PDA

View Full Version : இதை மிஸ் பண்ணாதீங்க



umakarthick
08-05-2007, 09:41 AM
இந்த இழையில் நான் இது வரை சேகரித்த படித்த பிடித்த கவிதைகள் இடுவேன்
படிங்க ரசிங்க


ரோஸ் ஜஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்!
நிற மாற்ற விதி
என்பது
இயற்பியல் அல்ல
இதழியல்!

பா.விஜய்



ஆதாம் ஏவாள் கனவில்
ஆப்பிள் துரத்துகிறது
ஆப்பிள் கனவில்
பாம்பு துரத்துகிறது
பாம்பின் கனவில்
சைத்தான் துரத்துகிறது
அனைவரில் கனவிலும்
தோன்றிகடவுள் சொல்கிறார்
காதலித்து கெட்டுப் போங்கள்!

நா.முத்துக்குமார்

மனோஜ்
08-05-2007, 09:45 AM
அருமையா இருக்கு படித்து ரசித்தேன்

umakarthick
08-05-2007, 09:54 AM
அருமையா இருக்கு படித்து ரசித்தேன்

நன்றி தொடர்ந்து இதை பாருங்க

மன்மதன்
09-05-2007, 11:07 AM
அருமையான கவிதைகள்..

umakarthick
10-05-2007, 06:18 AM
இந்தாங்க இன்னும் கொஞ்சம்.................

வெறும் பொழுது - உமா மகேஸ்வரி

சுயம்

அடுப்படியின்
அழுக்கு மொஸைய்க்.
விரலிடுக்கில் பாத்திரக் கரி.
காற்றிலாடு துணிக்கொடியும்,
நேற்றிருந்த கனாக்களும்
வாழ்க்கையாச்சு.
இருப்பின் அவஸ்தை மறைக்க
இயல்பாகிப் போனதோர்
சந்தோஷ முகமூடி.
சுயத் திமிர் வேறு.
தன்னைத் தான் ஆய்வதோடு
பிறர் குணமும் கூறு போடல்
தொடரத் தொடர வேதனை மிகும்.
தொலைதூரத்தில் விசும்பும் நிலவும்,
கேள்விகள் இன்றி சதா
புல் தின்னும் ஆடுகளும்
மனம் உறுத்தும்.
பேச்செல்லாம்
சவ ஊர்வலத்தின் சங்கொலி போல்
வெறுமை.
இவை தவிர்த்து எப்போதும்
கடல் துப்பிய சிப்பியாய்
கரை மணலில்
நான் தனித்து

--------------------------------------------------------------------------------

விடுமுறைக்குப் பின்னான வீடு
விரிகிறது தனது
அலாதியான சிக்கல்களோடு
ஒரு மாபெரும் சிலந்தி வலையாக.

அதன் தற்காலிகமான கலகலப்பை,
மழலை கூடிய குரல்களை
வேடிக்கை விளையாட்டுக்களை
மிருதுவான களங்கமின்மையைத்
திணித்து எடுத்துப் போனார்கள்
பிள்ளைகள் தங்கள் பள்ளிப்பைகளில்.

ஸ்கூல் பஸ் நகர்கிறது
சிரிப்பொலிகளோடும்,
அழுகைத் துளிகளோடும், ஆடும் கைகளோடும்.

முடிக்கப் படாத குழந்தை ஓவியத்தின்
வர்ணங்கள் வாசற்படியில்
வடிந்திருக்கின்றன.

பாதாளத்துடன் இறங்கிவிட்ட
வீட்டின் தலையைப் பிளந்து
என் தனிமையோடு
உள் நுழைகிறேன்

என்னைப் பிய்த்துத் தின்னத்
தயாராகக் காத்திருக்கிறது
அசையாத குரங்கு பொம்மையின்
ஒற்றைக் கை

kavitha
10-05-2007, 11:39 AM
பேச்செல்லாம்
சவ ஊர்வலத்தின் சங்கொலி போல்
வெறுமை.
என்னே ஒரு அழகிய உவமை!



என்னைப் பிய்த்துத் தின்னத்
தயாராகக் காத்திருக்கிறது
அசையாத குரங்கு பொம்மையின்
ஒற்றைக் கை
குழந்தைகள் இருந்த வீடு அவர்கள் இல்லாத போது மயானக்காடு தான். கவிஞரின் மழலை உள்ளமும், அப்பழுக்கில்லா துணையின் ஈடுபாடும் கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது.

"வெறும் பொழுது" - மிக ரசித்தேன் உமா. நன்றாக இருக்கிறது. நீங்கள் எழுதியதா?

umakarthick
11-05-2007, 05:01 AM
விருப்பப் பட்டியல் - வைரமுத்து

கேள் மனமே கேள்

சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்

கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
மின்சாரம் போகாத இரவு கேட்பேன்

தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்

கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்

அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்

முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்

1995


பெரியகுளம் - திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். "விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது" என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். கடைசியில் கேள்வி எனக்கு வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது. -வைரமுத்து

அறிஞர்
11-05-2007, 01:21 PM
ஓவ்வொரு கவிதையும் அழகாக உள்ளது.

கடைசியில் இட்ட கேட்கும் கவிதை வெகு அருமை.. எழுதிய சூழ்நிலையை கொடுத்தது இன்னும் ரசிக்க வைத்தது..

இன்னும் படியுங்கள், ரசியுங்கள், கொடுங்கள்..

ஷீ-நிசி
11-05-2007, 04:20 PM
என்ன அருமையான கவி... என்ன திறமையான மனிதர்....பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

விகடன்
05-08-2007, 07:11 PM
தேக்கி வைத்த தேன் சுரக்கும் கவிதைகள் ஒரே திரியில்
பாராட்டுக்கள்