View Full Version : என்றாவது..
என்றாவது
அன்றாவருவது
தின்றாவது
என்றாவது?.
அரசன்
12-05-2007, 12:08 PM
என்றாவது
அன்றாவருவது
தின்றாவது
என்றாவது?
நான் கொஞ்சம் அறிவுஜீவி. அதனால எனக்கு கொஞ்சம் புரியவையுங்களேன்
தாமரை
12-05-2007, 12:15 PM
அதுசரி, நேத்துக் கொடுத்த ஒன்பது வார்த்தைகள் உங்களை இப்படி பாதிக்கும் என நான் நினைக்கவில்லை
பற்றுக
பற்றற்றான்
பற்றினை
பற்றினால்
பற்றினார்
பற்றினால்
பற்றும்
பற்றின்
பற்று..
அல்லிராணி
12-05-2007, 12:18 PM
என்றாவது
அன்றாவருவது
தின்றாவது
என்றாவது?
இது பலரின்
கண் ராவுது.
ஹி ஹி ஆமாம் ஆமா... அதுக்கு இன்னும் விளங்காமல் விளங்கியும் இருக்கிறேன்.... :)
அரசன்
12-05-2007, 12:29 PM
ஹி ஹி ஆமாம் ஆமா... அதுக்கு இன்னும் விளங்காமல் விளங்கியும் இருக்கிறேன்.... :)
குழப்பாமல், குழப்புகிறீர்கள்
mravikumaar
12-05-2007, 02:09 PM
ஒன்றும் புரியவில்லை.
அன்புடன்,
ரவிக்குமார்
என்றாவது - என்று (எந்த நாள்)
அன்றாவருவது - அந்+ஆ+வருவது = அந்த ஆடு வருவது
தின்றாவது - தின்று+ஆவது = தின்பது
என்றாவது? - என்று + ஆவது?
அந்த ஆட்டைத் தின்னும் நாள் என்று வருவது?.
mravikumaar
12-05-2007, 02:27 PM
உங்கள் விளக்கம் அருமை .
அந்தளவுக்கு புரிந்துகொல்ல முடியவில்லை
அன்புடன்,
ரவிக்குமார்
சிவா.ஜி
28-05-2007, 01:21 PM
உங்கள் விளக்கம் அருமை .
அந்தளவுக்கு புரிந்துகொல்ல முடியவில்லை
அன்புடன்,
ரவிக்குமார்
நீங்கள் கொல்லவில்லையென்றால் ஆதவா எப்போது ஆட்டை தின்பது ரவிக்குமார்?
மனோஜ்
28-05-2007, 01:44 PM
என்றாவது
அன்றாவருவது
தின்றாவது
என்றாவது?
தீ தின்று
தீ அவது
தீயில் தீருவது
அன்று
தீ தின்று
தீ அவது
தீயில் தீருவது
அன்று
தீதன்று
தீதின்று
என்று
சொல்கொன்று
இன்று
சொன்னதாலேயன்று
நான் தின்று
கறி நன்று..
lolluvathiyar
28-05-2007, 03:00 PM
[I]
[B]அன்றாவருவது - அந்+ஆ+வருவது = அந்த ஆடு வருவது
இது உங்களுக்கே நல்லா இருக்கானு கேக்கரேன்
ஆடுனு நீங்க தான் சொல்லிக்கனும் அப்படி ஒரு வார்த்தை கூட கவிதையில் இல்ல
நீங்க ஆ போடுவீங்கலாம் அத நாங்க ஆடு புரிஞ்சகனுமா.
ஐயா நாங்க பாவம் அந்த அளவுக்கு அறிவு இல்லீங்கோ
மனோஜ்
28-05-2007, 03:04 PM
தீதன்று
தீதின்று
என்று
சொல்கொன்று
இன்று
சொன்னதாலேயன்று
நான் தின்று
கறி நன்று.
கறி தின்று
கவி கொன்டு
உள் வென்று
உளம் நன்று
இது உங்களுக்கே நல்லா இருக்கானு கேக்கரேன்
ஆடுனு நீங்க தான் சொல்லிக்கனும் அப்படி ஒரு வார்த்தை கூட கவிதையில் இல்ல
நீங்க ஆ போடுவீங்கலாம் அத நாங்க ஆடு புரிஞ்சகனுமா.
ஐயா நாங்க பாவம் அந்த அளவுக்கு அறிவு இல்லீங்கோ
மன்னிக்கவும் வாத்தியாரே!! அது ஆடு இல்லை. மாடு..
ஆ என்றால் மாடு என்ற அர்த்தம் உண்டு..
அநிரை (மாடு (கூட்டம்).)
கறி தின்று
கவி கொன்டு
உள் வென்று
உளம் நன்று
இன்றொன்று
இன்றொன்று
சொல்லொன்று
சொல்லொன்று
என்று சொன்னது கவி
சரி
சொல்லொன்று...
நன்று...
மனோஜ்
28-05-2007, 03:34 PM
கவி செல்லி
கறி தின்ற
கவியே உன்
கதி என்
கலியானதா
கவி செல்லி
கறி தின்ற
கவியே உன்
கதி என்
கலியானதா
அர்த்தம் சொல்லுங்க,..
மனோஜ்
28-05-2007, 03:40 PM
கறி தின்றதை கவியாக சென்ன ஆதவா
நீர் கூறிய கவி எனக்கு (கலி என்றால்) விளையாட்டு ஆனதா
கறி தின்றதை கவியாக சென்ன ஆதவா
நீர் கூறிய கவி எனக்கு (கலி என்றால்) விளையாட்டு ஆனதா
ஒ!! அப்படியென்றால் அது களி
கலி - என்றால் ஒருவகை காலம்
கழி - என்றால் நீக்கு
களி - என்றால் விளையாடு,
பார்த்துங்க மனோ! தமிழில் வார்த்தை பிரயோகம் மிக முக்கியம்.
மனோஜ்
28-05-2007, 03:47 PM
நன்றி ஆதவா
அமரன்
15-06-2007, 08:42 PM
பற்றுக-பற்றுதல்
பற்றற்றான்-ஆசை இல்லான்
பற்றினை-அன்பினை
பற்றினால்-அன்பினால்
பற்றினார்-பற்றுதல்
பற்றினால்-பற்றுதல்
பற்றும்-பற்றுதல்
பற்றின்-அன்பின்
பற்று-ஆசை
கொஞ்சம் புரிகிறது. கொஞ்சம் புரியவில்லை. செலவரே சொல்லமுடியுமா?
சொற்பயிற்சி அளிக்கும்
ஆதவா, தாமரைக்கு நன்றிகள்..
M.Jagadeesan
06-11-2013, 01:14 AM
[QUOTE=ஆதவா;205506]என்றாவது - என்று (எந்த நாள்)
அன்றாவருவது - அந்+ஆ+வருவது = அந்த ஆடு வருவது
தின்றாவது - தின்று+ஆவது = தின்பது
என்றாவது? - என்று + ஆவது?
அந்த ஆட்டைத் தின்னும் நாள் என்று வருவது?.[/QUOTE ]
" ஆ " என்றால் " பசு ". நீங்கள் " ஆடு " என்று சொல்கிறீர்களே!