சிவா.ஜி
24-05-2007, 07:32 AM
பொல்லாத காலம்
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
நான் சொல்வதைக் கொஞ்சம் கேளாத்தா
உண்டுக்கொழுத்த குறிசொல்லிகள்
உன்னை மறைத்து
அவர்களே அம்மாவாய் ஆனதைப் பாராத்தா!
கல்லிலும் மண்ணிலும்
கடவுளைக் கண்டோம்
கடவுளை மட்டுமே கண்டோம்!
இதனிடையில்
எங்கிருந்து வந்தார்கள்,
உன் பேர் போர்த்திய இந்த போலிகள்?
பக்தியை வியபாரமாக்கி
சக்தியும் சிவனும் நானேயென்று
கூவிக்கூவி அழைக்கும்
இந்த மோடி மஸ்தான்கள்?
ஆள்பவர்களும் அதிகாரிகளும்
இவர்களை ஆண்டவர்கள் என்று
அதிகாரப்பூர்வமாய் அறிவித்துவிட்டார்கள்!
புத்தியை தொலைத்துவிட்ட
என் தேச மக்களும்
இந்த ஏமாற்றுக்காரர்களை ஏற்றுக்கொண்டார்கள்!
அம்மா என்று
ஆசாமிகளை கும்பிடத்தொடங்கிவிட்டார்கள்!
பகவான் என்று
போலிகளை தொழுது வருகிறார்கள்!
போ... உனக்கு இனி பொல்லாத காலம் தான்
சாட்சாத் பிரசன்னமெல்லாம் இனி
சாத்தியமில்லை!
நீ தான் நீ என்று நிரூபிக்க
'அம்மாக்களிடம்' அனுமதி வாங்க வேண்டும்!
'பகவான்கள்' உன்னைப் பரிந்துரைக்க வேண்டும்!
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
நான் சொல்வதைக் கொஞ்சம் கேளாத்தா
உண்டுக்கொழுத்த குறிசொல்லிகள்
உன்னை மறைத்து
அவர்களே அம்மாவாய் ஆனதைப் பாராத்தா!
கல்லிலும் மண்ணிலும்
கடவுளைக் கண்டோம்
கடவுளை மட்டுமே கண்டோம்!
இதனிடையில்
எங்கிருந்து வந்தார்கள்,
உன் பேர் போர்த்திய இந்த போலிகள்?
பக்தியை வியபாரமாக்கி
சக்தியும் சிவனும் நானேயென்று
கூவிக்கூவி அழைக்கும்
இந்த மோடி மஸ்தான்கள்?
ஆள்பவர்களும் அதிகாரிகளும்
இவர்களை ஆண்டவர்கள் என்று
அதிகாரப்பூர்வமாய் அறிவித்துவிட்டார்கள்!
புத்தியை தொலைத்துவிட்ட
என் தேச மக்களும்
இந்த ஏமாற்றுக்காரர்களை ஏற்றுக்கொண்டார்கள்!
அம்மா என்று
ஆசாமிகளை கும்பிடத்தொடங்கிவிட்டார்கள்!
பகவான் என்று
போலிகளை தொழுது வருகிறார்கள்!
போ... உனக்கு இனி பொல்லாத காலம் தான்
சாட்சாத் பிரசன்னமெல்லாம் இனி
சாத்தியமில்லை!
நீ தான் நீ என்று நிரூபிக்க
'அம்மாக்களிடம்' அனுமதி வாங்க வேண்டும்!
'பகவான்கள்' உன்னைப் பரிந்துரைக்க வேண்டும்!