ஷீ-நிசி
14-05-2007, 04:36 PM
நண்பர்களே, இது என்னுடைய முதல் நீள கவிதை.... 2002-ல் எழுதியது!
இரவு நேரம்
வெளியில் வந்து
வானத்தைப் பார்த்தேன்...
என் கனவில்
மட்டுமே தோன்றி,
தன் காதலை வெளிபடுத்தும்
காதலியைப் போல!
இந்த நிலவும்
இரவில் மட்டுமே தோன்றி,
தன் வெளிச்சத்தைக்
கொடுக்கிறது!
இந்த நிலவு
பகலில் தோன்றுமா?!
ஒருவேளை
இந்த நிலவு
பகலில் தோன்றினால்தான்
என் காதலும்
வெளிப்படுமோ?!
ஓ! கடவுளே
அப்படி எதுவும்
இருக்கக்கூடாது....
எப்பொழுது
இந்த நிலவு
பகலில் தோன்றுவது..
எப்பொழுது
என் காதல்
வெளிப்படுவது....
கலக்கத்துடன்
என் படுக்கைக்குச்
சென்றேன்.
அலாரம்
பத்துமுறை அலறியது.
அதைவிட அதிகமாய்
என் அம்மா -என்னை
எழுப்பிக்கொண்டிருந்தாள்!
கையில்
காபிகோப்பையுடன்
வெளியில் வந்து
வானத்தைப் பார்த்தேன்!
சூரியனின் வெளிச்சம்
என் கண்களை கூசின...
உற்றுப்பார்த்தேன்...
வழிகின்ற கண்ணீரையும்
பொருட்படுத்தாமல்,
மீண்டும் மீண்டும்
உற்றுப்பார்த்தேன்!
ஆம்! கண்டேன்!
பகலில் நிலாவைக் கண்டேன்!
நன்றாக உற்றுப்பாருங்கள்!
பளபளக்கும்
வெளிச்சத்தின் மத்தியில்,
நீங்கள் இரவில்
காணும் அதே நிலவு*
உங்களுக்கும் தென்படுவாள்!
அப்படியென்றால்,
என் காதலியும்
சூரியனில் மறைந்திருக்கும்
நிலவைப் போல,
இந்நாள்வரை
தன் காதலை எனக்கு
மறைமுகமாக
உணர்த்தியிருக்கிறாளோ!
நான் தான்
புரிந்துகொள்ளவில்லையா?!
சந்தோஷத்துடன்
நிலாச்சூரியனுக்கு
ஒரு சல்யூட்
அடித்துவிட்டு,
அவளை பார்ப்பதற்கு
ஓடினேன்!
வெறுங்கையுடனா செல்வது...
அருகிலிருந்த
ஷாப்பிங் செண்டருக்குள்
நுழைந்தேன்!
அழகழகான பொருட்கள்
எல்லாம் அவளை
நினைவுபடுத்தின!
அவளை நினைவுபடுத்துகிற
எல்லாப் பொருட்களுமே
மிகவும் அழகாக இருந்தன -என்ற
வார்த்தைகள் பொறிக்கபட்டிருந்த
வாழ்த்து அட்டையை
வாங்கினேன்.
சென்றேன்,
பார்த்தேன்,
சொன்னேன் காதலை!
கொடுத்தேன் வாழ்த்து அட்டையை!
ஏற்றுக்கொண்டால்,
வாழ்த்து அட்டையோடு
என் காதலையும்!
பல இடங்களுக்கு
ஒன்றாக திரிந்தோம்!
சுதந்திர தினத்திற்கு கூட
வாழ்த்து அட்டை
பரிமாறிக்கொண்டோம்!
ஒரு நாள்
கடற்கரையில்....
நான் மட்டும் தனியாக,
கடலலைகளை என்
கால்களை தழுவ
அனுமதிகொடுத்துவிட்டு
நடந்தேன்!
அதோ,
தூரத்தில் வர்ணப்புள்ளியாய்
என்னவள்,
அதிர்ந்தேன்
அவளுடன் இன்னொருவன்,
அவள் கரங்களைப் பற்றியபடி!
இம்முறை மீண்டும்
வானத்தைப் பார்த்தேன்,
இதோ, இன்னொரு
மேகம் அந்த நிலவை
மெல்ல தழுவ ஆரம்பித்தது!
நினைத்துக்கொண்டேன்,
இந்த மேகமும்
நிலையானதல்ல!
----------------------------
*கவிதைக்குப் பொய் அழகு
இரவு நேரம்
வெளியில் வந்து
வானத்தைப் பார்த்தேன்...
என் கனவில்
மட்டுமே தோன்றி,
தன் காதலை வெளிபடுத்தும்
காதலியைப் போல!
இந்த நிலவும்
இரவில் மட்டுமே தோன்றி,
தன் வெளிச்சத்தைக்
கொடுக்கிறது!
இந்த நிலவு
பகலில் தோன்றுமா?!
ஒருவேளை
இந்த நிலவு
பகலில் தோன்றினால்தான்
என் காதலும்
வெளிப்படுமோ?!
ஓ! கடவுளே
அப்படி எதுவும்
இருக்கக்கூடாது....
எப்பொழுது
இந்த நிலவு
பகலில் தோன்றுவது..
எப்பொழுது
என் காதல்
வெளிப்படுவது....
கலக்கத்துடன்
என் படுக்கைக்குச்
சென்றேன்.
அலாரம்
பத்துமுறை அலறியது.
அதைவிட அதிகமாய்
என் அம்மா -என்னை
எழுப்பிக்கொண்டிருந்தாள்!
கையில்
காபிகோப்பையுடன்
வெளியில் வந்து
வானத்தைப் பார்த்தேன்!
சூரியனின் வெளிச்சம்
என் கண்களை கூசின...
உற்றுப்பார்த்தேன்...
வழிகின்ற கண்ணீரையும்
பொருட்படுத்தாமல்,
மீண்டும் மீண்டும்
உற்றுப்பார்த்தேன்!
ஆம்! கண்டேன்!
பகலில் நிலாவைக் கண்டேன்!
நன்றாக உற்றுப்பாருங்கள்!
பளபளக்கும்
வெளிச்சத்தின் மத்தியில்,
நீங்கள் இரவில்
காணும் அதே நிலவு*
உங்களுக்கும் தென்படுவாள்!
அப்படியென்றால்,
என் காதலியும்
சூரியனில் மறைந்திருக்கும்
நிலவைப் போல,
இந்நாள்வரை
தன் காதலை எனக்கு
மறைமுகமாக
உணர்த்தியிருக்கிறாளோ!
நான் தான்
புரிந்துகொள்ளவில்லையா?!
சந்தோஷத்துடன்
நிலாச்சூரியனுக்கு
ஒரு சல்யூட்
அடித்துவிட்டு,
அவளை பார்ப்பதற்கு
ஓடினேன்!
வெறுங்கையுடனா செல்வது...
அருகிலிருந்த
ஷாப்பிங் செண்டருக்குள்
நுழைந்தேன்!
அழகழகான பொருட்கள்
எல்லாம் அவளை
நினைவுபடுத்தின!
அவளை நினைவுபடுத்துகிற
எல்லாப் பொருட்களுமே
மிகவும் அழகாக இருந்தன -என்ற
வார்த்தைகள் பொறிக்கபட்டிருந்த
வாழ்த்து அட்டையை
வாங்கினேன்.
சென்றேன்,
பார்த்தேன்,
சொன்னேன் காதலை!
கொடுத்தேன் வாழ்த்து அட்டையை!
ஏற்றுக்கொண்டால்,
வாழ்த்து அட்டையோடு
என் காதலையும்!
பல இடங்களுக்கு
ஒன்றாக திரிந்தோம்!
சுதந்திர தினத்திற்கு கூட
வாழ்த்து அட்டை
பரிமாறிக்கொண்டோம்!
ஒரு நாள்
கடற்கரையில்....
நான் மட்டும் தனியாக,
கடலலைகளை என்
கால்களை தழுவ
அனுமதிகொடுத்துவிட்டு
நடந்தேன்!
அதோ,
தூரத்தில் வர்ணப்புள்ளியாய்
என்னவள்,
அதிர்ந்தேன்
அவளுடன் இன்னொருவன்,
அவள் கரங்களைப் பற்றியபடி!
இம்முறை மீண்டும்
வானத்தைப் பார்த்தேன்,
இதோ, இன்னொரு
மேகம் அந்த நிலவை
மெல்ல தழுவ ஆரம்பித்தது!
நினைத்துக்கொண்டேன்,
இந்த மேகமும்
நிலையானதல்ல!
----------------------------
*கவிதைக்குப் பொய் அழகு