சக்தி
20-05-2007, 07:42 AM
வானத்து வெண்ணிலவே
என் வஞ்சியவளை
காண்பாயோ?
கணமேனும் அவளை
மறவேன் - என்று
அவள் காதருகில்
சொல்வாயோ?
நினைவெல்லாம்
அவளாக
நித்திரையைத்
தொலைத்து விட்டேன்
உயிரெல்லாம்
அவளாக
உண்பதையும்
நிருத்திவிட்டேன்
என்றவள்
மனமறிய சொல்வாயோ?
உயிர் தான்
பிரிந்தனவே
உடலிருந்து என்ன பயன்
என்றவள் எண்ண வேண்டாம்
அவள் உயிரை
மீட்டெடுத்து சேர்ப்பேன்
என்று உரைப்பாயோ?
பசலை கண்டு
அவள் படுத்திருந்தால்
அவள்
பசலை நீக்க
வருவேன் - என்று
அவள்
பாதந்தொட்டு
சொல்வாயோ?
அவள்
உன்னில் பேரழகி
என்று
போகாமல்
இருந்து விடாதே
உன் தோழி
துயர் துடைப்பது
உந்தன் கடமையன்ரோ.
என் வஞ்சியவளை
காண்பாயோ?
கணமேனும் அவளை
மறவேன் - என்று
அவள் காதருகில்
சொல்வாயோ?
நினைவெல்லாம்
அவளாக
நித்திரையைத்
தொலைத்து விட்டேன்
உயிரெல்லாம்
அவளாக
உண்பதையும்
நிருத்திவிட்டேன்
என்றவள்
மனமறிய சொல்வாயோ?
உயிர் தான்
பிரிந்தனவே
உடலிருந்து என்ன பயன்
என்றவள் எண்ண வேண்டாம்
அவள் உயிரை
மீட்டெடுத்து சேர்ப்பேன்
என்று உரைப்பாயோ?
பசலை கண்டு
அவள் படுத்திருந்தால்
அவள்
பசலை நீக்க
வருவேன் - என்று
அவள்
பாதந்தொட்டு
சொல்வாயோ?
அவள்
உன்னில் பேரழகி
என்று
போகாமல்
இருந்து விடாதே
உன் தோழி
துயர் துடைப்பது
உந்தன் கடமையன்ரோ.