக் காதலிப்பவளாகவே இருந்து தோல்வியடைய நேருகிறாள்.. கணவன் ஒவ்வொரு காதலிலும் தோற்கிறான்... ஆனால் இரு தோல்விகளும் நெருங்குவதில்லை..

தத்துவ மழை பொழியும் வாத்தியாரே! பிழை கூடுமானவரை தவிர்த்துவிட்டமைக்கு சபாச். மேலும் தொடர்க. குறையேதுமில்லை மறைமூர்த்தி கண்ணா.... தொடருங்கள்... ஊக்கமாக 50 நயா பைசா வழங்கப்படும்.. :D

மனோஜ்
28-05-2007, 03:45 PM
தத்துவ கவிதை அருமை வாத்தியாரே

அன்புரசிகன்
28-05-2007, 03:48 PM
உண்மைகளை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் வாத்தியாரே...

அமரன்
28-05-2007, 05:31 PM
கித்துவம் மாதிரி இருந்தாலும் நல்ல கவிதை வாத்தியாரே! கடைசி வரிகளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம் என நினைக்கின்றேன்.

shangaran
29-05-2007, 05:02 AM
எளிமையான வரிகளில் அருமையான கவிதை வாத்தியாரே...

thevaky
29-05-2007, 05:55 AM
ஆம் நண்பரே! முற்றத்து மல்லியின் வாசனை தெரியாது என்பார்கள்
அது போலத்தான் இந்தக் காதலும். உண்மையான காதல் எப்போதும் உணரப்படுவதில்லை

வாழ்த்துக்கள்

சிவா.ஜி
29-05-2007, 07:38 AM
காதலிக்கப்படுமபோது கிடைக்கும் சுகமே தனி அதுவும் மனைவியின் காதல் நல்ல இல்லறத்திற்கு சுவைக்கூட்டும்.காதலி காதலிக்கப்படு வாழ்க்கை வர்ணமாகும். எளிமையான நல்ல கவிதை வாத்தியாரே.

ஜோய்ஸ்
29-05-2007, 08:01 AM
இதுதான் கித்துவ சிந்தனைக்கவிதையோ!

lolluvathiyar
31-05-2007, 04:17 PM
நண்றி அனைவருக்கும்

lolluvathiyar
25-06-2007, 12:29 PM
இந்த கவிதை இங்கே பொருந்துகிறது பாருங்கள்... மனைவி என்றுமே கணவனைக் காதலிப்பவளாகவே இருந்து தோல்வியடைய நேருகிறாள்.. கணவன் ஒவ்வொரு காதலிலும் தோற்கிறான்... ஆனால் இரு தோல்விகளும் நெருங்குவதில்லை..

அட* நான் இத* க*வ*னிக்காம* போயிட்டேன்
சூப்ப*ர்

இதயம்
25-06-2007, 12:49 PM
அவள் என்னைக் காதலிக்கிறாள்
நான் அவளையும் காதலிப்பேன்

இவள் என்னை காதலிக்கிறாள்
நான் இவளையும் காதலிப்பேன்

எவளெவளோ என்னை காதலிக்கிறாள்
நான் எவளையும் காதலிப்பேன்

நீ என்னை காதலிக்கிறாய்
நான் உன்னையும் காதலிப்பேன்


இப்படி வெட்டி கனவு கண்டு
தெரியாமல் போனேன் இந்த விசயம்
என் மனைவியும் என்னைக் காதலிக்கிறாள்

அவர்கள் என்னைக் குழப்புகிறார்கள்
நான் அவர்களையும் குழப்புவேன்

இவர்கள் என்னை குழப்புகிறார்கள்
நான் இவர்களையும் குழப்புவேன்

யார் யாரோ என்னை குழப்புகிறார்கள்
நான் எல்லாரையும் குழப்புவேன்

நீங்கள் என்னை குழப்புகிறீர்கள்
நான் உங்களையும் குழப்புவேன்

இப்படி மன்றத்தில் சுற்றி வந்து
தெரியாமல் போனேன் இந்த விசயம்
லொள்ளு வாத்தியார் என்னைக் குழப்புகிறார்

ஓவியா
25-06-2007, 02:53 PM
நல்லவாத்தியார் அண்ணா,

கவிதை பிரமாதம், பெண்ணின் பெருமை இவைகள். கனவனிடம் உண்மையாகவும், அன்பாகவும், எப்பொழுது காதலை அளவில்லாமல் பரிமாருவதும் மனைவியின் சிறப்பு அதுவே அவளின் அழகு.

நன்றி.

சூரியன்
25-06-2007, 03:10 PM
நல்ல கவிதை வாத்தியாரே