rambal
15-05-2003, 02:50 PM
மனக் குளத்தில்
வார்த்தை பிடிக்க
கொக்காய்
ஒற்றைக்காலில்
தவமிருந்த கதையை
எப்படிச் சொல்வேன்?
ஊதிவிட்ட
புகைவளையங்களுக்குள்
ஒற்றைமின்மினியாய்
பறந்து திரியும்
கவிதை கருவிற்கு
வலைதேடி சலித்துப்
போய் நொந்ததை
எப்படிச் சொல்வேன்?
எதையாவது எழுது
என்று பரபரத்து
எழுதிக்குவித்து
முதிர் கன்னியாய்
என் கணிணியில்
காலம் கழிக்கும்
(க)விதைகளைப் பற்றி
எப்படிச் சொல்வேன்?
குறை மாதத்தில்
பிரசவித்த
சதைப்பிண்டங்களை
உயிரோடு
அலைய விட்டு
குற்ற உணர்ச்சியில்
நாள் முழுதும் தவிப்பதை
எப்படிச் சொல்வேன்?
நிலவில் அமர்ந்து
தூண்டில் வீசி
நட்சத்திரம் பிடிக்கப் போய்
பிரபஞ்ச அழகில்
லயித்து
சொக்கிப் போய் நின்றதை
எப்படிச் சொல்வேன்?
சிறு புழு
கொண்டு
எதிர்பாராவிதமாய்
சுறா மீன் பிடித்த
கதையை
எப்படிச் சொல்வேன்?
எப்படிச் சொல்வேன்?
நான் எழுதும் க(வி)தையை...
வார்த்தை பிடிக்க
கொக்காய்
ஒற்றைக்காலில்
தவமிருந்த கதையை
எப்படிச் சொல்வேன்?
ஊதிவிட்ட
புகைவளையங்களுக்குள்
ஒற்றைமின்மினியாய்
பறந்து திரியும்
கவிதை கருவிற்கு
வலைதேடி சலித்துப்
போய் நொந்ததை
எப்படிச் சொல்வேன்?
எதையாவது எழுது
என்று பரபரத்து
எழுதிக்குவித்து
முதிர் கன்னியாய்
என் கணிணியில்
காலம் கழிக்கும்
(க)விதைகளைப் பற்றி
எப்படிச் சொல்வேன்?
குறை மாதத்தில்
பிரசவித்த
சதைப்பிண்டங்களை
உயிரோடு
அலைய விட்டு
குற்ற உணர்ச்சியில்
நாள் முழுதும் தவிப்பதை
எப்படிச் சொல்வேன்?
நிலவில் அமர்ந்து
தூண்டில் வீசி
நட்சத்திரம் பிடிக்கப் போய்
பிரபஞ்ச அழகில்
லயித்து
சொக்கிப் போய் நின்றதை
எப்படிச் சொல்வேன்?
சிறு புழு
கொண்டு
எதிர்பாராவிதமாய்
சுறா மீன் பிடித்த
கதையை
எப்படிச் சொல்வேன்?
எப்படிச் சொல்வேன்?
நான் எழுதும் க(வி)தையை...