சக்தி
06-05-2007, 03:29 PM
எங்கோ
எனை மறந்து
வாழ்ந்திருந்தேன்
எதுவும்
எனக்கில்லை- என
துறவறம்
பூண்டிருந்தேன்
கடமைகளில்
என்னை
தொலைத்திருந்தேன்
எந்த துளை
வழியே- என்னுள்
வந்தாய்
எப்படி எனை - நீ
தின்றாய்
தெரியாமல்
வந்தேன் - என
அறியாமல்
சொல்வாயோ
தெரியாமல்
வருவதற்கு
என் இதயமென்ன
சத்திரமா?
அன்றி
(நான்) அறியாமல்
செல்வது தான்
சாத்தியமா?
புரியாமல்
கேட்கின்றேன்
புரிந்துதான்
சொல்வாயொ?
வேண்டாமடி
எள்ளாதே
எனை - நீ
தள்ளாதே
விழியாலே
கொல்லாதே
முகவரியின்றி
தவிக்கும்
மனிதன் போல்
எனை செய்யாதே
கற்சிலையான
என்னை
உயிர்ப்பித்தவளே
நீயே - என்
முதலும் முடிவும் ஆனாய்.
எனை மறந்து
வாழ்ந்திருந்தேன்
எதுவும்
எனக்கில்லை- என
துறவறம்
பூண்டிருந்தேன்
கடமைகளில்
என்னை
தொலைத்திருந்தேன்
எந்த துளை
வழியே- என்னுள்
வந்தாய்
எப்படி எனை - நீ
தின்றாய்
தெரியாமல்
வந்தேன் - என
அறியாமல்
சொல்வாயோ
தெரியாமல்
வருவதற்கு
என் இதயமென்ன
சத்திரமா?
அன்றி
(நான்) அறியாமல்
செல்வது தான்
சாத்தியமா?
புரியாமல்
கேட்கின்றேன்
புரிந்துதான்
சொல்வாயொ?
வேண்டாமடி
எள்ளாதே
எனை - நீ
தள்ளாதே
விழியாலே
கொல்லாதே
முகவரியின்றி
தவிக்கும்
மனிதன் போல்
எனை செய்யாதே
கற்சிலையான
என்னை
உயிர்ப்பித்தவளே
நீயே - என்
முதலும் முடிவும் ஆனாய்.