நிலா
14-05-2003, 10:56 PM
இப்பொழுதெல்லாம்
சோதனை எனக்குச் சுவாசமாகிவிட்டது
வேதனை வாடிக்கையாகி விட்டது
இழப்புகளும் இறுமாப்படைய வைக்கின்றன
என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள்
என் உணர்வை உலுக்குவதில்லை
யார் எந்தன் தன்மானத்தை
உரசிப்பார்ப்பினும் கோபம் வருவதில்லை
காத்திருக்கும் காதலி
என்னைக் கவரவில்லை
சூரிய விழிப்பு,தூக்கங்கள்
வேறுபாட்டைத் தெரிவிப்பதில்லை
பசிக்கும்,உறக்கத்திற்கும்
வித்தியாசம் உணர்வதில்லை
கலவரங்கள் என்னைக் கலவரப் படுத்துவதில்லை
பாதிப்புகளும் என்னால் பணிவாய் ஏற்கப்படுகின்றன
ஆனாலும்(அதனால்தானோ)
என்னைச் சங்கிலியால் பிணைத்து
கம்பிக் கதவுகளுக்குள் வைத்துள்ளதேன்?
சோதனை எனக்குச் சுவாசமாகிவிட்டது
வேதனை வாடிக்கையாகி விட்டது
இழப்புகளும் இறுமாப்படைய வைக்கின்றன
என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள்
என் உணர்வை உலுக்குவதில்லை
யார் எந்தன் தன்மானத்தை
உரசிப்பார்ப்பினும் கோபம் வருவதில்லை
காத்திருக்கும் காதலி
என்னைக் கவரவில்லை
சூரிய விழிப்பு,தூக்கங்கள்
வேறுபாட்டைத் தெரிவிப்பதில்லை
பசிக்கும்,உறக்கத்திற்கும்
வித்தியாசம் உணர்வதில்லை
கலவரங்கள் என்னைக் கலவரப் படுத்துவதில்லை
பாதிப்புகளும் என்னால் பணிவாய் ஏற்கப்படுகின்றன
ஆனாலும்(அதனால்தானோ)
என்னைச் சங்கிலியால் பிணைத்து
கம்பிக் கதவுகளுக்குள் வைத்துள்ளதேன்?