அமரன்
19-05-2007, 04:34 PM
1996 ஆம் வருடம். மாதங்களில் சிறந்த மார்கழி மாதம். அப்போது நான் கல்விப்பொதுத் தராதரத்தின் சாதாரண தரம் படித்துக்கொண்டிருந்தேன். இந்திய கல்விக்கொள்கையின் பிரகாரம் அது பத்தாவது வகுப்பு. மார்க்ழி மாதம் எமது ஆண்டுத்தேர்வுக் காலம். எனது எதிகாலத்தின் முதலாவது படியைத் தாண்டி அடுத்த படியில் ஏறப்போகின்ற சோதனைக்காலம்.
அன்று கணிதபாடப் பரீட்சை. அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து தயாராகி 7.30 மணியளவில் பேருந்துக்காகக் தரிப்பிடத்தில் காத்திருந்தேன். வீதியில் அக்காலை வேளையில் வாக நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. நான் தங்கியிருந்த கொழும்பு நகரம் ஒரு வியாபார நகரம். இலங்கையின் தலை நகரம். மேல் வர்க்கத்தினரின் மகிழுந்துகளும் நடுத்தர வர்க்கத்தினரின் போக்குவரத்து சாதனமான பேருந்துகளும் முச்சக்கர வாகனங்களும் போக்குவரத்தை நெரிசலாக்கிக்கொண்டிருந்தன.
நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக இருக்கும் நாடு என்பதால் பேருந்துகல் நிறைமாதக்கர்ப்பிணி போல இருந்தன. ஏற முடியாத அளவுக்கு மக்களால் நிறைந்து வந்தன. அப்படியாக பேருந்துகள் சிலவற்றை தெரிந்தே தவற விட்டேன். நேரம் 8 மணியை நெருங்கியது. 8.30 மணிக்கு தேர்வு மண்டபத்தில் இருந்தாக வேண்டும். அடுத்து வந்த பேருந்தில் தொற்றிக்கொண்டேன்.
ஒரு காலை பேருந்தின் மிதிபலகையில் பாதி வைத்துக்கொண்டு மறுகாலை காற்றில் அந்தரத்தில் தொங்கவிட்டேன். அப்படித்தான் நிற்க முடிந்தது. மிதிபலகை முழுக்க பயணிகள் நின்றிருந்தனர். ஒரு கையை மட்டும் பேருந்தின் யன்னல் கம்பியில் பிடித்திருந்தேன். கையை விட்டால் பின்னால் வரும் பேருந்து என்னை எமலோகம் அனுப்பிவிடும். அதனால் மிக கவனமாகப் பிடித்திருந்தேன்.
என் பக்கமாக வந்த ஒரு திருப்பத்தில் பேருந்து திரும்பியது. உள்ளே இருந்த பயணிகள் உட்பட அனைவரும் என்பக்கம் தள்ளப்பட்டனர். எனக்கு முன்னால் மிதிபலகையில் நின்றோரும் என்பக்கமாகத் தள்ளப்பட்டு என்னை மிதிபலகையிலிருந்து கீழே தள்ளி விடும் அளவுக்கு வந்தனர். எனது கைப்பிடி கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டிருந்தது. பின்னாலோ வேறு பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்பேருந்தைப் பார்க்க எனக்கு யமதர்மராஜன் வருவதுபோல இருந்தது. என் கை யன்னலின் கம்பியிலிருந்து விடுபட்டுவிட்டது.
செத்தேன் என நினைத்தேன். ஆனால் என்னை அறியாமல் மரணம் தந்த பயத்தில் என் கைகள் ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டன. அப்பிடியை வலுவாக்கிக்கொண்டு என்னை நிலை நிறுத்தினேன். பேருந்தும் நிமிர்ந்ததனால் என்னால் நிலைத்து நிற்க முடிந்தது. என் கை பற்றி இருப்பது எதுவென்று பார்த்தேன். அது ஒரு பெண்ணின் பாவாடை. அப்பெண் ஒருகையால் பேருந்துக் கம்பியைப் பிடித்துக்கொண்டு மறு கையால் பாவாடை அவிழ்ந்து விடாமால்ப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
நான் அதிர்ந்தேன். பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. புரிந்துகொண்ட அப்பெண் 'பரவாயில்லை. பிடித்துக்கொளுங்கள்' என்று சிங்களத்தில் சொன்னாள். எனக்கு நிம்மதியாக இருந்தது. ஒருவாறு பரீட்சை எழுதி முடித்து விட்டேன். அடுத்து வந்த நாட்களில் ஒரு நாள் புதினத்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். கடைசிப்பக்கத்தில் மந்திரியின் விபச்சார விடுதியில் பிடிபட்ட பெண்ணைப் பாற்றிய செய்தி நிழல்படத்துடன் இருந்தது. அந்த நிழல் படத்தில் இருந்தது பேருந்தில் என்னைக் காப்பாற்றிய அதே பெண்.
அன்று கணிதபாடப் பரீட்சை. அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து தயாராகி 7.30 மணியளவில் பேருந்துக்காகக் தரிப்பிடத்தில் காத்திருந்தேன். வீதியில் அக்காலை வேளையில் வாக நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. நான் தங்கியிருந்த கொழும்பு நகரம் ஒரு வியாபார நகரம். இலங்கையின் தலை நகரம். மேல் வர்க்கத்தினரின் மகிழுந்துகளும் நடுத்தர வர்க்கத்தினரின் போக்குவரத்து சாதனமான பேருந்துகளும் முச்சக்கர வாகனங்களும் போக்குவரத்தை நெரிசலாக்கிக்கொண்டிருந்தன.
நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக இருக்கும் நாடு என்பதால் பேருந்துகல் நிறைமாதக்கர்ப்பிணி போல இருந்தன. ஏற முடியாத அளவுக்கு மக்களால் நிறைந்து வந்தன. அப்படியாக பேருந்துகள் சிலவற்றை தெரிந்தே தவற விட்டேன். நேரம் 8 மணியை நெருங்கியது. 8.30 மணிக்கு தேர்வு மண்டபத்தில் இருந்தாக வேண்டும். அடுத்து வந்த பேருந்தில் தொற்றிக்கொண்டேன்.
ஒரு காலை பேருந்தின் மிதிபலகையில் பாதி வைத்துக்கொண்டு மறுகாலை காற்றில் அந்தரத்தில் தொங்கவிட்டேன். அப்படித்தான் நிற்க முடிந்தது. மிதிபலகை முழுக்க பயணிகள் நின்றிருந்தனர். ஒரு கையை மட்டும் பேருந்தின் யன்னல் கம்பியில் பிடித்திருந்தேன். கையை விட்டால் பின்னால் வரும் பேருந்து என்னை எமலோகம் அனுப்பிவிடும். அதனால் மிக கவனமாகப் பிடித்திருந்தேன்.
என் பக்கமாக வந்த ஒரு திருப்பத்தில் பேருந்து திரும்பியது. உள்ளே இருந்த பயணிகள் உட்பட அனைவரும் என்பக்கம் தள்ளப்பட்டனர். எனக்கு முன்னால் மிதிபலகையில் நின்றோரும் என்பக்கமாகத் தள்ளப்பட்டு என்னை மிதிபலகையிலிருந்து கீழே தள்ளி விடும் அளவுக்கு வந்தனர். எனது கைப்பிடி கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டிருந்தது. பின்னாலோ வேறு பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்பேருந்தைப் பார்க்க எனக்கு யமதர்மராஜன் வருவதுபோல இருந்தது. என் கை யன்னலின் கம்பியிலிருந்து விடுபட்டுவிட்டது.
செத்தேன் என நினைத்தேன். ஆனால் என்னை அறியாமல் மரணம் தந்த பயத்தில் என் கைகள் ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டன. அப்பிடியை வலுவாக்கிக்கொண்டு என்னை நிலை நிறுத்தினேன். பேருந்தும் நிமிர்ந்ததனால் என்னால் நிலைத்து நிற்க முடிந்தது. என் கை பற்றி இருப்பது எதுவென்று பார்த்தேன். அது ஒரு பெண்ணின் பாவாடை. அப்பெண் ஒருகையால் பேருந்துக் கம்பியைப் பிடித்துக்கொண்டு மறு கையால் பாவாடை அவிழ்ந்து விடாமால்ப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
நான் அதிர்ந்தேன். பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. புரிந்துகொண்ட அப்பெண் 'பரவாயில்லை. பிடித்துக்கொளுங்கள்' என்று சிங்களத்தில் சொன்னாள். எனக்கு நிம்மதியாக இருந்தது. ஒருவாறு பரீட்சை எழுதி முடித்து விட்டேன். அடுத்து வந்த நாட்களில் ஒரு நாள் புதினத்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். கடைசிப்பக்கத்தில் மந்திரியின் விபச்சார விடுதியில் பிடிபட்ட பெண்ணைப் பாற்றிய செய்தி நிழல்படத்துடன் இருந்தது. அந்த நிழல் படத்தில் இருந்தது பேருந்தில் என்னைக் காப்பாற்றிய அதே பெண்.