பிச்சி
10-05-2007, 03:52 PM
(கண்ணன் வருகை)
எழில் பொங்கும் துவாரகாவைத்
தொட்டுப் பார்க்கிறது
தூறலின் அணுக்கள்.
எட்டி நின்று கோகுலத்தின்
நெஞ்சைத் தடவிப் பார்க்கிறது
முகிலனின் தூதுவன்.
அத்துவானம் துப்பிய
வர்ணக்கலவையில்
காணாமல் போயிருந்த
காதல் வில்
நீ எழுப்பிய அம்பில்
நாணம் கக்கியது.
கொய்து போட்ட மலர்களின்
அரும்புகளைக் கையில் ஏந்தி
என் நெஞ்சறிந்த நீ
வரும் நேரம் காத்து நிற்கிறேன்.
நிகரற்ற உன் சந்தன மார்பில்
சிரம் தாழ்ந்து உறங்கத்தான்.
எழுதப்பட்ட கவிகளை
நிரல்படுத்தி, அந்தரத்தில்
தொங்கும் ஆதவனின் சுடரெடுத்து
பேழையில் பொறித்து
நீ வரும் நேரத்தில்
உனக்குக் கொடுக்கவேண்டுமே!.
செவியறைகளில்
தாளங்கள் கேட்கின்றன
அதோ!
களவாடன் வருகிறான்.
வா கண்ணா.!!
கோபியர் யாவரும் நானே
ஆகையால் என் நெஞ்சே
உன் துயிலிடம்.
நீ வந்தாய் இந்த குயிலிடம்..
நாணம் மீறிப் போய்
முத்தம் கேட்கிறேன்.
பிராணம் இடம்பெறாது கொடுத்துவிடு.
எழில் பொங்கும் துவாரகாவைத்
தொட்டுப் பார்க்கிறது
தூறலின் அணுக்கள்.
எட்டி நின்று கோகுலத்தின்
நெஞ்சைத் தடவிப் பார்க்கிறது
முகிலனின் தூதுவன்.
அத்துவானம் துப்பிய
வர்ணக்கலவையில்
காணாமல் போயிருந்த
காதல் வில்
நீ எழுப்பிய அம்பில்
நாணம் கக்கியது.
கொய்து போட்ட மலர்களின்
அரும்புகளைக் கையில் ஏந்தி
என் நெஞ்சறிந்த நீ
வரும் நேரம் காத்து நிற்கிறேன்.
நிகரற்ற உன் சந்தன மார்பில்
சிரம் தாழ்ந்து உறங்கத்தான்.
எழுதப்பட்ட கவிகளை
நிரல்படுத்தி, அந்தரத்தில்
தொங்கும் ஆதவனின் சுடரெடுத்து
பேழையில் பொறித்து
நீ வரும் நேரத்தில்
உனக்குக் கொடுக்கவேண்டுமே!.
செவியறைகளில்
தாளங்கள் கேட்கின்றன
அதோ!
களவாடன் வருகிறான்.
வா கண்ணா.!!
கோபியர் யாவரும் நானே
ஆகையால் என் நெஞ்சே
உன் துயிலிடம்.
நீ வந்தாய் இந்த குயிலிடம்..
நாணம் மீறிப் போய்
முத்தம் கேட்கிறேன்.
பிராணம் இடம்பெறாது கொடுத்துவிடு.