சக்தி
26-05-2007, 07:03 PM
கண்ணில் ரத்தம் வழியுதடி
இந்த கண்ணில்லா மனிதரை
நினைத்திடும் பொழுது.
பார்த்து பார்த்து செல்வார்
இவர் பார்த்த பழுதுகள்
ஏராளம்
ஏன் என்று கேட்க
எள்ளவும் வீரமில்லை
எண்ணித் துணிக கருமமென்று
வாழ்வாரும் யாருமில்லை.
கொள்ளைகொண்டு போனதெல்லாம்
போனபின்பு- இங்கு கும்மியடித்து
அழுது என்ன பயன்
மனிதம் கற்றுக்கொடுத்த
மண்ணில்-இன்று
மதம்பிடித்து போனதென்ன.
காக்கை குருவியெங்கள் ஜாதி
என்றான் பாரதி-இங்கு
காக்கைக்கும் குருவிக்கும்
ஜாதியை வைத்தது யாரடி
பெண்ணீயம் பேசும் மனிதர்கள்
மனதில் கண்ணீயம் காப்பதில்லை ஏனடி
பழம் பெருமை பேசி
மனிதர் இங்கே
பாழாய் போகின்றாரே
காவியுடையணிந்த கயவர்கள்
இங்கே காவியம் படைக்கின்றார்
மொழிகொண்ட மனிதரெல்லாம்(மனதில்)
பழிகொண்டு வாழ்கின்றார்
கண்ணிலே ஒளியில்லை
நெஞ்சிலே உரமில்லை
அஞ்சி அஞ்சி சாகின்றார்
வஞ்சகத்தில் வாழ்கின்றார்
கற்றுக்கொடுத்த இனம்
இன்று கற்றுக்கொண்டிருகிறது
இந்த நிலை மாறுமோ
மனிதர் இனம் மீளுமோ?
இந்த கண்ணில்லா மனிதரை
நினைத்திடும் பொழுது.
பார்த்து பார்த்து செல்வார்
இவர் பார்த்த பழுதுகள்
ஏராளம்
ஏன் என்று கேட்க
எள்ளவும் வீரமில்லை
எண்ணித் துணிக கருமமென்று
வாழ்வாரும் யாருமில்லை.
கொள்ளைகொண்டு போனதெல்லாம்
போனபின்பு- இங்கு கும்மியடித்து
அழுது என்ன பயன்
மனிதம் கற்றுக்கொடுத்த
மண்ணில்-இன்று
மதம்பிடித்து போனதென்ன.
காக்கை குருவியெங்கள் ஜாதி
என்றான் பாரதி-இங்கு
காக்கைக்கும் குருவிக்கும்
ஜாதியை வைத்தது யாரடி
பெண்ணீயம் பேசும் மனிதர்கள்
மனதில் கண்ணீயம் காப்பதில்லை ஏனடி
பழம் பெருமை பேசி
மனிதர் இங்கே
பாழாய் போகின்றாரே
காவியுடையணிந்த கயவர்கள்
இங்கே காவியம் படைக்கின்றார்
மொழிகொண்ட மனிதரெல்லாம்(மனதில்)
பழிகொண்டு வாழ்கின்றார்
கண்ணிலே ஒளியில்லை
நெஞ்சிலே உரமில்லை
அஞ்சி அஞ்சி சாகின்றார்
வஞ்சகத்தில் வாழ்கின்றார்
கற்றுக்கொடுத்த இனம்
இன்று கற்றுக்கொண்டிருகிறது
இந்த நிலை மாறுமோ
மனிதர் இனம் மீளுமோ?