lolluvathiyar
22-05-2007, 04:04 PM
மனிதன் என்று விளங்கியது.
பறவைகள் பறந்து விசா இல்லாமல் எந்த தேசத்துகூட பறந்து செல்லும்
நான் ஆறு அறிவு படைத்த மனிதன் என்று இருமாப்புடன் உலாவினேன்
அப்படி இருக்க தான் எல்லாம் வேதமும் சொல்லுச்சாம்.
இல்லையடா, நீ இந்தியன் என்று கூறி ஒரு வரை படம் வரைந்து அதன் பிரஜை என்று
கூறி அதை போற்றினால் நாட்டு பற்றுடையவன் என்று பெயரிட்டனர் சிலர்.
ஆம் நான் இந்தியன் என்று இருமாப்புடன் வந்தே மாதிரம் என்று கத்தி போராடினேன்.
இல்லைடா நீ ஹிந்து என்றார்கள் சிலர்.
சில ஹிந்துகளை மதமாற்றம் பன்னிவிட்டார்களாம் என்று கிரிஸ்டியனை வெறுக்க வைத்தார்கள் சிலர்.
கோடி ஏக்கரா உள்ள நாட்டில் ஒரு ரெண்டே ஏக்கராவை காட்டி இது ராமஜன்ம பூமி என்று கூறி முஸ்லீமையும் வெறுக்க வைத்தார்கள் சிலர்.
நீ திராவிடன் உனக்கு இங்கே மட்டும் தான் வேலை என்று கூறி என்னை தென்னகத்தில் தங்க வைத்தார்கள் சிலர்.
ஆரியன் சகவாசம் வேண்டாம் ஆரியன் தெய்வம் வேண்டாம் என்று நம்ப வைத்தார்கள் சிலர்.
அது போதாது என்று என்னை தமிழன் என்று ரகம் பிரித்தார்கள் சிலர்.
கன்னடர், தெலுங்கர், மலையாளை திராவிடனாலும் அவர்களை வெறுக்க வைத்தார்கள் சிலர்
சரி தமிழன் என்று தமிழ் நாட்டில் சந்தோசமாக இருக்கலாம் என்றால்.
கோவை தமிழா சிறந்ததா மதுரை தமிழ் சிறந்ததா என்று வாக்குவாதம் பண்ணி நான் கோவை தமிழன் என்ற காலரை தூக்கி கோவையிலே கொட்டாரமடித்தேன். தெண்தமிழகத்தாரை வெறுக்க வைத்தார்கள்.
போதுமா, கல்லூரியில் முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மானவர்களுக்கு ஆகாதே
கணினி துரை மானவன் காமர்ஸ் துரை மானவியை சைட் அடித்தால் சண்டை வருதே.
நீ மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவன் என்று புதிய மதத்தை எனக்கு புகுத்தினார்கள்.
பக்கத்து ஊருகாரங்க எங்க ஊர் வாய்காலை இரவில் வெட்டியதால் அந்த ஊர்காரரிடம் சண்டை.
எங்க ஊரில் வேறு சாதி பையன் எங்க சாதி பெண்ணை காதல் செய்தானாம்.
கோபம் தலைக்கேறியது, யாருடா அவன்
காட்ட வித்து கள்ளு குடித்தாலும் நான் ..... நிருபிக்க
வீச்சரிவாளோட புரப்பட்ட எங்கள் சாதி படை, இரு சாதியிலும் பல பெண்களை விதவை ஆகி விட்டோம்.
எங்க சாதி தான் ஆனா எங்க தெருவில் குப்பை கொட்டியதால் அடுத்த தெருவுக்கு போக்கு வரத்து கிடையாது.
இந்த பிளவு போதுமா? பத்துமா?
ஒரே சாதினாலும் குலம் வேற அல்லவா, முக்குக்கு ஒரு கோவில் கட்டியாச்சு.
ஒரே குலம் என்றாலும் சாமி வழிபாடு வேற வேற.
அபிசேகம பண்ண ஒரு சாமி, கிடா வெட்ட ஒரு சாமி.
என்கிருந்து எங்க வந்துட்டோம்னு பாருங்க.
நீங்களே சொல்லுங்க ஐயா, அங்கங்க காரியம் ஆவனும்னா
காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்டு, ஆதிமுகா, திமுகா
இப்படி ஏதாவது சாதியில் சாரி கட்சியில இருந்தா தானுஙக் ஆகும்
அப்ப தான் நம்மள கண்டு ஊர்ல நாலு பேரு பயபடுவாங்க.
எந்த கட்சியில் இல்லீனா சொத்த புடுங்கிருவாங்கப்பா
இத்தோட நிப்பமுங்களா, பக்கத்து வீட்டுகாரன் நாய் எங்க வீட்டு மாட்ட கடிச்சு, நான் அவங்க நாய அடிச்சு, சண்டை முத்தி, இப்ப பேச்சு வார்த்தை இல்லை
பக்கது நாடு பகை, ஆரியர்கள் ஆகாது, பக்கத்து மாநிலம் கூடாது,
வேற்று மொழி எனக்கு அலர்ஜி, மற்ற மதங்கள் ஒத்துக்காது,
வேற சாதி ஏரியாவுக்கே போக மாட்டோம். எங்க சாதியில குலப் பிரச்சனை பக்கத்து தெரு, பக்கத்து வீடு எல்லாம் பகையா?
இப்படி என்னால மனித வர்கத்த எத்தனை கூறு போட முடியுமோ அத்தனை கூறு போட்டுட்டேன்.
சரி வீட்டில் மட்டும்தான் ஒற்றுமை இருக்க முடியுமா? வீடு தான் சொர்கமா.
எனக்கு வயசாயிருச்சு இனி பசங்களுக்கு சொத்த பிரிச்சு கொடுக்கலாம்னு முடிவு செய்தேன்.
யாருக்கு எந்த பாகம்னு சண்டை வந்து ஆளாலுக்கு ஒரு திசை போயிட்டாங்க.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சாதி, ஒரே குலம், அட ஒரே வியிற்றில் பிறந்தவர்கள் கூட செத்து போன 4 செண்டு பாட்டன் சொத்த பிரிக்க சண்டை போட்டு கோர்ட்டு கேசுனு 20 வருசமா நடக்கராங்கப்பா?
சோர்ந்து போச்சு.
இப்பதான் ஆண்மீகம் புரிந்தது, வேதம் புரிந்தது, கீதை புர்ந்தது.
நாடு, மதம், மொழி, இனம், சாதி, தகுதி, குலம், சொந்தம், சொத்து எல்லாம் மறைந்து
மனிதன் என்றால் என்ன என்று விளங்கியது.
நண்றி
முற்றும்
இது எனது முதல் கதை
பறவைகள் பறந்து விசா இல்லாமல் எந்த தேசத்துகூட பறந்து செல்லும்
நான் ஆறு அறிவு படைத்த மனிதன் என்று இருமாப்புடன் உலாவினேன்
அப்படி இருக்க தான் எல்லாம் வேதமும் சொல்லுச்சாம்.
இல்லையடா, நீ இந்தியன் என்று கூறி ஒரு வரை படம் வரைந்து அதன் பிரஜை என்று
கூறி அதை போற்றினால் நாட்டு பற்றுடையவன் என்று பெயரிட்டனர் சிலர்.
ஆம் நான் இந்தியன் என்று இருமாப்புடன் வந்தே மாதிரம் என்று கத்தி போராடினேன்.
இல்லைடா நீ ஹிந்து என்றார்கள் சிலர்.
சில ஹிந்துகளை மதமாற்றம் பன்னிவிட்டார்களாம் என்று கிரிஸ்டியனை வெறுக்க வைத்தார்கள் சிலர்.
கோடி ஏக்கரா உள்ள நாட்டில் ஒரு ரெண்டே ஏக்கராவை காட்டி இது ராமஜன்ம பூமி என்று கூறி முஸ்லீமையும் வெறுக்க வைத்தார்கள் சிலர்.
நீ திராவிடன் உனக்கு இங்கே மட்டும் தான் வேலை என்று கூறி என்னை தென்னகத்தில் தங்க வைத்தார்கள் சிலர்.
ஆரியன் சகவாசம் வேண்டாம் ஆரியன் தெய்வம் வேண்டாம் என்று நம்ப வைத்தார்கள் சிலர்.
அது போதாது என்று என்னை தமிழன் என்று ரகம் பிரித்தார்கள் சிலர்.
கன்னடர், தெலுங்கர், மலையாளை திராவிடனாலும் அவர்களை வெறுக்க வைத்தார்கள் சிலர்
சரி தமிழன் என்று தமிழ் நாட்டில் சந்தோசமாக இருக்கலாம் என்றால்.
கோவை தமிழா சிறந்ததா மதுரை தமிழ் சிறந்ததா என்று வாக்குவாதம் பண்ணி நான் கோவை தமிழன் என்ற காலரை தூக்கி கோவையிலே கொட்டாரமடித்தேன். தெண்தமிழகத்தாரை வெறுக்க வைத்தார்கள்.
போதுமா, கல்லூரியில் முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மானவர்களுக்கு ஆகாதே
கணினி துரை மானவன் காமர்ஸ் துரை மானவியை சைட் அடித்தால் சண்டை வருதே.
நீ மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவன் என்று புதிய மதத்தை எனக்கு புகுத்தினார்கள்.
பக்கத்து ஊருகாரங்க எங்க ஊர் வாய்காலை இரவில் வெட்டியதால் அந்த ஊர்காரரிடம் சண்டை.
எங்க ஊரில் வேறு சாதி பையன் எங்க சாதி பெண்ணை காதல் செய்தானாம்.
கோபம் தலைக்கேறியது, யாருடா அவன்
காட்ட வித்து கள்ளு குடித்தாலும் நான் ..... நிருபிக்க
வீச்சரிவாளோட புரப்பட்ட எங்கள் சாதி படை, இரு சாதியிலும் பல பெண்களை விதவை ஆகி விட்டோம்.
எங்க சாதி தான் ஆனா எங்க தெருவில் குப்பை கொட்டியதால் அடுத்த தெருவுக்கு போக்கு வரத்து கிடையாது.
இந்த பிளவு போதுமா? பத்துமா?
ஒரே சாதினாலும் குலம் வேற அல்லவா, முக்குக்கு ஒரு கோவில் கட்டியாச்சு.
ஒரே குலம் என்றாலும் சாமி வழிபாடு வேற வேற.
அபிசேகம பண்ண ஒரு சாமி, கிடா வெட்ட ஒரு சாமி.
என்கிருந்து எங்க வந்துட்டோம்னு பாருங்க.
நீங்களே சொல்லுங்க ஐயா, அங்கங்க காரியம் ஆவனும்னா
காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்டு, ஆதிமுகா, திமுகா
இப்படி ஏதாவது சாதியில் சாரி கட்சியில இருந்தா தானுஙக் ஆகும்
அப்ப தான் நம்மள கண்டு ஊர்ல நாலு பேரு பயபடுவாங்க.
எந்த கட்சியில் இல்லீனா சொத்த புடுங்கிருவாங்கப்பா
இத்தோட நிப்பமுங்களா, பக்கத்து வீட்டுகாரன் நாய் எங்க வீட்டு மாட்ட கடிச்சு, நான் அவங்க நாய அடிச்சு, சண்டை முத்தி, இப்ப பேச்சு வார்த்தை இல்லை
பக்கது நாடு பகை, ஆரியர்கள் ஆகாது, பக்கத்து மாநிலம் கூடாது,
வேற்று மொழி எனக்கு அலர்ஜி, மற்ற மதங்கள் ஒத்துக்காது,
வேற சாதி ஏரியாவுக்கே போக மாட்டோம். எங்க சாதியில குலப் பிரச்சனை பக்கத்து தெரு, பக்கத்து வீடு எல்லாம் பகையா?
இப்படி என்னால மனித வர்கத்த எத்தனை கூறு போட முடியுமோ அத்தனை கூறு போட்டுட்டேன்.
சரி வீட்டில் மட்டும்தான் ஒற்றுமை இருக்க முடியுமா? வீடு தான் சொர்கமா.
எனக்கு வயசாயிருச்சு இனி பசங்களுக்கு சொத்த பிரிச்சு கொடுக்கலாம்னு முடிவு செய்தேன்.
யாருக்கு எந்த பாகம்னு சண்டை வந்து ஆளாலுக்கு ஒரு திசை போயிட்டாங்க.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சாதி, ஒரே குலம், அட ஒரே வியிற்றில் பிறந்தவர்கள் கூட செத்து போன 4 செண்டு பாட்டன் சொத்த பிரிக்க சண்டை போட்டு கோர்ட்டு கேசுனு 20 வருசமா நடக்கராங்கப்பா?
சோர்ந்து போச்சு.
இப்பதான் ஆண்மீகம் புரிந்தது, வேதம் புரிந்தது, கீதை புர்ந்தது.
நாடு, மதம், மொழி, இனம், சாதி, தகுதி, குலம், சொந்தம், சொத்து எல்லாம் மறைந்து
மனிதன் என்றால் என்ன என்று விளங்கியது.
நண்றி
முற்றும்
இது எனது முதல் கதை