umakarthick
16-05-2007, 06:21 AM
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - இயல் கவிதைப் பிரிவு - நடுவர் மாலன்
===========================================================
முதல் ஆறுதல் பரிசுக்குரிய கவிதை
பேருந்தில்
வேர்வை, அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரிப் பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடியவில்லை பெரும் சப்தத்துடன்
இணையாகக் கடந்து போகும் ரயிலை.
- கார்த்திக் பிரபு
சென்னை
(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
நன்றி புகாரி , மாலன் , அன்புடன்
இந்த பரிசு இன்னும் என்னை நிறைய எழுத ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை
ஆனால் என்னுடைய இரு கவிதைகள் நான் கடைசியாக அனுப்பி இருந்தவைகளி முதலில் அனுப்பி இருந்தால் அதற்கு பரிசு
கிடைச்சிருக்குமோன்னு ஒரு ஆதங்கம்
அந்த கவிதையை இங்கே இடுகிறேன்.
இரவு நேர பேருந்து பயணம்:
நேரத்தை மிச்ச படுத்த
இரவை தேர்ந்தெடுக்கிறோம்
திறக்க முடியா ஜன்னல்
காலடியில் கடலை தோல்
திரைப் படம் போடுகிறார்கள்
அதே கதாநாயகன் ,அதே கதாநாயகி
ஆர்பரிக்கும் குழந்தைகள்
அடங்கி விடுகிறார்கள் சீக்கிரமே
'பஸ் பத்தி நிமிசம் நிக்கும்'
குரல் பழகி விட்டது
எதிர்படும் வாகங்களின் வேகம்
எதை கைப்பற்ற விரைகிறார்களோ
என எண்ணத் தோன்றும்
ஒவ்வொரு அபாயகரமான
வளைவுகளில் திரும்பும் போது
இறுகப் பற்றிக் கொள்கிறேன்
இருக்கைகளை
அதிகாலை வானம் சிற்சில பறவைகள்
உலகம் ரம்மியமானது தான்
பேருந்து இலைக்கை அடையும்
போது உறக்கம் இமைமுட்டும்
ந(ர)கர வாழ்க்கையின் அடுத்த நாள்
இரவில் கனவு வரும்
பேருந்தில் பயணிப்பது போல!
===========================================================
முதல் ஆறுதல் பரிசுக்குரிய கவிதை
பேருந்தில்
வேர்வை, அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரிப் பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடியவில்லை பெரும் சப்தத்துடன்
இணையாகக் கடந்து போகும் ரயிலை.
- கார்த்திக் பிரபு
சென்னை
(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
நன்றி புகாரி , மாலன் , அன்புடன்
இந்த பரிசு இன்னும் என்னை நிறைய எழுத ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை
ஆனால் என்னுடைய இரு கவிதைகள் நான் கடைசியாக அனுப்பி இருந்தவைகளி முதலில் அனுப்பி இருந்தால் அதற்கு பரிசு
கிடைச்சிருக்குமோன்னு ஒரு ஆதங்கம்
அந்த கவிதையை இங்கே இடுகிறேன்.
இரவு நேர பேருந்து பயணம்:
நேரத்தை மிச்ச படுத்த
இரவை தேர்ந்தெடுக்கிறோம்
திறக்க முடியா ஜன்னல்
காலடியில் கடலை தோல்
திரைப் படம் போடுகிறார்கள்
அதே கதாநாயகன் ,அதே கதாநாயகி
ஆர்பரிக்கும் குழந்தைகள்
அடங்கி விடுகிறார்கள் சீக்கிரமே
'பஸ் பத்தி நிமிசம் நிக்கும்'
குரல் பழகி விட்டது
எதிர்படும் வாகங்களின் வேகம்
எதை கைப்பற்ற விரைகிறார்களோ
என எண்ணத் தோன்றும்
ஒவ்வொரு அபாயகரமான
வளைவுகளில் திரும்பும் போது
இறுகப் பற்றிக் கொள்கிறேன்
இருக்கைகளை
அதிகாலை வானம் சிற்சில பறவைகள்
உலகம் ரம்மியமானது தான்
பேருந்து இலைக்கை அடையும்
போது உறக்கம் இமைமுட்டும்
ந(ர)கர வாழ்க்கையின் அடுத்த நாள்
இரவில் கனவு வரும்
பேருந்தில் பயணிப்பது போல!