சுட்டிபையன்
09-05-2007, 01:21 PM
இந்திய வீரர்களுக்கு 7 மாதங்களாக சம்பளமில்லை
இந்திய கிரிக்கெட் அணியினருக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உலகின் செல்வந்த கிரிக்கெட் சபையான இந்திய கிரிக்கெட் சபையில் தற்போதைய சொத்து மதிப்பு இந்திய நாணயப்படி 1.500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 1.600 கோடி ரூபாவில் இருந்து 1.800 கோடி ரூபாவாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஏழு மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண தொடர் முதல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண தொடர் வரையான காலப் பிரிவுக்கான இந்திய அணி வீரர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த காலப்பிரிவில் இந்திய அணி 5 தொடர்களில் விளையாடியுள்ளது. இதில் நவம்பர் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப் பயணம், ஜனவரி பெப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இலங்கை, மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர்கள் ஆகியவையும் உள்ளடங்கும்.இந்திய கிரிக்கெட் சபை சம்பளத்தை காலதாமதமாக வழங்குவது இது முதல் முறையல்ல. இந்திய அணியின் உடற்பயிற்சி இயக்குனராக இருந்த அன்ட்ரூ வைபஸ் தனது பதவிக் காலத்தில் 5 மாதத்துக்கு பின்னரே சம்பளம் பெற்றார். அதேபோன்று பயிற்சியாளராக இருந்த ஜோன் ரைட்டுக்கு 7 மாதம் கழித்துத்தான் சம்பளம் வழங்கப்பட்டது.
இது குறித்து இந்திய அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி சேவைக்கு பேட்டி அளித்த போது, இந்திய அணிக்காக நான் பல ஆண்டுகள் விளையாடி வருகிறேன். பல முறை சம்பளம் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் பெற்றுள்ளேன் என்றார்.
எனினும், இது பிரச்சினையே அல்ல என இந்திய கிரிக்கெட் சபை பிரதி தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இந்திய அணியினருடனான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அவர்களின் சம்பளம் அனைத்தும் உரிய முறையில் வழங்கப்படும். வீரர்களுக்கான புதிய ஒப்பந்தம் தற்போது தயாராகி வருகிறது. மற்றபடி இது பிரச்சினையே அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா (இந்திய நாணயப்படி) சம்பளமாக வழங்க இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இது தவிர வீரர்களுக்கு போட்டிக் கட்டணம் மற்றும் போனசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
வீரகேசரி
இந்திய கிரிக்கெட் அணியினருக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உலகின் செல்வந்த கிரிக்கெட் சபையான இந்திய கிரிக்கெட் சபையில் தற்போதைய சொத்து மதிப்பு இந்திய நாணயப்படி 1.500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 1.600 கோடி ரூபாவில் இருந்து 1.800 கோடி ரூபாவாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஏழு மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண தொடர் முதல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண தொடர் வரையான காலப் பிரிவுக்கான இந்திய அணி வீரர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த காலப்பிரிவில் இந்திய அணி 5 தொடர்களில் விளையாடியுள்ளது. இதில் நவம்பர் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப் பயணம், ஜனவரி பெப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இலங்கை, மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர்கள் ஆகியவையும் உள்ளடங்கும்.இந்திய கிரிக்கெட் சபை சம்பளத்தை காலதாமதமாக வழங்குவது இது முதல் முறையல்ல. இந்திய அணியின் உடற்பயிற்சி இயக்குனராக இருந்த அன்ட்ரூ வைபஸ் தனது பதவிக் காலத்தில் 5 மாதத்துக்கு பின்னரே சம்பளம் பெற்றார். அதேபோன்று பயிற்சியாளராக இருந்த ஜோன் ரைட்டுக்கு 7 மாதம் கழித்துத்தான் சம்பளம் வழங்கப்பட்டது.
இது குறித்து இந்திய அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி சேவைக்கு பேட்டி அளித்த போது, இந்திய அணிக்காக நான் பல ஆண்டுகள் விளையாடி வருகிறேன். பல முறை சம்பளம் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் பெற்றுள்ளேன் என்றார்.
எனினும், இது பிரச்சினையே அல்ல என இந்திய கிரிக்கெட் சபை பிரதி தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இந்திய அணியினருடனான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அவர்களின் சம்பளம் அனைத்தும் உரிய முறையில் வழங்கப்படும். வீரர்களுக்கான புதிய ஒப்பந்தம் தற்போது தயாராகி வருகிறது. மற்றபடி இது பிரச்சினையே அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா (இந்திய நாணயப்படி) சம்பளமாக வழங்க இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இது தவிர வீரர்களுக்கு போட்டிக் கட்டணம் மற்றும் போனசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
வீரகேசரி