rambal
12-05-2003, 09:03 AM
அம்மா.. (500வது பதிப்பு)
உன் நியாபகப்பந்துகள்
தொண்டைக்குழி
வரை வந்து நலம்
விசாரித்துவிட்டுப் போகின்றன
புரையேறியபடி..
தலையில் தட்ட
உன் கைகள் தேடியே
அலுத்துக் கொள்கிறது
மனது...
பாழாய்ப்போன குளிர்
காற்றுக்காக
கம்பளி இழுத்துப்
போர்த்த
சடுதியில் வந்து போகிறாய்
பதட்ட முகத்துடன்
என் கண் முன்..
எப்போதாவது
என்னை இடறிவிட்டு
ஏளனத்தில் சிரிக்கும்
கல்லுக்கும்..
சமையலறையில்
கோபமாய்
வெடித்துச் சிதறும்
கடுகிற்கும்
பதிலாக உன்னைத்தான்
சொல்லியிருக்கிறேன்..
எப்போதாவது
மறக்கின்ற நேரத்தில்தான்
உனக்கான
தினமாக்கி
கொண்டாடுகிறேன்..
உன் நியாபகப்பந்துகள்
தொண்டைக்குழி
வரை வந்து நலம்
விசாரித்துவிட்டுப் போகின்றன
புரையேறியபடி..
தலையில் தட்ட
உன் கைகள் தேடியே
அலுத்துக் கொள்கிறது
மனது...
பாழாய்ப்போன குளிர்
காற்றுக்காக
கம்பளி இழுத்துப்
போர்த்த
சடுதியில் வந்து போகிறாய்
பதட்ட முகத்துடன்
என் கண் முன்..
எப்போதாவது
என்னை இடறிவிட்டு
ஏளனத்தில் சிரிக்கும்
கல்லுக்கும்..
சமையலறையில்
கோபமாய்
வெடித்துச் சிதறும்
கடுகிற்கும்
பதிலாக உன்னைத்தான்
சொல்லியிருக்கிறேன்..
எப்போதாவது
மறக்கின்ற நேரத்தில்தான்
உனக்கான
தினமாக்கி
கொண்டாடுகிறேன்..