சுட்டிபையன்
11-05-2007, 09:10 AM
இலங்கையில் தமிழ்ப் பௌத்தம்
இலங்கையின் அரசியற் பிரச்சனைக்குத் தீர்வு காணுவதில் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயற்பாடான பேச்சுவார்த்தைகளுக்கே முக்;கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என உலகின் பலம்வாய்ந்த நாடுகள் அழுத்தத்தைக் கொடுத்துவரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பவைகள் மூலம் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்படுவது போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்;போது, சிங்கள-பௌத்தம் என்பதற்கு அதிமுக்கியத்துவத்தைப் கொடுத்த ஜாதிகஹெல உருமைய என்ற பௌத்த பிக்குகளின் அரசியற் கட்சியும், ஜேவிபி யும் பாரிய வெற்றிகளை அடைந்துள்ளன@ இலங்கையின் அரசினது நிலைப்பை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டதாக ஆகியுள்ளன.
தேர்தலில் வெற்றியீட்டிய பின்னரும், இவ்விரு கட்சிகளும் சிங்கள பௌத்தம் என்பதற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, தீவிரமாகச் செயற்பட்டுவருகின்றன.
இக்கட்சிகள் மாத்திரம்தான் சிங்கள பௌத்தம் பற்றி முதன்முதலாகப் பேசுகின்றன என்பதற்கில்லை. ஆரியன் -- சிங்களம் -- சிங்களவர் பௌத்தம் -- லங்கா என்ற, ஒன்றுக்கொன்று என்ற தொடர்பு அடிப்படையிலான கோட்பாட்டு உருவாக்கமானது 1850ஆம் ஆண்டுகளிலிருந்து James de Alwis என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அனகாரிக தர்மபால, பேராசிரியர் ளு. பரணவிதான, மற்றும் பல தென்னிலங்கை ஆராய்வாளர்கள் அதை வராலாற்றுச் சான்றுகளுடாக உறுதிப்படுத்துவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுவந்துள்ளனர். துரதிஷ்டவசமாக, இலங்கைத் தமிழ் ஆய்வாளர்கள் இலக்கியங்கள், தொல்பொருட்கள் என்பவையூடாக இவர்களால் உறுதிப்படுத்தியவைகளை, விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களுடாக நிராகரிக்க முடியாத நிலையிலேதான் இன்றுவரை இருந்துவருகின்றனர்.
சிங்கள ஆய்வாளர்களதும், ஊடகங்களதும், சிங்கள அமைப்புக்களதும் பிரசாரங்களினால், இலங்கை என்றால் அது சிங்களவருக்குரிய நாடு என்றும்@ சிங்களவர்கள் என்றால், இலங்கையில் அது பௌத்தம்தான் என்றும்@ சிங்களவர்களின் மூதாதையாரான விஜய, ஏனையோர்கள் கி.மு. 543ஆம் ஆண்டிலேயே வட இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறியிருந்தனர் என்றும்@ தமிழர்கள் மிகவும் பிற்பட்ட காலத்;தில் வந்து குடியேறிய சைவர்கள், இந்துக்கள் என்றும்@ தமிழர்கள் பௌத்தத்துடன் தொடர்பற்றவர்கள் என்றும்@ இந்தநிலையில், இலங்கையில் பௌத்தத்தினைக் காக்கும் பொறுப்புச் சிங்களவர்களுக்கே உள்ளது என்றும் கூறி, சிங்கள பௌத்த மக்களைத் தம் பின்னால் அணி திரளும்படி தம்மைச் சிங்கள பௌத்த பாதுகாவலர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் தென்னிலங்கைச் சிங்கள பௌத்த மக்களுக்கு அறைகூவல் விட்டுவருகின்றனர்.
அதேவேளையில், பேராசிரியர்கள் சி. க. சிற்றம்பலம், ளு. பத்மநாதன், மற்றும் தொல்பொருள் ஆராய்வாளர் கலாநிதி ப. புஷ்பரத்தினம், மற்றும் பலர், ஒருபுறத்தில் தமிழர்களை இந்து சைவம் என்பவைகளுடன் இணைக்கையில், மறுபுறத்தில், இலங்கைத் தீவின் தமிழர்கள் கிறீஸ்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நிறுவுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளர். இன்றும் ஈடுபடுகின்றனர். இந்த நிறுவுகைக்கு இவர்கள் தென்னிலங்கைப் பாளி மொழி இலக்கியங்களான தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளைப் பயன்படுத்தும் அதே வேளையில், அவற்றில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை மாத்திரம் தூய கற்பனைக் கதைகள் என்கின்றனர். கலாந்தி புஷ்பரட்ணம் அவர்கள், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளுடன், பிராமிக் கல்வெட்டுக்களையும், பிராமி எழுத்துள்ள நாணயங்களையும், வேறு தொல்பொருட்களையும் பயன்படுத்தியுள்ளார்.
ஆனால், இவர்களின் ஆய்வுகள் விஞ்ஞானத் தன்மையற்றதாகவே உள்ளன. இதனால், இவர்கள் நிறுவ முற்பட்டவைகளைத் தமிழ் ஆய்வாளர்கள்கூட ஏற்கமுடியாத நிலைதான் காணப்படுகிறது.
அண்மைக் காலங்களில் தமிழ் நாட்டுப் பௌத்தம் பற்றிய ஆராய்வுகள் தமிழ் நாட்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்வாளர்கள், பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளபோதும், இலங்கைத் தமிழ்ப் பௌத்தம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேயில்லை. இதனால், தென்னிந்தியத் தமிழ்ப் பௌத்தம்; பற்றி ஆய்வுக் கட்டுரைகளைச் சிங்கள ஆய்வாளர்கள் தென்னிலங்கையின் ஆங்கிலத் தினசரிகளில் எழுதுவதூடாக, இலங்கைத் தமிழர்களுக்கும், பௌத்தத்திற்கும் எந்தவித தொடர்பும் முன்னர் இருந்திருக்கவில்லை என்ற எண்ணக் கருத்துக்களை வாசகர்களுக்குப் புகுத்தி வருகின்றனர். இதற்குச் சிறந்தவொரு உதாரணம்: இவ்வருடம் போசன் (Pழளழn) தினமன்று தென்னிலங்கையின் னுயடைல நேறள (02 துரநெ, 2004) தினசரியில், னுச. முநநசவாi துயலயளநமநசய என்பவரால் எழுதப்பட்ட யுசாயவெ ஆயாiனெய in ளுழரவா ஐனெயை யனெ ளுசi டுயமெய என்ற கட்டுரையாகும். இலங்கையின் தமிழ்ப் பௌத்தம் பற்;றிப் பேசாத, எழுதாத, ஆதாரபூர்வமாக நிறுவப்படாத நிலையில், இன்று தமிழர்கள் வாழும் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த எச்சங்கள் எல்லாம்;, இலங்கையின் சிங்கள பௌத்தத்தின் எச்சங்களாகவே கருதப்படுகின்றன. இது, இலங்கைத் தமிழர்கள் தங்களது வரலாறு பற்றிச் சரியாக அறிய முடியாது செய்கிறது, இன்றைய அரசியலிலும், தமிழர்களுக்குப் பெரும் பிரச்சனைகளை உருவாக்குகிறது.
உதாரணமாக: பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, யு 9 பாதை திறக்கப்பட்ட பின்னர், கந்தரோடையில் இருந்த பௌத்த எச்சப் பகுதியானது விசேட இடமாக்கப்பட்டு, அது சிங்கள பௌத்தர்களின் இடம் போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டு, பல ஆயிரம் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்தனர்.
இதனை ஒரு சாரார் எதிர்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்நோக்கிய அடிப்படைப் பிரச்சனையென்னவென்றால், அவ்விடமானது தமிழ்ப் பௌத்த எச்சங்கள் காணப்படும் இடம் என்பதை நிரூபிக்க, இலங்கையில் தமிழ்ப் பௌத்தம் இருந்தது என்பதை, எமது இலக்கிய, தொல்பொருள் ஆராய்வாளர்களாலும், பேராசிரியர்களாலும் இன்றுவரை ஆதாரபூர்வமாக நிறுவமுடியவில்லை.
இதனால், தமிழ்ப் பத்திரிகையில் சிலர் பலவாறு எழுதினர், வேறு சிலர் சிலவற்றை முன்வைத்து, எதிர்ப்புக்களைக் காட்டினர். ஆனால், பிரச்சனையை அவர்கள் தீர்த்துக்கொள்ள, அவர்களிடம் விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்கள் இருக்கவில்லை!
இந்தநிலையில், இலங்கையில் சிங்கள பௌத்தம், தமிழ்ச் சைவம், இந்துத் தமிழ் என்பவை பற்றிப் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வரும் நிலையில்;, இத்தொடர்க் கட்டுரையானது இலங்கையின் தமிழ்ப் பௌத்தம் என்று இருக்கவில்லையா என்பது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்கிறது.
இக்கட்டத்தில், இலங்கையின் பல பெரும் இலக்கிய, வரலாற்று, தொல்பொருள் ஆராய்வாளர்களாலும் ஆராய்ந்து அறியமுடியாது இருந்த விடயங்களை, இலக்கியங்கள், வரலாறு, ஏனையவைகளை G.C.E (O/L)இல் கூடப் படிக்காதவர்களும்@ கணிதம், பொறியியல், தொழில்நுட்பம், இராணுவ விஞ்ஞானம், ஏனையவைகளில் உயர் கல்வியும், பயிற்சியும் பெற்றவர்கள் எப்படி ஆராய்ந்து சரியான முடிவுகளுக்கு வர முடியும் என்ற கேள்வியானது, பலரால் அவசர அவசரமாக எழுப்பப்பட முடியும்.
இப்படியான கேள்விகள், பெரும்பாலும், இதுவரை காலமும் இலங்கைத் தமிழர்களின் வரலாறுகளையும், தமிழ்க் கல்வெட்டுக்கள், மற்றும் தொல்பொருட்களையும் ஆராய்ந்து, ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி வந்தவர்களால்தான் எழுப்பப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படும்.
ஆனால், விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை எந்தவொன்று தொடர்பாகவும்; செய்யும் வல்லமையை வளர்த்துக்கொண்ட ஒருவர், எந்தவொரு துறையின் விடயங்களையும்;இ அத்துறைசார்ந்த விடயங்களைத் தானாகப் படித்து, செய்துகொள்ளமுடியும் என்பதுதான் உண்மை. ஆனால், இங்கு மீண்டும் மீண்டும் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், அவர் ஆய்விளை விஞ்ஞான ரீதியாகச் செய்ய அறிந்திருக்கவேண்டும். இங்குதான், கணிதம், இயற்கை விஞ்ஞானம் என்பவைகளில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு இது சுலபமாகிறது!
Nāimmāna தமிழ்க் கல்வெட்டு
தென்னிலங்கையின் மாத்தற மாவட்டத்தின் (Mātara District) Nāimmāna என்ற கிராமத்தின் Hingangodawatta என்ற வளவினில், சிறிய பலகை வடிவான நாட்டப்பட்ட கற்றூனின் இரு பக்கங்களிலும்,;, தமிழிலும்;, இறுதியில் கிரந்தத்திலும் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டானது 1930ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இது, Register of Inscriptions of the Archaeological Department இல் 598ஆம் இலக்கத்தில் பதியப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின் முற்பக்கம் எழுத்துகள், ஏறக்குறைய, 2 அடி 9அங்குலம் ஓ 1 அடி அங்குலத்தையும்@ பின் பக்க எழுத்துகள் 3 அடி 1 அங்குலம் ஓ 1 அடி அங்குல அளவினுள்ளும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டானது, இன்றைய தமிழ் எழுத்துகள்போன்ற எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. அது, சிறி பராக்கிரமவாகு தேவருக்கு யாண்டு என ஆரம்பிக்கிறது. இக்கல்வெட்டின் தமிழ்ப் பகுதியில், தான மண்டபத்திற்கு அரசன் குறிப்பிட்ட சில கிராமங்களைத் தானம் செய்தமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. அக்கிராமங்களாவன: நாய்மான, குங்கங்கொல, பக்கல, கரமுல்லை,வேர்துவை உட்டப்ட்ட தோட்டம், வயல்கள்
ஆனால், கிரந்த எழுத்துக்;களில் எழுதப்பட்டிருப்பவைகளில், தான மண்டபத்தைச் சேர்ந்த 12 பிராமணர்களுக்கு Nāimmāna என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டது எனக் கூறுகிறது. தமிழ்க் கல்வெட்டில், 12 பிராமணர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
இக்கல்வெட்டினை, பேராசிரியர் ளு. பரணவிதான, பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, மற்றும் ஒருசிலர் ஆராய்ந்துள்ளனர். இக் கல்வெட்டின்; முதல் பக்கத்தின் மேற்புறமாக, சூரியன், சந்திரன் (பிறை) அடையாளங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது பக்கத்தில், சங்கும், கிழே காட்டப்பட்டுள்ள வட்ட வடிவான நான்கு செவிகளுள்ள அடையாளமும் காணப்;படுகின்றன.
http://img02.picoodle.com/img/img02/8/5/11/f_001m_d99fd29.jpghttp://img02.picoodle.com/img/img02/8/5/11/f_002m_81d3f49.jpg
இவற்றில் முழுவட்டமாக இருப்பது, சூரியனாகும். இந்தத் தமிழ்க் கல்வெட்டினில், குறிப்பிட்ட கிராமம்; 12 பிராமணர்களுக்குத் தென்னிலங்கை அரசனான பராக்கிரமபாகு என்பவனால் தானமாகக் கொடுக்கப்பட்டது பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த அரசனை, கி. பி. 1310 வரையில் அரசாண்ட மூன்றாவது பராக்கிரமபாகு எனப் பேராசிரியர் வேலுப்பிள்ளை அடையாளங் கண்டுள்ளார். பேராசிரியர் பரணவிதான இந்தவரசனை, ஆறாவது பராக்கிரமபாகு என்றுள்ளார். இவன் தம்பதேனியவிலிருந்து ஆட்சி செய்தான்
தொடரும்
இலங்கையின் அரசியற் பிரச்சனைக்குத் தீர்வு காணுவதில் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயற்பாடான பேச்சுவார்த்தைகளுக்கே முக்;கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என உலகின் பலம்வாய்ந்த நாடுகள் அழுத்தத்தைக் கொடுத்துவரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பவைகள் மூலம் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்படுவது போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்;போது, சிங்கள-பௌத்தம் என்பதற்கு அதிமுக்கியத்துவத்தைப் கொடுத்த ஜாதிகஹெல உருமைய என்ற பௌத்த பிக்குகளின் அரசியற் கட்சியும், ஜேவிபி யும் பாரிய வெற்றிகளை அடைந்துள்ளன@ இலங்கையின் அரசினது நிலைப்பை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டதாக ஆகியுள்ளன.
தேர்தலில் வெற்றியீட்டிய பின்னரும், இவ்விரு கட்சிகளும் சிங்கள பௌத்தம் என்பதற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, தீவிரமாகச் செயற்பட்டுவருகின்றன.
இக்கட்சிகள் மாத்திரம்தான் சிங்கள பௌத்தம் பற்றி முதன்முதலாகப் பேசுகின்றன என்பதற்கில்லை. ஆரியன் -- சிங்களம் -- சிங்களவர் பௌத்தம் -- லங்கா என்ற, ஒன்றுக்கொன்று என்ற தொடர்பு அடிப்படையிலான கோட்பாட்டு உருவாக்கமானது 1850ஆம் ஆண்டுகளிலிருந்து James de Alwis என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அனகாரிக தர்மபால, பேராசிரியர் ளு. பரணவிதான, மற்றும் பல தென்னிலங்கை ஆராய்வாளர்கள் அதை வராலாற்றுச் சான்றுகளுடாக உறுதிப்படுத்துவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுவந்துள்ளனர். துரதிஷ்டவசமாக, இலங்கைத் தமிழ் ஆய்வாளர்கள் இலக்கியங்கள், தொல்பொருட்கள் என்பவையூடாக இவர்களால் உறுதிப்படுத்தியவைகளை, விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களுடாக நிராகரிக்க முடியாத நிலையிலேதான் இன்றுவரை இருந்துவருகின்றனர்.
சிங்கள ஆய்வாளர்களதும், ஊடகங்களதும், சிங்கள அமைப்புக்களதும் பிரசாரங்களினால், இலங்கை என்றால் அது சிங்களவருக்குரிய நாடு என்றும்@ சிங்களவர்கள் என்றால், இலங்கையில் அது பௌத்தம்தான் என்றும்@ சிங்களவர்களின் மூதாதையாரான விஜய, ஏனையோர்கள் கி.மு. 543ஆம் ஆண்டிலேயே வட இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறியிருந்தனர் என்றும்@ தமிழர்கள் மிகவும் பிற்பட்ட காலத்;தில் வந்து குடியேறிய சைவர்கள், இந்துக்கள் என்றும்@ தமிழர்கள் பௌத்தத்துடன் தொடர்பற்றவர்கள் என்றும்@ இந்தநிலையில், இலங்கையில் பௌத்தத்தினைக் காக்கும் பொறுப்புச் சிங்களவர்களுக்கே உள்ளது என்றும் கூறி, சிங்கள பௌத்த மக்களைத் தம் பின்னால் அணி திரளும்படி தம்மைச் சிங்கள பௌத்த பாதுகாவலர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் தென்னிலங்கைச் சிங்கள பௌத்த மக்களுக்கு அறைகூவல் விட்டுவருகின்றனர்.
அதேவேளையில், பேராசிரியர்கள் சி. க. சிற்றம்பலம், ளு. பத்மநாதன், மற்றும் தொல்பொருள் ஆராய்வாளர் கலாநிதி ப. புஷ்பரத்தினம், மற்றும் பலர், ஒருபுறத்தில் தமிழர்களை இந்து சைவம் என்பவைகளுடன் இணைக்கையில், மறுபுறத்தில், இலங்கைத் தீவின் தமிழர்கள் கிறீஸ்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நிறுவுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளர். இன்றும் ஈடுபடுகின்றனர். இந்த நிறுவுகைக்கு இவர்கள் தென்னிலங்கைப் பாளி மொழி இலக்கியங்களான தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளைப் பயன்படுத்தும் அதே வேளையில், அவற்றில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை மாத்திரம் தூய கற்பனைக் கதைகள் என்கின்றனர். கலாந்தி புஷ்பரட்ணம் அவர்கள், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளுடன், பிராமிக் கல்வெட்டுக்களையும், பிராமி எழுத்துள்ள நாணயங்களையும், வேறு தொல்பொருட்களையும் பயன்படுத்தியுள்ளார்.
ஆனால், இவர்களின் ஆய்வுகள் விஞ்ஞானத் தன்மையற்றதாகவே உள்ளன. இதனால், இவர்கள் நிறுவ முற்பட்டவைகளைத் தமிழ் ஆய்வாளர்கள்கூட ஏற்கமுடியாத நிலைதான் காணப்படுகிறது.
அண்மைக் காலங்களில் தமிழ் நாட்டுப் பௌத்தம் பற்றிய ஆராய்வுகள் தமிழ் நாட்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்வாளர்கள், பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளபோதும், இலங்கைத் தமிழ்ப் பௌத்தம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேயில்லை. இதனால், தென்னிந்தியத் தமிழ்ப் பௌத்தம்; பற்றி ஆய்வுக் கட்டுரைகளைச் சிங்கள ஆய்வாளர்கள் தென்னிலங்கையின் ஆங்கிலத் தினசரிகளில் எழுதுவதூடாக, இலங்கைத் தமிழர்களுக்கும், பௌத்தத்திற்கும் எந்தவித தொடர்பும் முன்னர் இருந்திருக்கவில்லை என்ற எண்ணக் கருத்துக்களை வாசகர்களுக்குப் புகுத்தி வருகின்றனர். இதற்குச் சிறந்தவொரு உதாரணம்: இவ்வருடம் போசன் (Pழளழn) தினமன்று தென்னிலங்கையின் னுயடைல நேறள (02 துரநெ, 2004) தினசரியில், னுச. முநநசவாi துயலயளநமநசய என்பவரால் எழுதப்பட்ட யுசாயவெ ஆயாiனெய in ளுழரவா ஐனெயை யனெ ளுசi டுயமெய என்ற கட்டுரையாகும். இலங்கையின் தமிழ்ப் பௌத்தம் பற்;றிப் பேசாத, எழுதாத, ஆதாரபூர்வமாக நிறுவப்படாத நிலையில், இன்று தமிழர்கள் வாழும் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த எச்சங்கள் எல்லாம்;, இலங்கையின் சிங்கள பௌத்தத்தின் எச்சங்களாகவே கருதப்படுகின்றன. இது, இலங்கைத் தமிழர்கள் தங்களது வரலாறு பற்றிச் சரியாக அறிய முடியாது செய்கிறது, இன்றைய அரசியலிலும், தமிழர்களுக்குப் பெரும் பிரச்சனைகளை உருவாக்குகிறது.
உதாரணமாக: பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, யு 9 பாதை திறக்கப்பட்ட பின்னர், கந்தரோடையில் இருந்த பௌத்த எச்சப் பகுதியானது விசேட இடமாக்கப்பட்டு, அது சிங்கள பௌத்தர்களின் இடம் போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டு, பல ஆயிரம் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்தனர்.
இதனை ஒரு சாரார் எதிர்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்நோக்கிய அடிப்படைப் பிரச்சனையென்னவென்றால், அவ்விடமானது தமிழ்ப் பௌத்த எச்சங்கள் காணப்படும் இடம் என்பதை நிரூபிக்க, இலங்கையில் தமிழ்ப் பௌத்தம் இருந்தது என்பதை, எமது இலக்கிய, தொல்பொருள் ஆராய்வாளர்களாலும், பேராசிரியர்களாலும் இன்றுவரை ஆதாரபூர்வமாக நிறுவமுடியவில்லை.
இதனால், தமிழ்ப் பத்திரிகையில் சிலர் பலவாறு எழுதினர், வேறு சிலர் சிலவற்றை முன்வைத்து, எதிர்ப்புக்களைக் காட்டினர். ஆனால், பிரச்சனையை அவர்கள் தீர்த்துக்கொள்ள, அவர்களிடம் விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்கள் இருக்கவில்லை!
இந்தநிலையில், இலங்கையில் சிங்கள பௌத்தம், தமிழ்ச் சைவம், இந்துத் தமிழ் என்பவை பற்றிப் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வரும் நிலையில்;, இத்தொடர்க் கட்டுரையானது இலங்கையின் தமிழ்ப் பௌத்தம் என்று இருக்கவில்லையா என்பது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்கிறது.
இக்கட்டத்தில், இலங்கையின் பல பெரும் இலக்கிய, வரலாற்று, தொல்பொருள் ஆராய்வாளர்களாலும் ஆராய்ந்து அறியமுடியாது இருந்த விடயங்களை, இலக்கியங்கள், வரலாறு, ஏனையவைகளை G.C.E (O/L)இல் கூடப் படிக்காதவர்களும்@ கணிதம், பொறியியல், தொழில்நுட்பம், இராணுவ விஞ்ஞானம், ஏனையவைகளில் உயர் கல்வியும், பயிற்சியும் பெற்றவர்கள் எப்படி ஆராய்ந்து சரியான முடிவுகளுக்கு வர முடியும் என்ற கேள்வியானது, பலரால் அவசர அவசரமாக எழுப்பப்பட முடியும்.
இப்படியான கேள்விகள், பெரும்பாலும், இதுவரை காலமும் இலங்கைத் தமிழர்களின் வரலாறுகளையும், தமிழ்க் கல்வெட்டுக்கள், மற்றும் தொல்பொருட்களையும் ஆராய்ந்து, ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி வந்தவர்களால்தான் எழுப்பப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படும்.
ஆனால், விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை எந்தவொன்று தொடர்பாகவும்; செய்யும் வல்லமையை வளர்த்துக்கொண்ட ஒருவர், எந்தவொரு துறையின் விடயங்களையும்;இ அத்துறைசார்ந்த விடயங்களைத் தானாகப் படித்து, செய்துகொள்ளமுடியும் என்பதுதான் உண்மை. ஆனால், இங்கு மீண்டும் மீண்டும் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், அவர் ஆய்விளை விஞ்ஞான ரீதியாகச் செய்ய அறிந்திருக்கவேண்டும். இங்குதான், கணிதம், இயற்கை விஞ்ஞானம் என்பவைகளில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு இது சுலபமாகிறது!
Nāimmāna தமிழ்க் கல்வெட்டு
தென்னிலங்கையின் மாத்தற மாவட்டத்தின் (Mātara District) Nāimmāna என்ற கிராமத்தின் Hingangodawatta என்ற வளவினில், சிறிய பலகை வடிவான நாட்டப்பட்ட கற்றூனின் இரு பக்கங்களிலும்,;, தமிழிலும்;, இறுதியில் கிரந்தத்திலும் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டானது 1930ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இது, Register of Inscriptions of the Archaeological Department இல் 598ஆம் இலக்கத்தில் பதியப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின் முற்பக்கம் எழுத்துகள், ஏறக்குறைய, 2 அடி 9அங்குலம் ஓ 1 அடி அங்குலத்தையும்@ பின் பக்க எழுத்துகள் 3 அடி 1 அங்குலம் ஓ 1 அடி அங்குல அளவினுள்ளும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டானது, இன்றைய தமிழ் எழுத்துகள்போன்ற எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. அது, சிறி பராக்கிரமவாகு தேவருக்கு யாண்டு என ஆரம்பிக்கிறது. இக்கல்வெட்டின் தமிழ்ப் பகுதியில், தான மண்டபத்திற்கு அரசன் குறிப்பிட்ட சில கிராமங்களைத் தானம் செய்தமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. அக்கிராமங்களாவன: நாய்மான, குங்கங்கொல, பக்கல, கரமுல்லை,வேர்துவை உட்டப்ட்ட தோட்டம், வயல்கள்
ஆனால், கிரந்த எழுத்துக்;களில் எழுதப்பட்டிருப்பவைகளில், தான மண்டபத்தைச் சேர்ந்த 12 பிராமணர்களுக்கு Nāimmāna என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டது எனக் கூறுகிறது. தமிழ்க் கல்வெட்டில், 12 பிராமணர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
இக்கல்வெட்டினை, பேராசிரியர் ளு. பரணவிதான, பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, மற்றும் ஒருசிலர் ஆராய்ந்துள்ளனர். இக் கல்வெட்டின்; முதல் பக்கத்தின் மேற்புறமாக, சூரியன், சந்திரன் (பிறை) அடையாளங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது பக்கத்தில், சங்கும், கிழே காட்டப்பட்டுள்ள வட்ட வடிவான நான்கு செவிகளுள்ள அடையாளமும் காணப்;படுகின்றன.
http://img02.picoodle.com/img/img02/8/5/11/f_001m_d99fd29.jpghttp://img02.picoodle.com/img/img02/8/5/11/f_002m_81d3f49.jpg
இவற்றில் முழுவட்டமாக இருப்பது, சூரியனாகும். இந்தத் தமிழ்க் கல்வெட்டினில், குறிப்பிட்ட கிராமம்; 12 பிராமணர்களுக்குத் தென்னிலங்கை அரசனான பராக்கிரமபாகு என்பவனால் தானமாகக் கொடுக்கப்பட்டது பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த அரசனை, கி. பி. 1310 வரையில் அரசாண்ட மூன்றாவது பராக்கிரமபாகு எனப் பேராசிரியர் வேலுப்பிள்ளை அடையாளங் கண்டுள்ளார். பேராசிரியர் பரணவிதான இந்தவரசனை, ஆறாவது பராக்கிரமபாகு என்றுள்ளார். இவன் தம்பதேனியவிலிருந்து ஆட்சி செய்தான்
தொடரும்