சிவா.ஜி
26-05-2007, 10:03 AM
சம்பந்தம் ஊரில் ஒரு கல்யாணத்தையும் விட்டு வைக்க மாட்டார்.முந்தாநாள் ரோட்டில் பார்த்த நபர் பத்திரிக்கை
கொடுத்தாலும் கண்டிப்பாக போவார்.
எதற்கு என்றா கேட்கிறீர்கள்? பந்திக்குத்தான்.நல்ல சாப்பாட்டு ப்ரியர்.25 ரூபாய் மொய் கொடுத்துவிட்டு
50 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு வருவார்.
வீட்டில் முதிர்கன்னியாய் ஒரு மகள் இருப்பதை பற்றி கவலைப்படாமல்,அவளின் கல்யாணத்தைப்பற்றி
யோசிக்காமல் ஊதாரித்தனமாய் ஊர் சுற்றும்
இவருக்கு மகளை கட்டிக்கொடுத்து அணுப்ப மனமில்லை.காரணம் அவள் கொண்டு வரும் சம்பளம்.
ஆர்த்தி, அப்பாவின் போக்கு பிடிக்கவில்லை என்றாலும்
அனுசரித்து போகும் பெண்.அவளுக்குள்ளும் காதல் பூத்தது.
அவளை அவளாகவே நேசிக்கும் ஒருவன் கிடைத்தபோது அவளால் அந்த காதலை ஒதுக்க முடியவில்லை.
சம்பந்தத்துக்கு இந்த காதல் தெரியவந்தபோது ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் குதித்து,
அழகாய் பூத்திருந்த அந்த உறவை கொச்சைப்படுத்தி கூறு போட்டுவிட்டார்.
எப்போதும் அனுசரித்து போகும் ஆர்த்தி இந்த சம்பவத்துக்கு பிறகு ஒரு அழுத்தமான மவுனத்துடன் இருந்தாள்.
அப்பாவை நேரிடும்போது மட்டும் அருவெறுப்பான
ஒரு பார்வையை பார்த்துவிட்டு ஒதுங்கிவிடுவாள்.
வழக்கம்ப்போல் ஓடி ஓடி ஊரார் கல்யாண சாப்பாட்டை அனுபவித்துக்கொண்டிருந்த சம்பந்தம் அதிர்ந்து போனது,
அன்று அலுவலகம் போன ஆர்த்தி மாலையில்
வீடு திரும்பவில்லை என்று அறிந்தபோது.மூன்று நாட்கள் ஆகியும் ஆர்த்தி வீடு திரும்பவில்லை.
மகள் வராத வருத்தத்தை விட வருமானம் வராது என்ற கவலைதான் அவருக்கு.
அந்த எரிச்சலில் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தபோதுதான் அந்த கடிதம் வந்தது.
"திருவாளர் சம்பந்தம் அவர்களுக்கு
இத்துடன் இனைத்துள்ள கல்யாணப்பத்திரிக்கை உங்களுக்கு
மகளாய் பிறந்த துரதிஷ்டசாலி ஆர்த்தியுடையது.
எனக்கு கண்டிப்பாய் தெரியும் நீங்கள் அவசியம்
இந்த திருமணத்திற்கு வருவீர்கள் என்று.
வந்து அவசியம் சாப்பிட்டுவிட்டு மறக்காமல்
எப்போதும் கொடுக்கும் அந்த மொய் பணமான
25 ரூபாயை கொடுத்துவிட்டுப்போங்கள்
அதையே நீங்கள் எனக்கு கொடுத்த சீதனமாய்
வைத்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆர்த்தி
பின் குறிப்பு:அப்பாவாய் உங்கள் கடமையை நீங்கள் செய்ய தவறியிருந்தாலும்,
மகளாய் என் கடமையை மறக்கவில்லை,நீங்களும் அம்மாவும் இருக்கும்வரை
என் பணம் உங்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும்.
கொடுத்தாலும் கண்டிப்பாக போவார்.
எதற்கு என்றா கேட்கிறீர்கள்? பந்திக்குத்தான்.நல்ல சாப்பாட்டு ப்ரியர்.25 ரூபாய் மொய் கொடுத்துவிட்டு
50 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு வருவார்.
வீட்டில் முதிர்கன்னியாய் ஒரு மகள் இருப்பதை பற்றி கவலைப்படாமல்,அவளின் கல்யாணத்தைப்பற்றி
யோசிக்காமல் ஊதாரித்தனமாய் ஊர் சுற்றும்
இவருக்கு மகளை கட்டிக்கொடுத்து அணுப்ப மனமில்லை.காரணம் அவள் கொண்டு வரும் சம்பளம்.
ஆர்த்தி, அப்பாவின் போக்கு பிடிக்கவில்லை என்றாலும்
அனுசரித்து போகும் பெண்.அவளுக்குள்ளும் காதல் பூத்தது.
அவளை அவளாகவே நேசிக்கும் ஒருவன் கிடைத்தபோது அவளால் அந்த காதலை ஒதுக்க முடியவில்லை.
சம்பந்தத்துக்கு இந்த காதல் தெரியவந்தபோது ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் குதித்து,
அழகாய் பூத்திருந்த அந்த உறவை கொச்சைப்படுத்தி கூறு போட்டுவிட்டார்.
எப்போதும் அனுசரித்து போகும் ஆர்த்தி இந்த சம்பவத்துக்கு பிறகு ஒரு அழுத்தமான மவுனத்துடன் இருந்தாள்.
அப்பாவை நேரிடும்போது மட்டும் அருவெறுப்பான
ஒரு பார்வையை பார்த்துவிட்டு ஒதுங்கிவிடுவாள்.
வழக்கம்ப்போல் ஓடி ஓடி ஊரார் கல்யாண சாப்பாட்டை அனுபவித்துக்கொண்டிருந்த சம்பந்தம் அதிர்ந்து போனது,
அன்று அலுவலகம் போன ஆர்த்தி மாலையில்
வீடு திரும்பவில்லை என்று அறிந்தபோது.மூன்று நாட்கள் ஆகியும் ஆர்த்தி வீடு திரும்பவில்லை.
மகள் வராத வருத்தத்தை விட வருமானம் வராது என்ற கவலைதான் அவருக்கு.
அந்த எரிச்சலில் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தபோதுதான் அந்த கடிதம் வந்தது.
"திருவாளர் சம்பந்தம் அவர்களுக்கு
இத்துடன் இனைத்துள்ள கல்யாணப்பத்திரிக்கை உங்களுக்கு
மகளாய் பிறந்த துரதிஷ்டசாலி ஆர்த்தியுடையது.
எனக்கு கண்டிப்பாய் தெரியும் நீங்கள் அவசியம்
இந்த திருமணத்திற்கு வருவீர்கள் என்று.
வந்து அவசியம் சாப்பிட்டுவிட்டு மறக்காமல்
எப்போதும் கொடுக்கும் அந்த மொய் பணமான
25 ரூபாயை கொடுத்துவிட்டுப்போங்கள்
அதையே நீங்கள் எனக்கு கொடுத்த சீதனமாய்
வைத்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆர்த்தி
பின் குறிப்பு:அப்பாவாய் உங்கள் கடமையை நீங்கள் செய்ய தவறியிருந்தாலும்,
மகளாய் என் கடமையை மறக்கவில்லை,நீங்களும் அம்மாவும் இருக்கும்வரை
என் பணம் உங்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும்.