வாசகி
11-05-2007, 06:08 PM
பூக்களை நேசிக்கும்
புல்லினங்களை நேசிக்கும்
மானிட இதயங்களே
உங்களை அழைக்கின்றேன்
பூமித்தாய் பற்றிப்பேச
கற்கால மனிதன் கல்லை உரசினான்
தீயைக் கண்டு பிடித்தான்
நவீன மனிதர் நாம் தீயைக்கொண்டு
அவன் தலையை மூ(மீ)ட்டினான்
ஆதி மனிதன் கத்திசெய்தான்
காட்டை வெட்டினான்
களனியாக்கினான்
நவீன மனிதர் நாம் அடுத்தவன்
கழுத்தை வெட்டினோம்
ஆக்க சிந்தனை மனிதனால்
விஞ்ஞானம் விண்ணைத் தொட்டது
நவீன மனிதர் நம்மால்
விஞ்ஞானம் நம்மைக் கொல்லுது
பூமித்தாய் இதயத்தில்
காதை வைத்துக் கேளுங்கள்
தாங்க முடியாது அழுகின்றாள்
நம் பாவ(ர)ங்களை
புல்லினங்களை நேசிக்கும்
மானிட இதயங்களே
உங்களை அழைக்கின்றேன்
பூமித்தாய் பற்றிப்பேச
கற்கால மனிதன் கல்லை உரசினான்
தீயைக் கண்டு பிடித்தான்
நவீன மனிதர் நாம் தீயைக்கொண்டு
அவன் தலையை மூ(மீ)ட்டினான்
ஆதி மனிதன் கத்திசெய்தான்
காட்டை வெட்டினான்
களனியாக்கினான்
நவீன மனிதர் நாம் அடுத்தவன்
கழுத்தை வெட்டினோம்
ஆக்க சிந்தனை மனிதனால்
விஞ்ஞானம் விண்ணைத் தொட்டது
நவீன மனிதர் நம்மால்
விஞ்ஞானம் நம்மைக் கொல்லுது
பூமித்தாய் இதயத்தில்
காதை வைத்துக் கேளுங்கள்
தாங்க முடியாது அழுகின்றாள்
நம் பாவ(ர)ங்களை