PDA

View Full Version : தமிழ் பௌத்தம்



சுட்டிபையன்
11-05-2007, 09:10 AM
இலங்கையில் தமிழ்ப் பௌத்தம்

இலங்கையின் அரசியற் பிரச்சனைக்குத் தீர்வு காணுவதில் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயற்பாடான பேச்சுவார்த்தைகளுக்கே முக்;கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என உலகின் பலம்வாய்ந்த நாடுகள் அழுத்தத்தைக் கொடுத்துவரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பவைகள் மூலம் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்படுவது போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்;போது, சிங்கள-பௌத்தம் என்பதற்கு அதிமுக்கியத்துவத்தைப் கொடுத்த ஜாதிகஹெல உருமைய என்ற பௌத்த பிக்குகளின் அரசியற் கட்சியும், ஜேவிபி யும் பாரிய வெற்றிகளை அடைந்துள்ளன@ இலங்கையின் அரசினது நிலைப்பை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டதாக ஆகியுள்ளன.

தேர்தலில் வெற்றியீட்டிய பின்னரும், இவ்விரு கட்சிகளும் சிங்கள பௌத்தம் என்பதற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, தீவிரமாகச் செயற்பட்டுவருகின்றன.

இக்கட்சிகள் மாத்திரம்தான் சிங்கள பௌத்தம் பற்றி முதன்முதலாகப் பேசுகின்றன என்பதற்கில்லை. ஆரியன் -- சிங்களம் -- சிங்களவர் பௌத்தம் -- லங்கா என்ற, ஒன்றுக்கொன்று என்ற தொடர்பு அடிப்படையிலான கோட்பாட்டு உருவாக்கமானது 1850ஆம் ஆண்டுகளிலிருந்து James de Alwis என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அனகாரிக தர்மபால, பேராசிரியர் ளு. பரணவிதான, மற்றும் பல தென்னிலங்கை ஆராய்வாளர்கள் அதை வராலாற்றுச் சான்றுகளுடாக உறுதிப்படுத்துவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுவந்துள்ளனர். துரதிஷ்டவசமாக, இலங்கைத் தமிழ் ஆய்வாளர்கள் இலக்கியங்கள், தொல்பொருட்கள் என்பவையூடாக இவர்களால் உறுதிப்படுத்தியவைகளை, விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களுடாக நிராகரிக்க முடியாத நிலையிலேதான் இன்றுவரை இருந்துவருகின்றனர்.

சிங்கள ஆய்வாளர்களதும், ஊடகங்களதும், சிங்கள அமைப்புக்களதும் பிரசாரங்களினால், இலங்கை என்றால் அது சிங்களவருக்குரிய நாடு என்றும்@ சிங்களவர்கள் என்றால், இலங்கையில் அது பௌத்தம்தான் என்றும்@ சிங்களவர்களின் மூதாதையாரான விஜய, ஏனையோர்கள் கி.மு. 543ஆம் ஆண்டிலேயே வட இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறியிருந்தனர் என்றும்@ தமிழர்கள் மிகவும் பிற்பட்ட காலத்;தில் வந்து குடியேறிய சைவர்கள், இந்துக்கள் என்றும்@ தமிழர்கள் பௌத்தத்துடன் தொடர்பற்றவர்கள் என்றும்@ இந்தநிலையில், இலங்கையில் பௌத்தத்தினைக் காக்கும் பொறுப்புச் சிங்களவர்களுக்கே உள்ளது என்றும் கூறி, சிங்கள பௌத்த மக்களைத் தம் பின்னால் அணி திரளும்படி தம்மைச் சிங்கள பௌத்த பாதுகாவலர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் தென்னிலங்கைச் சிங்கள பௌத்த மக்களுக்கு அறைகூவல் விட்டுவருகின்றனர்.

அதேவேளையில், பேராசிரியர்கள் சி. க. சிற்றம்பலம், ளு. பத்மநாதன், மற்றும் தொல்பொருள் ஆராய்வாளர் கலாநிதி ப. புஷ்பரத்தினம், மற்றும் பலர், ஒருபுறத்தில் தமிழர்களை இந்து சைவம் என்பவைகளுடன் இணைக்கையில், மறுபுறத்தில், இலங்கைத் தீவின் தமிழர்கள் கிறீஸ்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நிறுவுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளர். இன்றும் ஈடுபடுகின்றனர். இந்த நிறுவுகைக்கு இவர்கள் தென்னிலங்கைப் பாளி மொழி இலக்கியங்களான தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளைப் பயன்படுத்தும் அதே வேளையில், அவற்றில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை மாத்திரம் தூய கற்பனைக் கதைகள் என்கின்றனர். கலாந்தி புஷ்பரட்ணம் அவர்கள், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளுடன், பிராமிக் கல்வெட்டுக்களையும், பிராமி எழுத்துள்ள நாணயங்களையும், வேறு தொல்பொருட்களையும் பயன்படுத்தியுள்ளார்.

ஆனால், இவர்களின் ஆய்வுகள் விஞ்ஞானத் தன்மையற்றதாகவே உள்ளன. இதனால், இவர்கள் நிறுவ முற்பட்டவைகளைத் தமிழ் ஆய்வாளர்கள்கூட ஏற்கமுடியாத நிலைதான் காணப்படுகிறது.

அண்மைக் காலங்களில் தமிழ் நாட்டுப் பௌத்தம் பற்றிய ஆராய்வுகள் தமிழ் நாட்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்வாளர்கள், பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளபோதும், இலங்கைத் தமிழ்ப் பௌத்தம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேயில்லை. இதனால், தென்னிந்தியத் தமிழ்ப் பௌத்தம்; பற்றி ஆய்வுக் கட்டுரைகளைச் சிங்கள ஆய்வாளர்கள் தென்னிலங்கையின் ஆங்கிலத் தினசரிகளில் எழுதுவதூடாக, இலங்கைத் தமிழர்களுக்கும், பௌத்தத்திற்கும் எந்தவித தொடர்பும் முன்னர் இருந்திருக்கவில்லை என்ற எண்ணக் கருத்துக்களை வாசகர்களுக்குப் புகுத்தி வருகின்றனர். இதற்குச் சிறந்தவொரு உதாரணம்: இவ்வருடம் போசன் (Pழளழn) தினமன்று தென்னிலங்கையின் னுயடைல நேறள (02 துரநெ, 2004) தினசரியில், னுச. முநநசவாi துயலயளநமநசய என்பவரால் எழுதப்பட்ட யுசாயவெ ஆயாiனெய in ளுழரவா ஐனெயை யனெ ளுசi டுயமெய என்ற கட்டுரையாகும். இலங்கையின் தமிழ்ப் பௌத்தம் பற்;றிப் பேசாத, எழுதாத, ஆதாரபூர்வமாக நிறுவப்படாத நிலையில், இன்று தமிழர்கள் வாழும் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த எச்சங்கள் எல்லாம்;, இலங்கையின் சிங்கள பௌத்தத்தின் எச்சங்களாகவே கருதப்படுகின்றன. இது, இலங்கைத் தமிழர்கள் தங்களது வரலாறு பற்றிச் சரியாக அறிய முடியாது செய்கிறது, இன்றைய அரசியலிலும், தமிழர்களுக்குப் பெரும் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

உதாரணமாக: பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, யு 9 பாதை திறக்கப்பட்ட பின்னர், கந்தரோடையில் இருந்த பௌத்த எச்சப் பகுதியானது விசேட இடமாக்கப்பட்டு, அது சிங்கள பௌத்தர்களின் இடம் போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டு, பல ஆயிரம் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்தனர்.

இதனை ஒரு சாரார் எதிர்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்நோக்கிய அடிப்படைப் பிரச்சனையென்னவென்றால், அவ்விடமானது தமிழ்ப் பௌத்த எச்சங்கள் காணப்படும் இடம் என்பதை நிரூபிக்க, இலங்கையில் தமிழ்ப் பௌத்தம் இருந்தது என்பதை, எமது இலக்கிய, தொல்பொருள் ஆராய்வாளர்களாலும், பேராசிரியர்களாலும் இன்றுவரை ஆதாரபூர்வமாக நிறுவமுடியவில்லை.

இதனால், தமிழ்ப் பத்திரிகையில் சிலர் பலவாறு எழுதினர், வேறு சிலர் சிலவற்றை முன்வைத்து, எதிர்ப்புக்களைக் காட்டினர். ஆனால், பிரச்சனையை அவர்கள் தீர்த்துக்கொள்ள, அவர்களிடம் விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்கள் இருக்கவில்லை!

இந்தநிலையில், இலங்கையில் சிங்கள பௌத்தம், தமிழ்ச் சைவம், இந்துத் தமிழ் என்பவை பற்றிப் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வரும் நிலையில்;, இத்தொடர்க் கட்டுரையானது இலங்கையின் தமிழ்ப் பௌத்தம் என்று இருக்கவில்லையா என்பது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்கிறது.

இக்கட்டத்தில், இலங்கையின் பல பெரும் இலக்கிய, வரலாற்று, தொல்பொருள் ஆராய்வாளர்களாலும் ஆராய்ந்து அறியமுடியாது இருந்த விடயங்களை, இலக்கியங்கள், வரலாறு, ஏனையவைகளை G.C.E (O/L)இல் கூடப் படிக்காதவர்களும்@ கணிதம், பொறியியல், தொழில்நுட்பம், இராணுவ விஞ்ஞானம், ஏனையவைகளில் உயர் கல்வியும், பயிற்சியும் பெற்றவர்கள் எப்படி ஆராய்ந்து சரியான முடிவுகளுக்கு வர முடியும் என்ற கேள்வியானது, பலரால் அவசர அவசரமாக எழுப்பப்பட முடியும்.

இப்படியான கேள்விகள், பெரும்பாலும், இதுவரை காலமும் இலங்கைத் தமிழர்களின் வரலாறுகளையும், தமிழ்க் கல்வெட்டுக்கள், மற்றும் தொல்பொருட்களையும் ஆராய்ந்து, ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி வந்தவர்களால்தான் எழுப்பப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படும்.

ஆனால், விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை எந்தவொன்று தொடர்பாகவும்; செய்யும் வல்லமையை வளர்த்துக்கொண்ட ஒருவர், எந்தவொரு துறையின் விடயங்களையும்;இ அத்துறைசார்ந்த விடயங்களைத் தானாகப் படித்து, செய்துகொள்ளமுடியும் என்பதுதான் உண்மை. ஆனால், இங்கு மீண்டும் மீண்டும் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், அவர் ஆய்விளை விஞ்ஞான ரீதியாகச் செய்ய அறிந்திருக்கவேண்டும். இங்குதான், கணிதம், இயற்கை விஞ்ஞானம் என்பவைகளில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு இது சுலபமாகிறது!

Nāimmāna தமிழ்க் கல்வெட்டு

தென்னிலங்கையின் மாத்தற மாவட்டத்தின் (Mātara District) Nāimmāna என்ற கிராமத்தின் Hingangodawatta என்ற வளவினில், சிறிய பலகை வடிவான நாட்டப்பட்ட கற்றூனின் இரு பக்கங்களிலும்,;, தமிழிலும்;, இறுதியில் கிரந்தத்திலும் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டானது 1930ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இது, Register of Inscriptions of the Archaeological Department இல் 598ஆம் இலக்கத்தில் பதியப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டின் முற்பக்கம் எழுத்துகள், ஏறக்குறைய, 2 அடி 9அங்குலம் ஓ 1 அடி அங்குலத்தையும்@ பின் பக்க எழுத்துகள் 3 அடி 1 அங்குலம் ஓ 1 அடி அங்குல அளவினுள்ளும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டானது, இன்றைய தமிழ் எழுத்துகள்போன்ற எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. அது, சிறி பராக்கிரமவாகு தேவருக்கு யாண்டு என ஆரம்பிக்கிறது. இக்கல்வெட்டின் தமிழ்ப் பகுதியில், தான மண்டபத்திற்கு அரசன் குறிப்பிட்ட சில கிராமங்களைத் தானம் செய்தமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. அக்கிராமங்களாவன: நாய்மான, குங்கங்கொல, பக்கல, கரமுல்லை,வேர்துவை உட்டப்ட்ட தோட்டம், வயல்கள்

ஆனால், கிரந்த எழுத்துக்;களில் எழுதப்பட்டிருப்பவைகளில், தான மண்டபத்தைச் சேர்ந்த 12 பிராமணர்களுக்கு Nāimmāna என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டது எனக் கூறுகிறது. தமிழ்க் கல்வெட்டில், 12 பிராமணர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

இக்கல்வெட்டினை, பேராசிரியர் ளு. பரணவிதான, பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, மற்றும் ஒருசிலர் ஆராய்ந்துள்ளனர். இக் கல்வெட்டின்; முதல் பக்கத்தின் மேற்புறமாக, சூரியன், சந்திரன் (பிறை) அடையாளங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது பக்கத்தில், சங்கும், கிழே காட்டப்பட்டுள்ள வட்ட வடிவான நான்கு செவிகளுள்ள அடையாளமும் காணப்;படுகின்றன.


http://img02.picoodle.com/img/img02/8/5/11/f_001m_d99fd29.jpghttp://img02.picoodle.com/img/img02/8/5/11/f_002m_81d3f49.jpg

இவற்றில் முழுவட்டமாக இருப்பது, சூரியனாகும். இந்தத் தமிழ்க் கல்வெட்டினில், குறிப்பிட்ட கிராமம்; 12 பிராமணர்களுக்குத் தென்னிலங்கை அரசனான பராக்கிரமபாகு என்பவனால் தானமாகக் கொடுக்கப்பட்டது பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த அரசனை, கி. பி. 1310 வரையில் அரசாண்ட மூன்றாவது பராக்கிரமபாகு எனப் பேராசிரியர் வேலுப்பிள்ளை அடையாளங் கண்டுள்ளார். பேராசிரியர் பரணவிதான இந்தவரசனை, ஆறாவது பராக்கிரமபாகு என்றுள்ளார். இவன் தம்பதேனியவிலிருந்து ஆட்சி செய்தான்


தொடரும்

சுட்டிபையன்
11-05-2007, 09:29 AM
http://img02.picoodle.com/img/img02/8/5/11/f_003m_5f4b9a7.jpg

இந்தக் கல்வெட்டினை ஆராய்ந்தவர்கள், சங்கு ஆனது விஷ்ணுவுடன் அடையாளப்படுத்தப்படும் எனக் கொண்டும், கல்;வெட்டில் பிராமணர் எனக்; குறிப்பிட்;டிருப்பதை வைத்தும், இக் கல்வெட்டினைத் இந்துக்களுடன் தொடர்புபடுத்தி, விளக்கத்தினைக் கொடுத்துள்ளனர்.

இவர்களது ஆய்வு முறையிலுள்ள அடிப்படைத் தவறு என்னவென்றால், ஏன் இவர்கள் சங்கினருகில் வைக்கப்பட்டடுள்ள ளலஅடிழடஇனையும் ஆய்வுக்கு உட்படுத்தாது, சங்கினை மாத்திரமே ஆராய்ந்தனர்? சங்கினை ஆராய்ந்தால் மாத்திரம் போதுமானது என்ற முடிவுக்கு எப்படி இவர்கள் வந்தனர்? இவர்களிடம் விசேட ளுஉயnநெச உள்ளதா? அது எப்படிச் செயற்படுகிறது?

அல்லது, சங்கின் அருகில் இருக்கும் அடையாளம் என்ன என்பதை விளங்காத நிலையில், அதுபற்றி எதுவும் கூறாது, தமக்கு விளங்கிய சங்கினையும், சமஸ்கிருத மொழியில் பிராமணர் என்ற சொல்லினையும் மாத்திரம் வைத்து, கல்வெட்டிற்கு விளக்கத்தினைக் கூறி விட்டார்களா?

இது, இவர்களது ஆய்வு முறையைப் பிழையானதாக்கிவிட்டது. மேலும், சங்கினையும், பிராமணர் என்ற சொல்லினையும் சரியாக ஆராய்ந்தறியாவிட்டால், அவைகளுடாகவும் பிழையான முடிவுகளுக்கு வந்து, கல்வெட்டுத் தொடர்பாகச் சிறந்தவொரு சிறு மர்மக் கதையினைத்தான் இவர்கள் விளக்கமாக்க கொடுத்திருக்கமுடியும்.;

தென்னிலங்கையில் தமிழ் பிராமணர்களுக்குத் தானம்; கொடுக்கப்பட்டதை, தமிழ் இந்துப் பிராமணரின் செல்வாக்கு விஸ்தரிப்பு என்ற விளக்கத்தைச் சிங்களத் தொல்பொருள் ஆராய்வாளர்கள்;, சிங்கள - பௌத்தர்களைத் தமிழர்மீதும், இந்து சமயத்தின்மீதும் வெறுப்புக் கொள்ளவைக்கப் பிரசாரம் செய்யப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்குச் சிறந்தவொரு உதாரணம், இந்தக் கல்வெட்டுத் தொடர்பாகப் பேராசிரியர் பரணவிதான History of Ceylon (1960; Chapter VIII, Vol I, Part II, Page-766)இல் கூறியிருப்பவையாகும். அவர், பின்வருமாறு கூறியுள்ளார்:

The find of a Tamil inscription at Nāimmāna recording donation to the god of Devinuvara and the circumstance that the inscription written in Tamil, afford further evidence of the dominating influence exerted by Tamil Brahmanas on the form of religious worship at the place. These Brahmanas gradually transformed the Sinhalese gods to those of Puranic Hinduism.

இப்படியான விளக்கத்தினைத்; தமிழ், மற்றும் சிங்கள ஆய்;வாளர்கள் ஏற்று, மௌனம் சாதித்து வருகின்றனர். ஆனால், இந்தத் குறிப்பிட்ட கல்வெட்டினை விஞ்ஞான ரீதியாக ஆராயத் தெரியாத நிலையில்தான்;, தமிழ், மற்றும் ஆராய் வாளர்கள் மௌனம் சாதித்து வருகின்றனர் என்பது இங்கு அவதானிக்கப்படவேண்டும்.

சங்கு ஆனது ஒலியெழுப்பவும்; பயன்படுவது. இந்தநிலையில், கல்வெட்டில் காணப்படும் சங்கானது, ஏதோவொரு விடயத்தினை சகலருக்கும் அறியவைப்பதைக் குறிக்கமுடியும். இந்தநிலையில், என்ன விடயமானது சகலருக்கும் அறியக் கொடுக்கப்பட்டது பற்றி, கல்வெட்டின் இந்த அடையாளங்கள் உணர்த்துகின்றன என்ற கேள்வி இங்கெழுகிறது. அதற்கு மறுமொழியாக, சங்கின் அருகிலே ஒரு அடையாளம்(Symbol) இடப்பட்டுள்ளது. இந்தநிலையில், சங்கினருகில் காணப்படும் Symbol எதனைக் குறிக்கிறது என்பதைச் சரியாக அறிந்தாலே, கல்வெட்டில் காணப்படும் அடையாளங்கள் எதனை எமக்கு உணர்த்துகின்றன என்பதைச் சரியாக அறியமுடியும்@ கல்;வெட்டில் கூறப்பட்டிருப்பவைகள், உண்மையில், எதனுடன் தொடர்பானவை என்பதைச் சரியாக அறியமுடியும்.

ஆனால், குறிப்பிட்ட இந்தக் கல்வெட்டினை ஆராய்;ந்து, விளக்கத்தினைக் கொடுத்துள்ள பேராசிரியர் பரணவிதானவோ, அல்லது பேராசிரியர் வேலுப்பிள்ளையோ, அல்லது வேறு ஆராய்;வாளர்களோ, சங்கினருகில் காணப்படும் Symbol எதனை அடையாளப்படுத்;துகிறது என்பதை ஆராய்ந்து அறியவில்லை, ஆகவே, அது பற்றித் தமது கல்வெட்டுத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளில் கூறவில்லை. இன்றுவரை, நிலைமை அதுதான். இந்தநிலையில், இந்தக் கல்வெட் டினைப் பற்றிப் பேராசிரியர்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் கற்பனையானவையாகவும், பிழையானவையாகவும்தான் இருக்கமுடியும்.

இந்தக் கல்வெட்டில் இரண்டு Symbols (சங்கு, மற்றையது) காணப்படும் நிலையில், சங்கினை மாத்திரம் வைத்து முடிவுக்கு வருவது, பிழையான முடிவுக்கே ஒருவரை இட்டுச் செல்லும்.

இந்தநிலையில், சங்குடன் காணப்படும் மற்றைய Symbol எதனை அடையாளப்படுத்துகிறது என்பதை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தறிய வேண்டியுள்ளது. இதனை, G.C.E. சாதாரண மட்டக் கல்வியைக்; கற்றவரே, சுலபமாக ஆராய்ந்தறிய முடியுமான நிலையில் இருப்பார்.

சங்கினருகில் காணப்படும் Symbol, நான்கு செவிகளைக் கொண்ட ஒரு தொகுதியாகக் காணப்படுகிறது. ஆகவே, அது நான்கு விடயங்களைக் கொண்ட ஒரு தொகுதி யை ((a group of four things) அடையாளப்;படுத்துகிறது. ஏனெனில், அந்த அடையாளத்தின் தன்மை அதுவே. அப்படியானால், சங்கினருகில் காணப்படும், நான்கு விடயங்களைக் கொண்ட ஒரு தொகுதி எதனை அடையாளப்படுத்துகிறது என்ற கேள்வி எழுகிறது.

தமிழ் என்றால் இந்து எனக் கொண்டு இந்தக் கல்;வெட்டினை ஆராயமுற்படும் ஒருவருக்கு, சங்;கினருகில் காணப்படும் அடையாளமானது இந்து சமயம் தொடர்பானதாகவே தோன்றும். அப்படியானால், நான்கு விடயங்களைக் கொண்;ட தொகுதிக்கு அவர், நான்கு வேதங்கள்; என்ற விளக்கத்தினைக் கொடுக்க முற்படலாம். இதை இன்று தொல்பொருள், வரலாற்று ஆராய்வாளர்கள் என ஏற்கப்பட்டு வருபவர்கள,; சரியென ஏற்றும்;; கொள்ளலாம். ஆனால், அந்த விளக்கம் பிழையானது!

சங்கு ஆனது, அதன் ஒலியைக்; கேட்போரில் எந்;தவித கட்டுப்பாடுகளையும்; ஏற்படுத்தாது, சகலரும் கேட்கும்படி ஒலியெழுப்பும் ஒரு சாதனமாகும். ஆகவே, இங்கு அடையாளப் படுத்;தப்பட்டுள்ள நான்கு விடயங்களைக் கொண்ட தொகுதியானது, சகல மனிதர்களுக்குமான விடயங்களையே குறிக்கிறது. நான்கு வேதங்கள் பிராமணியர்களுக்கு மாத்திரமானதே. வேதம் ஓதுவதைச்; சூத்திரன், மற்றும் தகாதவன்; கேட்டால், அவனது காதில் உருக்கிய ஈயம்; ஊற்றப்பட வேண்டும் என சாஸ்த்ரங்கள் கூறியுள்ளன. இந்;தநிலையில், சங்கினருகில் காணப்படும் அடையாளமானது நான்கு இந்து வேதங்;;களைக் குறிக்கிறது என்பது பிழையானது.

மறுபுறத்தில், சங்கினை விஷ்ணுவுடன் தொடர்புபடுத்தி விளக்கத்தைக் கொடுக்க முற்பட்டால், விஷ்ணு ஒரு வரலாற்று உண்மையா என்பது ஒருபுறமிருக்க, அங்கு எழும் கேள்வி என்னவென்றால், நான்கு விடயங்களைக் கொண்;ட தொகுதியாக என்ன போதனையைப் பூமியின் முழு மனித இனத்திற்குமென விஷ்ணு போதித்திருந்தார்? எதுவுமே இல்லை!

ஆனால், புத்தபெருமான் நான்கு பெரும் உண்மைகளை ((the Four Noble Truths), பூமியில் வாழும் சகல மனிதருக்குமெனப் போதித்திருந்தார். ஆகவே, சங்கும், அதனருகே இருக்கும் அடையாளமும், நான்கு பெரும் உண்மைகள் உலகிற்குப் போதிக்கப்பட்டதை அடையாளப்படுத்துகிறது!

இது, நான்கு பெரும் உண்மைகள் எப்படி எளிய முறையில் பௌதீக ரீதியாக அடையாளப்படுத்தப்படலாம் என்பதற்கான ஒருவித விளக்கத்தையும் எமக்குத் தருகிறது. இதனடிப்படையில், நான்கு பெரும் உண்மைகளை எப்படியான வௌ;வேறு Symbols ஊடாக அடையாளப்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து அறியமுடியும். இவைகளின் ஒரு பகுதித் தொகுப்பு, ஏற்கனவே எமது முதலாவது கட்டுரையில் தரப்பட்டுள்ளது. இங்கும் அது தரப்பட்டுள்ளது.


http://img02.picoodle.com/img/img02/8/5/11/f_004m_ff29b46.jpg

இந்த அடையாளங்களின் தன்மை கொண்ட வேறு பல அடையாளங்களும், பௌத்தத்தின் நான்கு பெரும் உண்மைகளை அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்பட முடியும்.

எதுவிதத்திலும், இந்தக் கல்வெட்டில் சங்கு மாத்திரமோ, அல்லது நான்கு செவிகளுடைய வட்டம் மாத்திரமோ காணப்பட்டால், அவை எவற்றைக் குறிக்கின்றன என்பதைச் சரியாக அறியவேமுடியாது. ஆகவே, இந்த அடையாளங்கள்(Symbols) ஒருவித combination
இல்தான் இடப்படவேண்டியுள்ளன@ இக்; கல்வெட்டில் அப்படித்தான் இடவும்;பட்டுள்ளன.

எதுவிதத்திலும், கல்வெட்டில் சமஸ்கிருத மொழியில்; காணப்படும் பிராமணர் என்ற சொல்லினை வைத்து, கல்வெட்டினைப் பௌத்தத்துடன் தொடர்புபடுத்துவது பிழையானது என்ற வாதத்தையும் சிலர் அவசர அவசரமாக முன்வைக்க முடியும். இந்தக் கல்வெட்டின் தமிழ்ப் பகுதியானது, சமஸ்கிருதப் பகுதியிலிருந்து வேறுபட்ட விபரிப்புக்களைச் செய்திருப்பது அவதானிக்கப்படவேண்டும். மேலும், தமிழ் மொழிப் பகுதியில் 12 பிராமணர் பற்றி எதுவும் இல்லை. இங்கு நாம் பிராமணர் என்ற சொல்லின் பொருளை மாத்திரமே கருத்தில் கொள்ளவேண்டும். பிராமணர் என்பது, உண்மையில் அந்தணர் ஆகும். பிராமணன் என்பது: ஒன்றிலிருந்து தோன்றும், உண்டாகும் நிறைவுப் ; physical activation மிகுதியாகக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்டிருக்கும் வெளிப்படுத்துகைத் தன்மை உடையவன் ஆகும். இதனால், அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் எனத் திருவள்ளுவன் தமிழில் கூறியுள்ளான். ஆகவே, பௌத்த துறவிகளும், அந்தணர்களே! பிராமணர்களே!

இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள், Nāimmāna தமிழ்க் கல்;;வெட்டானது, பேராசிரியர் பரணவிதான கூறியதுபோல் இந்துப் பிராமணர்கள் தொடர்பானதுமல்ல@ அது சிங்களவர்களது கடவுள்;களைத் தமிழ்ப் பிராமணர்கள் தமது புராணக் கடவுள்களாக மாற்றிக் கொண்டமையினைத்தான் எடுத்துக்காட்டுகிறது என்பதற்குமில்லை என்பவைகளை உறுதிப்படுத்துவதுடன், இலங்கையில் தமிழ் பௌத்தம் இருந்துள்ளது என்பதையும், அது தென்;னிலங்கையிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதையும்@ தமிழ்ப் பௌத்தர்கள் பௌத்தத்தினைச்; ளலஅடிழடள ஊடாக அடையாளப்படுத்தும் விஞ்ஞான ரீதியிலான முறையைக் அன்று கையாண்டுள்ளனர் என்பதையும் அசைக்க முடியாதபடி உறுதிப்படுத்துகின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக, தென்னிலங்கையில் கண்டறியப்பட்ட பிராமி, சிங்களக் கல்வெட்டுக்கள், தென்;;னிந்தியாவில் கண்டறியப்பட்ட தமிழ்ப் பிராமி, தமிழ்க்; கல்வெட்டுக்கள் போலல்லாது, இந்தத் தமிழ்க் கல்வெட்டானது எமக்கு பௌத்தம் எப்படியான ளலஅடிழடள ஊடாக, என்ன முறையில் அடையாளப்படுத்தப்படலாம்; என்பதை ஆராய்ந்தறிய வழிவகுத்துள்ளது. சிங்கள, மற்றும் கல்வெட்டுக்களில், இக்கல்வெட்;டினில் காணப்படும் எளிய, ஆனால் விளக்கத்;தைச் சுலப மாகத் ஏற்படுத்திக்கொள்ள உதவும்; விதத்தில் தெரிவு செய்யப்பட்ட அடையாளங்கள்; (ளலஅடிழடள) போன்ற அடையாளங்கள் காணப்படவில்லை.

பேராசிரியர் பரணவிதான அவர்கள் தென்னிலங்கையின் பிராமிக் கல்வெட்டுகள் பற்றி ஒரு பெருநூலை எழுதியுள்ள போதும், அப்பிராமிக் கல்வெட்டுக்கள் பலவற்றில் காணப்படும் ளலஅடிழடளஇனை அவரால் விஞ்;ஞான ரீதியாக ஆராய்ந்து விளக்கங்களைக் கொடுக்கமுடியவில்லை. ஏனைய எந்தவொரு ஆராய்வாளனும், பேராசிரியனும், அவற்றை விளங்கியதாகவும்; தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில், இலங்கையில் ளலஅடிழடள பற்றிய ஆய்வில் எந்தவித முன்னேற்றமும் இன்றுவரை ஏற்படவில்லை என்பதுதான் கசப்பான பெரும் உண்மையாகும்;. அதிலும் மிகவும் கசப்பானது என்னவென்றால், தம்மைத் தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு என்பவைகளுடன் அடையாளப் படுத்தி வந்தவர்களும்@ தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு என்பவைகளுடன் இலங்கையில் அடையாளப்படுத்தப்;பட்டு வந்தவர்களும், இந்த ளலஅடிழடள பற்றி ஆராய்ந்தறிய முடியாத நிலையில் இருப்பதும், வேறு துறைகள்; சார்ந்தவர்களே, ளலஅடிழடள தொடர்பான விஞ்ஞான ரீதியிலான விளக்கத்;திi இவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும்; கொடுக்கவேண்டி இருப்பதுமாகும்.

இந்த அறிவியல் வறுமை நிலையானது இலங்கையில் மாத்திரம்தான் காணப்பட்டுவந்துள்ளது என்பதற்கில்லை. தமிழகம், தென்னிந்தியா, இந்தியா என்பவைகளிலும், உண்மை நிலை இதுதான்.



முடிவுகள்:



1)நாய்மான தமிழ்க் கல்வெட்டில் காணப்படும் நான்கு விடயங்களைக் கொண்ட தொகுதி அடையாளமானது, நான்கு பெரும் உண்மைகளை ((the Four Noble Truths) அடையாளப்படுத்தும்@
2)இந்த அடையாளமருகில் வைக்கப்பட்ட சங்கு ஆனது, நான்கு பெரும் உண்மைகள் உலகிற்குப் போதிக்கப்பட்டதை அடையாளப்படுத்தும்@
3)நாய்மான தமிழ்க் கலவெட்டானது; தென்னிலங்கையில் தமிழ் பௌத்தத்தை நிரூபிக்கின்றது@
4)ஆகவே, இலங்கையில் சிங்கள பௌத்தம் என்றால், இலங்கையில் தமிழ்ப் பௌத்தம்; பற்றிப் பேச, எழுத, அதைக் காப்பாற்ற இலங்கைத் தமிழருக்கு இடமுண்டு@ கடமையுமுண்டு.

நாய்மான தமிழ்க் கல்வெட்டும், சிகிரியா மலையும், இலங்கையில் தமிழ்ப் பௌத்தம் இருந்தவைகளுக்கான சிறந்த ஆதாரங்களாக அமைகின்றன. இந்த நிலையில், இலங்கையின் தமிழ் பௌத்தம் பற்றிச் சரியாகவும், முழுமையாகவும் அறிந்துகொள்ள, இலங்கையில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டுக்கள், நாணயங்கள், ஏனைய தொல்பொருட்கள், இலக்கியங்கள், நூல்கள் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக ஆராயப்படவேண்டியுள்ளது.

சுருங்கக் கூறினால், இனியே இலங்கையில் மொழி, இலக்கிய, தொல்பொருள் ஆய்வுகள் விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளகப்படவுள்ளன. இது பரந்துபட்டவொரு விடயமானாலும், அதை விஞ்ஞான ரீதியாக அணுகுவதன்மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே செய்து முடிக்கமுடியும்.

விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகள், முன்னைய முடிவுகளைத் தவிர்க்க முடியாதபடி நிராகரிக்கவே செய்யும். அதுதான் விஞ்ஞானமாகும்! ஆகவே, இலங்கை, இந்திய மக்களின் பல்வேறு விடயங்கள் தொடர்பான வரலாறுகள் திருத்தப்படவேண்டிய நிலை தவிர்க்கமுடியாதபடி ஏற்படும். இது இலங்கை, இந்தியா என்பவைகளில் புதிய கலாசாரம், புதிய அரசியல், புதிய சமூக உருவாக்கம் என்பவைகளைத் தவிர்க்கமுடியாதபடி ஏற்படுத்தும்.

இங்கு ஆராயப்பட்டவை பற்றியும், வரப்பட்டுள்ள முடிவுகள் பற்றியும், ஏனையோருக்கு அறியக் கொடுங்கள். உங்களது கருத்துக்களையும், ஆய்வுகளையும் இந்த இணையத் தளமூடாக முன்வைத்து, வாதியுங்கள். அறிவியலே இலங்கையில் சமூகங்களை நிலைக்க வைக்கும், முன்னேற வைக்கும், மேன்மையான மனித வாழ்க்கையை அமைக்க வைக்கும்.

http://www.tamilresearchandnews.com/

leomohan
11-05-2007, 09:40 AM
இந்த கட்டுரையின் ஆதாரம் என்ன? எந்த தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை யூனிகோடாக மாற்றும் போது ஆங்கில வார்த்தைகளும் மாற்றப்பட்டுள்ளது. அதை மீண்டும் பதிக்க இயலுமா

நன்றி.

சுட்டிபையன்
11-05-2007, 09:57 AM
இந்த கட்டுரையின் ஆதாரம் என்ன? எந்த தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை யூனிகோடாக மாற்றும் போது ஆங்கில வார்த்தைகளும் மாற்றப்பட்டுள்ளது. அதை மீண்டும் பதிக்க இயலுமா

நன்றி.

மாற்றப்பட்டுள்ளது

ஜோய்ஸ்
14-05-2007, 07:32 AM
சுவையான இலங்கை வரலாற்று சரித்திரம்,படிக்க உற்சாகமளிக்கிறது.