PDA

View Full Version : என்ன செய்துகொண்டு இருகிறோம்



சக்தி
23-05-2007, 08:26 AM
என்ன செய்துகொண்டு இருகிறோம்

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன.

குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.

"அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?"

தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும்.

"நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு"

குட்டி திரும்பவும் கேட்டது. "அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்"

தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது.

"பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு"

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. "இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?"

"அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்". பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

"பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?". இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

அம்மா ஒட்டகம் சொன்னது. "பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?"

இப்போது குட்டி பட்டென்று கேட்டது. "அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?"

மனோஜ்
23-05-2007, 08:31 AM
அருமை அருமை
குட்டியின் கேள்வியும் தாயின் பதிலும்
கடைசி கேள்வி அனைத்தையும் சாப்பிட்டு விட்டது

அக்னி
26-05-2007, 05:45 AM
ஹா ஹா ஹா

மனிதன் பார்த்து ரசிப்பதற்காய், விலங்குக்காட்சிச் சாலை. விலங்குகள் பார்த்து ரசிப்பதற்காய் மனிதர்கள் வரிசையில் வரும் காட்சி...

எல்லா மிருகங்களும் கேள்வி கேட்கத் தொடங்கினால், மனிதன் நிலை என்ன? ஆறாம் அறிவு மனிதனுக்கா விலங்குக்கா?

அர்த்தமுள்ள கதை...

maxman
13-06-2007, 07:24 AM
மிக அருமை, பகிர்ந்துகொன்டதற்கு நன்றி சக்தி அவர்களே!

இணைய நண்பன்
13-06-2007, 10:38 AM
சிந்தனையை தூண்டும் கேள்விதான்.நல்ல ஆக்கத்தை தந்த நண்பருக்கு பாராட்டுக்கள்.

ஓவியா
20-06-2007, 07:47 PM
அர்த்தமுள்ள கதை.....தூள்.

ந*ன்றி ச*க்தி

பாராட்டுகிறேன்.

gayathri.jagannathan
21-06-2007, 11:49 AM
சூப்பர் கதை சக்தி... நெத்தியடி...
அதுக்கு பதிலும் வெச்சிருக்கோம்ல!!
பாலைவனத்தில இருந்தா உயிரோட இருக்க முடியுமா? மக்கள் நம்மள சும்மா விட்டு இருந்துடுவான்களா?
உயிரோட இருக்கறது முக்கியமா? இல்ல குளிரிலே இருக்கறது முக்கியமா?
இது எப்படி இருக்கு? (சும்மா லுலுலாயிக்கு!!!!!)

MURALINITHISH
22-09-2008, 08:39 AM
இப்படிதான் மிருகங்களை மட்டுமல்ல நம் வீட்டு குழந்தகளை சில் வீடுகளில் பெற்றோர்கள் விருப்பத்திற்கு வைத்து உள்ளனர் நல்ல கதை