PDA

View Full Version : கவிதை எழுதக் கூடும், துடைத்துவிடு



பிச்சி
09-05-2007, 10:15 AM
நீல மேகத்தினூடே
நிலவொளியின் ஆற்றில்
படகேறி வருவாய்
எனைக் காண்பதற்கே

சுற்றிலும் சுற்றும்
சூப்பர்நோவா கூட்டங்கள்
உன் வருகையின் இன்பத்தில்
ஒன்றிணைந்து கைதட்டும்

அனலில் துடித்துப் போய்
சூரியனும் கொக்கரிக்கும்.
கரும்புள்ளிகள்
அவனுடலைத் தொளைத்துவிடும்

எல்லாம் உன் வருகையில்

மொட்டை மாடியில்
நிலவோடு பேசிக்கொண்டிருக்க
நீ இறங்கும் திசைப் பூக்கள்
சொறிந்து என் மேலும் விழ
தூக்கம் கலைந்த கோள்கள்
மீண்டும் சுற்றி வரும்.

இறங்கி வந்தாயோ காதலனே!
துடுப்புகளால் துடைத்துவிடு
இந்த நிலவுகளையும்
நட்சத்திரங்களையும்

நாம் பேசக் கேட்டு
கவிதை எழுதக் கூடும் இவைகள்.

ஓவியன்
09-05-2007, 10:20 AM
நன்றாக இருக்கிறது பிச்சி.

அது என்ன சூப்பர் நோவா கூட்டங்கள்?

பிச்சி
09-05-2007, 10:26 AM
நட்சத்திரம் வெடித்தால் சூப்பர் நோவா என்று படித்தேன். நன்றி ஓவியன்னா..

ஓவியன்
09-05-2007, 10:30 AM
அடடா!

அவை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனவா?
கைதட்டல் வேற

துடைக்கத் தான் வேண்டும்
அவற்றை - துடுப்பால்.

ஷீ-நிசி
09-05-2007, 10:53 AM
நன்றாக உள்ளது பிச்சி..

சூப்பர் நோவா.. நட்சத்திரங்கள்..
காதலனின் பால்வெளி வழியே வரவழைத்த கற்பனை அழகு..

இதுபோல எழுதவெல்லாம் நம்மாலே ஆகாது... முற்றிலும் வித்தியாசமான கற்பனை...

அக்னி
09-05-2007, 11:17 AM
அண்டவெளியின் அதிசய படைப்புக்களினிடையே, காதலின் ஊடல் அழகாகவிருந்தது. பாராட்டுக்கள்...

காதலில், பேசப்படும் ஒவ்வொரு சொற்களும் கவிதைகள்தான் என்பதை வரிகளுக்குள் பொருத்தமாகவே அடக்கிவிட்டீர்கள்...

நாம் பேசக் கேட்டு
கவிதை எழுதக் கூடும் இவைகள்.

mravikumaar
09-05-2007, 12:28 PM
நல்ல அருமையான கவிதை

பாராட்டுக்கள் பிச்சி.

அன்புடன்,
ரவிக்குமார்

பிச்சி
13-05-2007, 02:39 PM
ஓவியா அண்ணா, ஷீநிசி அண்ணா, அக்னி அப்பறம் ரவிகுமார் ஆகியோருக்கு பிச்சியின் வணக்கம்

விகடன்
13-05-2007, 02:42 PM
அருமையான கற்பனை. நிலவொளியில் மொட்டை மாடியில் அண்ணார்ந்து பார்த்த ஒரு நிகழ்ச்சியைக்கூட இப்படி கவிதையாக தந்துவிட்டீர்கள்.

அருமை.

வாழ்த்துக்கள்

ஜோய்ஸ்
13-05-2007, 02:48 PM
ஒரு நிமிட சம்பவத்தைக் கூட இப்படி கவிதையாய் வடிக்க முடியுமா என்ன?அசத்திபுட்டீங்க போங்க.பாராட்டுறேன்.

பிச்சி
13-05-2007, 02:48 PM
ஜாவா சார். ரொம்ப நன்றி சார். எங்க வீட்டு மொட்டை மாடியில அண்ணாந்து பார்த்தா யாரும் வரமாட்டாங்க :D :D

பிச்சி
13-05-2007, 02:50 PM
ஜோய்ஸ் சார்.. நன்றி சார். நான் அப்படி பிரமாதமா எழுதலை. இங்க எழுதரவங்கல் விடவா? நன்றி சார்