View Full Version : பொல்லாத உலகம்.
நீ நடக்கும் போது
பூமி உடைந்துவிடக் கூடுமானால்
சற்று நட.
பொல்லாத உலகம்
இல்லாது போகட்டும்
அறிஞர்
18-05-2007, 09:18 PM
நம்மால் பிறருக்கு
நன்மை பயக்குமாயின்...
செய்வதில் தவறில்லை...
நான் சொல்வேன்
நீ நடவாதே
பொல்லாத உலகம்
இல்லாது போனால்
எங்கே உன்னை
நான் மீண்டும் காண்பது!!
சுட்டிபையன்
19-05-2007, 06:12 AM
அழகாண கவிதை ஆதவா
மயூ அதைவிட பின்னி எடுத்து விட்டார் மயூவின் கவிதைக்குத்தான் எனது வாக்கு
மயூ இதுக்கு ஒரு 200 காசு அனுப்பப்பா
யோவ் சுட்டி நீர்தாம்பா எனக்கு தரோணும்!!!!
அமரன்
17-07-2007, 11:46 AM
ஆதவா...கவி அருமை...
மயூவின் கவியும் அருமை...
பண்பை தேடுகின்றொம்
அன்பைத் தேடுகின்றோம்
மனிதனையே தேடுகின்றோம்..
பொல்லாத உலகமல்ல
அல்லாத உலகமிது
இல்லாது போகட்டும்...
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ஓவியன்
17-07-2007, 06:29 PM
ஆதவரின் வரிகளும் அதற்கு மயூவின் பதிலூட்டமும் அருமையிலும் அருமை − வாழ்த்துக்கள் மக்களே!.
அக்னி
17-07-2007, 06:45 PM
பொல்லாதவனா... நான்..?
இல்லை...
உனக்கு முண்டு கொடுக்கும்
பொல் ஆதவன்... நான்...
வாழ்த்துக்கள் நவரசக்கவி...
ஓவியன்
17-07-2007, 06:54 PM
பொல்லாதவனா... நான்..?
இல்லை...
உனக்கு முண்டு கொடுக்கும்
பொல் ஆதவன்... நான்....
ஹீ!
சத்தடி சாட்டில் ஆதவனை பொல்லாதவன், பொல் ஆதவன் என்றெல்லாம் திட்டித் தீர்த்து விட்டீரே அக்னி!.
அக்னி
17-07-2007, 06:55 PM
ஹீ!
சத்தடி சாட்டில் ஆதவனை பொல்லாதவன், பொல் ஆதவன் என்றெல்லாம் திட்டித் தீர்த்து விட்டீரே அக்னி!.
இது அபாண்டம் ஓவியரே... நான் பின்னூட்டம் கவியை அடியொற்றியே இட்டேன்... :whistling: